எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, April 11, 2009

மழை கொட்டணுமா? நான் உதவிக்கு வரேன்!

உங்க ஊரிலே மழையே இல்லையா? உடனே அணுகவும், என்னை. நான் மனசாலே நினைச்சாலே போதும், வத்தல் போடவோ, வடாம் போடவோ. சுட்டெரிக்கும் சூரியனை மறைத்துக் கொண்டு எழுந்திருக்கும் மழை மேகங்கள். வாநிலை அறிக்கையே நம்மைக் கேட்கலாமானு யோசிக்கிறாங்க. ரெண்டு நாளா நினைச்சேன் குழம்பு கறிவடாம் செய்யலாமா? அப்படியே மழை வந்தாலும் அந்த மாவை வடையாத் தட்டிச் சாப்பிடலாம்னு. வங்கக் கடலின் ஏதோ ஒரு மூலையில் இருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்துக்குச் செய்தி போய், உடனேயே கடலோர மாவட்டங்களில் மழையைப் பொழிய வைத்து, என்னோட திட்டத்தைத் தள்ளிப் போட்டுவிட்டது. இனி மீண்டும் வெய்யில் சுட்டெரிக்கும்போது பார்ப்போம் அடுத்த திட்டத்துடன்.

No comments:

Post a Comment