எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, May 9, 2018

உணவே மருந்து! புதினா! 2

புதினா சட்னி! பொதுவா எங்க வீட்டில் அல்லது எல்லோர் வீட்டிலும் பச்சை மிளகாய் சேர்த்துச் செய்வதைச் சட்னி என்றும் மி.வத்தல் வறுத்து அரைத்துச் செய்வதைத் துவையல் என்றும் சொல்வார்கள். இப்போப் புதினாச் சட்னியைப் பார்ப்போம்.

புதினாச் சட்னிக்குத் தேவை ஒரு கட்டுப் புதினா. ஆய்ந்து தேவை எனில் பொடியாக நறுக்கிக் கழுவி வடிகட்டி வைக்கவும்.
பச்சை மிளகாய் நான்கு அல்லது ஐந்து அவரவர் தேவைக்கு ஏற்ப
புளி ஒரு சுண்டைக்காய் அளவுக்கு
உப்பு தேவைக்கு ஏற்ப

எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கடுகு தாளித்தால் புதினா சட்னி தயார். தோசை, சப்பாத்தி, சாட் போன்றவற்றில் சேர்க்கவும் நன்றாக இருக்கும்.

இன்னொரு முறை   புதினா சட்னி

அதே ஒரு கட்டுப் புதினாவுக்கு நான்கு பச்சை மிளகாய் ஒரு துண்டு இஞ்சி, ஒரு கரண்டி பொட்டுக்கடலை, உப்பு தேவைக்கு

இவை எல்லாவற்றையும் சேர்த்து அரைத்தால்  புதினாச் சட்னி வட இந்திய முறையில் தயாராகும். ஒரு சிலர் பொட்டுக்கடலை சேர்ப்பதில்லை. தாளிக்கவும் மாட்டார்கள். அது அவரவர் விருப்பம். பொதுவாகப் பெருங்காயம் இதற்குத் தேவை இல்லை. எனினும் விரும்பினால் சேர்க்கலாம்.

இப்போப் புதினாத் துவையல் பார்க்கலாமா?

பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள்: ஒரு கட்டு அல்லது இரண்டு கட்டுப் புதினா! ஐந்து அல்லது ஆறு மி.வத்தல். பெருங்காயம் ஒரு துண்டு  சுண்டைக்காய் அளவுப் புளியை நீரில் ஊற வைக்கவும். உப்பு தேவைக்கு. தாளிக்க கடுகு, உபருப்பு. தாளிக்க நல்லெண்ணெய் மற்றும் வதக்க நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

அடுப்பில் கடாயில் வாணலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி முதலில் பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும். பின்னர் தாளிக்கக் கொடுத்துள்ள கடுகு, உபருப்பை நன்கு வறுத்துத் தனியாக வைக்கவும். மிச்சம் உள்ள எண்ணெயில் மி.வத்தலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் ஆய்ந்து வைத்த புதினாவைப் போட்டு நன்கு வதக்கவும். வதங்கினால் ரொம்பக் கொஞ்சமாய் ஆயிடும். ஆகவே எத்தனை பேருக்குத் துவையல் என்பதை முடிவு செய்து கொண்டு அதற்கேற்றாற்போல் புதினாவைத் தயார் செய்யவும்.

எல்லாம் நன்கு ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும் மி.வத்தல், புளி, உப்புப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றியதும் பெருங்காயத்தையும் புதினாவையும் போட்டு அரைக்கவும். நன்கு அரைபட்டதும் எடுக்கும் முன்னர் தாளிதத்தைச் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றி உடனே எடுத்துவிடவும். கொஞ்சம் கொரகொரப்பாகவே இருக்கலாம். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு புதினாத் துவையல் சாதம் சாப்பிடலாம். தொட்டுக்க டாங்கர் பச்சடி! 

5 comments:

  1. புதினாத் துவையல் செய்திருக்கோம். சட்னி.... ஊ ....ஹூம்!

    ReplyDelete
  2. புதினா சட்னி - எனக்குப் பிடிக்காதே...

    ReplyDelete
  3. ஆனாலும் செய்முறை நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. அனைவருக்கும் நன்னி!

    ReplyDelete
  5. ஹை மிஸ்ஸிங். நன்னி ஹை

    ReplyDelete