எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, June 29, 2018

உணவே மருந்து! முள்ளங்கிக் கீரை!

Image result for முள்ளங்கிக்கீரை!

நன்றி கூகிளார்

முள்ளங்கியின் சிறப்பு மிகச் சிறப்பு! முக்கியமாய் நீரிழிவு உள்ளவர்களுக்கு அருமருந்தாகும். தினம் முள்ளங்கியை சாலடாகச் சாப்பிட்டு வரலாம். அல்லது சாறு பிழிந்து சாப்பிடலாம். வட மாநிலங்களில் முள்ளங்கி பயிராகும் பருவத்தில் பெரிய முள்ளங்கியை அப்படியே கடித்துச் சாப்பிடுவார்கள். போன புதுசிலே அதைப் பார்த்தால் ஆச்சரியமா இருக்கும். முள்ளங்கியை சாம்பார் தான் அதிகம் செய்து பார்த்திருக்கேன். அதுவுமே பிறந்த வீட்டில் அப்பாவுக்கு அந்த வாசனையே பிடிக்காது என்பதால் அவர் இல்லாத சமயங்களில் தான் அம்மா செய்வார். அப்புறமாக் கல்யாணம் ஆகி வந்தும் முள்ளங்கி சாம்பார் தான் செய்திருக்கேன். சொல்லப் போனால் இலையோடு முள்ளங்கியைப் பார்த்ததே இல்லை. முதல் முறையாக எழுபதுகளில் ராஜஸ்தான் போனப்போத் தான் முள்ளங்கியைக் கீரையோடு பார்த்தேன். வீட்டிலும் பயிராக்கினோம். கீரையைப் பயன்படுத்துவார்கள் என்பது தெரியாததால் சந்தையிலிருந்து முள்ளங்கி வாங்கி வரும்போதே கீரையை நறுக்கிவிட்டுத் தரச் சொல்லுவேன். அவங்க விசித்திரமாய்ப் பார்ப்பாங்க! பின்னர் தான் அதை வைத்துப் பல சமையல்கள் செய்யலாம் என்பதே புரிந்தது.

முள்ளங்கியில் ரொட்டி செய்வார்கள் என்பதும் அப்போது தான் புரிந்தது. முள்ளங்கிக்கீரை, கடுகுக்கீரை, ஸ்பினாச் எனப்படும் பாலக் மூன்றும் போட்டு சர்ஸோன் கா சாக் என்னும் உணவு தயாரிப்பார்கள். பெரும்பாலும் அதில் கடுகுக்கீரையே முக்கிய இடம் பெற்றாலும் சிலர் முள்ளங்கிக்கீரையையும் அதில் சேர்ப்பார்கள். கீரையைப் பொடியாக நறுக்கி வெங்காயம் தக்காளி போட்டு வதக்கிக் கூட்டுப் போல் பண்ணுவார்கள். கடலைமாவில் உப்பு, காரம், கரம் மசாலா போட்டு எண்ணெய், நீர் சேர்த்துப் பிசைந்து அதில் கீரையை நறுக்கிப் போட்டு பகோடா தயாரிப்பார்கள். ஆவியில் வேக வைத்து பருப்புசிலி போலும் பண்ணுவார்கள். பாலக் கீரை, வெந்தயக் கீரை, முள்ளங்கிக்கீரை எல்லாமும் சேர்த்துப் போட்டு பஜியா எனப்படும் தூள் பஜ்ஜி வட மாநிலங்களில் மிகப் பிரபலம்.

அதுக்கு மேலே காரட், முள்ளங்கித் துருவல் எலுமிச்சம்பழம் பிழிஞ்சு உப்புச் சேர்த்துக் கடுகு தாளித்துச் சேர்த்து பச்சை வெங்காயத்தையும் துருவிக் கொடுப்பார்கள். 50 கிராம் பஜியா சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும். இப்படி நாம் வேண்டாம் எனச் சொல்லும் கீரை வகைகள் நிறைய இருக்கு. எல்லாவற்றையும் வடக்கே பயன்பாட்டிலும் இருக்கு. வெந்தயக்கீரை கூட எனக்கு அங்கே போய்த் தான் தெரியும். கொஞ்சம் கசப்பு இருக்கும் என்பதால் நாம் தவிர்க்கிறோமோ என்னமோ! ஆனால் நாங்க பாகற்காய் கூடச் சாறு எடுத்துச் சாப்பிடுவதால் கசப்புத் தெரிவதில்லை. முள்ளங்கிக்கீரையைப் பாசிப்பருப்புப் போட்டு தேங்காய், ஜீரகம் அரைத்து விட்டுக் கூட்டாகவும் செய்யலாம்.மிளகு வறுத்து அரைத்துப்பொரிச்ச குழம்பும் பண்ணலாம். முள்ளங்கியின் பயன்களை முதலில் பார்த்துவிட்டுப் பின்னர் முள்ளங்கியிலிருந்து தயாரிக்கும் உணவு வகைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முக்கியமாய் வாதம் அதிகம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டாம். சிறுநீரகக் கற்கள் கரைய இது அருமருந்து. கால்சியம், இரும்பு, வைடமின் ஏ,பி,சி மற்றும் புரதச் சத்து இருப்பதால் சிறு குழந்தைகளுக்கு ஒரு முள்ளங்கி வில்லையை வேக வைத்து நன்கு பருப்பு சாதத்தோடு மசித்துக்கொடுக்கலாம். அதோடு இது விலை எப்போவும் உயராது! விலை குறைவாகவே இருக்கும். 

10 comments:

  1. முள்ளங்கி சாப்பிட்டிருக்கேன். சாப்பிடுவேன். முள்ளங்கி கீரை? ஊ....ஹூம்!

    ReplyDelete
    Replies
    1. @ ஶ்ரீராம், சென்னையில் எல்லா இடங்களிலும் கீரையோடு முள்ளங்கி கிடைப்பதில்லை, கிடைத்தாலும் நரம்பு தடியாக இருக்கும். ஆகவே கொஞ்சம் கஷ்டம் தான்! :)

      Delete
  2. எப்போதும் முள்ளங்கி வாங்கும்போது (பஹ்ரைனில்) இலையை எடுத்துவிடச் சொல்லுவேன். இங்க, இலையோடு பார்த்ததே இல்லை.

    முள்ளங்கி இலைக்கு இத்தனை உபயோகம் இருக்கா?

    முள்ளங்கி - சாம்பார் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதன் வாசனைக்காக.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. இன்னிக்கு முள்ளங்கி+சி.வெ. போட்டு சாம்பார் இட்லிக்கு. :)))) இலையும் பின்னாட்களில் தான் சமைக்க ஆரம்பித்தேன். இப்போ ஒருவாரமாக முருங்கைக்கீரையும் சிறுகீரையும் ஓடிக் கொண்டிருக்கு! :)

      Delete
  3. தில்லி வந்த பிறகு தான் எனக்கும் தெரிந்தது. நானும் பயன்படுத்தும் ஒரு கீரை. உடம்புக்கு நல்லது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட். அடிக்கடி பயன்படுத்துவது ரொம்பவே நல்லது.

      Delete
  4. அக்கா பூஸார் தான் எனக்கு இலையோடு கேரட் ,முள்ளங்கி ,turnip எல்லாத்தையும் பொரியல் செய்ய ஐடியா தந்தது நான் தேங்கா போட்டு செய்வேன் ருசியும் நல்லாவே இருக்கு .தனியா இலைகளை சமைச்சா அத்துடனேதான் காய்களை கால் பங்கு சேர்ப்பேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல்!இன்னிக்கு முருங்கைக்கீரை+பாசிப்பருப்பு+தேங்காய் சேர்த்துப் பொரியல்/கறி தான் பண்ணினேன். இலைகள் எல்லாம் உடம்புக்கு ரொம்ப நல்லதாச்சே! நான் காய்களைத் தனியாச் சமைப்பேன். பொதுவாக் கீரை சமைச்சா அதோடு கூட ஏதானும் சாலட்! அல்லது வெள்ளரிக்காய்ப்பச்சடி எனச் செய்வேன். அநேகமா சாலட் தான் ஒத்துப்போகும்.

      Delete
  5. மூலி சப்ஜி என்று கீரையை சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக சமைப்பது உண்டு. நரம்பை உருவிவிட்டு பொடியாக நறுக்கி பாசிப்பருப்பு தேங்காய்த்துருவல் போட்டுப் பொரியல் செய்ததுண்டு. சிறிது கார்ப்புச் சுவையுடன் அசத்தலாக இருக்கும் முள்ளங்கிக்கீரை. வத்தக் குழம்புக்கு நல்ல காம்பினேஷன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தேனம்மை, திடீர்னு நேத்திக்கு எல்லா வீட்டுக்கும் போய் ஓர் கலக்கு கலக்கிட்டீங்க! :) கீரையையும் சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாச் செய்யலாம். முள்ளங்கியையும் செய்யலாம்.

      Delete