சொஜ்ஜி அப்பம்: சொஜ்ஜி அப்பம்னா என்னனு கேட்காதீங்க. சொஜ்ஜி அப்பம் இரண்டு முறைகளில் செய்யலாம். ஒண்ணு வெல்லம் போட்டுச் செய்வது; இன்னொண்ணு சர்க்கரை போட்டுச் செய்வது. அதே போல் ஒண்ணு போளி போல் தட்டித் தோசைக்கல்லில் போட்டு எடுப்பது. இன்னொண்ணு எண்ணெயில் பொரித்து எடுப்பது. எண்ணெயில் பொரித்து எடுக்கும் சொஜ்ஜி அப்பங்களானாலும், போளி மாதிரி தட்டினாலும் மூன்று நாட்கள் வரை வைச்சுச் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்: ரவை 200 கிராம், வெல்லம் பாகு தூள் செய்தது 200 கிராம். ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன். நெய் குறைந்தது 100 கிராம், முந்திரிப்பருப்பு(தேவையானால்) வேக வைக்க நீர் தேவையான அளவுக்கு.
மேல் மாவுக்கு: பொடி ரவை 50 கிராம், மைதா 200 கிராம், உப்பு அரை டீஸ்பூன், வெண்ணெய் அல்லது நெய் இரண்டு டேபிள் ஸ்பூன். கலந்து பிசைய நீர் தேவையான அளவு.
முதலில் மாவைப் பிசைந்து ஊற வைக்கலாம். ரவையையும், மைதாவையும் ஒன்றாய்க் கலந்து கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய்யைப் போட்டு உப்புச் சேர்ந்து நன்கு குழைக்கவும். ஐந்து நிமிடங்கள் போல் விடாமல் குழைத்துவிட்டுப் பின்னர் ரவை, மைதா கலந்த கலவையைப் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் அந்த நெய்யோடு ரவை, மைதா நன்கு கலக்கும்படி கலக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டுப் பிசையவும். தேவை எனில் மீதம் உள்ள நெய்யைச் சேர்க்கலாம். ரொம்பவே நெய் அல்லது வெண்ணெய் சேர்த்தால் பொரிக்கையில் அல்லது தோசைக்கல்லில் போடுகையில் உதிர்ந்துவிடும் என்பதால் தேவை எனத் தெரிந்தால் மட்டுமே சேர்க்கவும். நன்கு சப்பாத்தி மாவு பதத்துக்கு வந்ததும், நல்லெண்ணெய் விட்டு மூடி வைக்கவும். இது வெள்ளையாக இருக்கலாம் எனில் மஞ்சள் தூள் சேர்க்கவேண்டாம். கலர் வேண்டுமென்றால் மாவு பிசைகையிலேயே ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கலாம். இது அவரவர் விருப்பம்.
வாணலியை அடுப்பில் ஏற்றிக் கொள்ளவும். இன்னொரு பக்கம் வேறொரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும். அடுப்புத் தணித்து வைத்து நீர் சூடாகவே இருக்கட்டும். அடுப்பில் ஏற்றிய வாணலியில் எடுத்துக் கொண்டிருக்கும் நெய்யில் பாதியை ஊற்றி ரவையைப் போட்டு நன்கு வறுக்கவும். ரவை நன்கு சிவக்க வறுபட்டதும் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிக் கிளறவும். ரவை நன்கு வெந்து வரும் சமயத்தில் வெல்லத் தூளைச் சேர்க்கவும். வெல்லத் தூளைச் சேர்க்கையில் கொஞ்சம் நீர் விட்டுக் கொள்ளும். பயப்பட வேண்டாம். கிளறிக் கொண்டே இருக்கவும். மிச்சம் இருக்கும் நெய்யைத் தேவையானால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். நன்கு சுருண்டு வருகையில் அடுப்பை அணைத்துக் கீழே இறக்கி ஏலக்காய்ப் பொடியைத் தூவி முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும். நன்கு ஆற வைக்கவும். ஆறியதும் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
சப்பாத்திப் பலகையில் பிசைந்து வைத்துள்ள மாவில் ஒரு சின்ன உருண்டை எடுத்துக் கொண்டு பூரி அல்லது சப்பாத்தி அளவுக்கு இட்டுக் கொள்ளவும். உருட்டிய சொஜ்ஜி உருண்டைகளில் ஒன்றை அதில் வைத்து மூடவும். நன்கு மூடியதும் ,எண்ணெய் அல்லது நெய்யைத் தொட்டுக் கொண்டு அதிரசம் போல் தட்டவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து தட்டிய சொஜ்ஜி அப்பத்தைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
போளி மாதிரித் தட்டி தோசைக்கல்லில் போட்டு எடுக்கும் முறையில் மேற்கூறியது போல் செய்து கடைசியில் எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும். ஆனால் பொரித்து எடுக்கும் சொஜ்ஜி அப்பங்களே சுவையாக இருக்கும்.
இதை வெல்லம் சேர்க்காமல் சர்க்கரை சேர்த்தும் மேற்கூறிய மாதிரிச் செய்யலாம். பொதுவாக சுமங்கலிப் பிரார்த்தனை போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்குச் செய்கையில் வெல்லம் சேர்த்துச் செய்வார்கள். மற்றச் சாதாரண நாட்களில் சர்க்கரை சேர்த்துச் செய்வார்கள். அடுத்துச் சில போளி வகைகள் பார்க்கலாம்.
எச்சரிக்கை
படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
Monday, April 2, 2012
Thursday, March 29, 2012
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இப்போப் பச்சை மிளகாயில் தொக்குப் போடலாமா? ஹிஹிஹி, ஸ்ரீராம் புளி மிளகாய் கேட்டேனேனு நறநறப்பது தெரியுது. அதுக்கும் வரேன்.
நல்ல பிஞ்சு மிளகாய் கால் கிலோ வாங்கிக்குங்க. இதுக்குக் குறைந்தது 50 கிராம் புளி தேவை. உப்பு தேவையான அளவு, தாளிக்க நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், மஞ்சள் தூள், பெருங்காயம். புளியைக் கரைத்துக் கெட்டியாக எடுத்துக்கொள்ளவும். கால் கிலோ பச்சை மிளகாய்க்குத் தகுந்த புளிப்பு தேவை என்பதால் 50 கிராம் போதவில்லை போல் தோன்றினால் இன்னும் கொஞ்சம் கரைத்துக்கொள்ளலாம். பச்சை மிளகாயைக் கழுவிக் காம்பை நீக்கிக் கொண்டு கீறி வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கல்சட்டி அல்லது வாணலியை ஏற்றிக் கொண்டு காய்ந்ததும் நல்லெண்ணெய் விடவும். எண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்துக் கொண்டு கீறிய பச்சை மிளகாயைப் போட்டு மஞ்சள் பொடியும் சேர்த்து வதக்கவும். இந்த நெடி ஒத்துக்காத என் போன்றோர் மூக்கு மூடி போட்டுக் கொண்டு வதக்கவும். அப்படியும் விடாமல் இருமுறை, மும்முறை தும்மினால் சரியாயிடும். அப்போத் தான் அக்கம்பக்கம் எல்லாம் நீங்க புளி மிளகாய் போடறது தெரியவரும். இதைப் புளிமிளகாய்த் தண்ணீர்னும் சொல்வாங்க.
அப்புறமாப் புளி ஜலத்தைச் சேர்க்கவும். உப்புப் போட்டுக் கொதிக்க விடவும். புளி ஜலம் நன்கு கொதித்துக் கெட்டியானதும் கீழே இறக்கவும். அன்றே அரைத்து அன்றே வார்க்கும் புளியா தோசை எனப்படும் கல் தோசைக்கு நல்ல காம்பினேஷன் இந்தப் புளிப்பும் காரமும் சேர்ந்த சுவையான புளிமிளகாய்.
அடுத்து மிளகாய்த் தொக்கு:
தேவையான பொருட்கள்: கால் கிலோ பச்சை மிளகாய், தேவையான உப்பு, புளி 50 கிராம், வதக்க 200 கிராம் நல்லெண்ணெய், பெருங்காயம் ஒரு துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு. வெல்லத்தூள் 50 கிராம்
முதலில் மிளகாயைக் கழுவிச் சுத்தம் செய்துவிட்டுப் பின்னர் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டு நன்கு சுருள வதக்கவும். வதக்கிய மிளகாயை ஆற வைத்துவிட்டுப் பின்னர் உப்பு, புளி சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். இப்போல்லாம் மிக்சி. முன்னெல்லாம் கல்லுரல் இல்லைனா அம்மியில் அரைக்கணும். கை போயிடும். அரைத்த விழுதை எடுத்துக்கொண்டு, ஒரு வாணலி அல்லது கல்சட்டியில் மிச்சம் உள்ள நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டுக் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பெருங்காயம் சேர்க்கவும். அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறவும். பச்சையாக இருக்கும் அதன் நிறம் மாறி எண்ணெய் பிரிய ஆரம்பிக்கையில் வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் நன்கு சேர்ந்து கிளறியதும் உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி ஆற வைத்து நன்கு அலம்பிய கண்ணாடி பாட்டிலில் அல்லது ஏதேனும் பீங்கான் பாத்திரத்தில் போட்டுப் பயன்படுத்தவும். இதுவும் தோசை, சப்பாத்தி, மோர்சாதம் போன்றவற்றிற்குத் துணையாக நன்கு ருசியாக இருக்கும்.
நல்ல பிஞ்சு மிளகாய் கால் கிலோ வாங்கிக்குங்க. இதுக்குக் குறைந்தது 50 கிராம் புளி தேவை. உப்பு தேவையான அளவு, தாளிக்க நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், மஞ்சள் தூள், பெருங்காயம். புளியைக் கரைத்துக் கெட்டியாக எடுத்துக்கொள்ளவும். கால் கிலோ பச்சை மிளகாய்க்குத் தகுந்த புளிப்பு தேவை என்பதால் 50 கிராம் போதவில்லை போல் தோன்றினால் இன்னும் கொஞ்சம் கரைத்துக்கொள்ளலாம். பச்சை மிளகாயைக் கழுவிக் காம்பை நீக்கிக் கொண்டு கீறி வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கல்சட்டி அல்லது வாணலியை ஏற்றிக் கொண்டு காய்ந்ததும் நல்லெண்ணெய் விடவும். எண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்துக் கொண்டு கீறிய பச்சை மிளகாயைப் போட்டு மஞ்சள் பொடியும் சேர்த்து வதக்கவும். இந்த நெடி ஒத்துக்காத என் போன்றோர் மூக்கு மூடி போட்டுக் கொண்டு வதக்கவும். அப்படியும் விடாமல் இருமுறை, மும்முறை தும்மினால் சரியாயிடும். அப்போத் தான் அக்கம்பக்கம் எல்லாம் நீங்க புளி மிளகாய் போடறது தெரியவரும். இதைப் புளிமிளகாய்த் தண்ணீர்னும் சொல்வாங்க.
அப்புறமாப் புளி ஜலத்தைச் சேர்க்கவும். உப்புப் போட்டுக் கொதிக்க விடவும். புளி ஜலம் நன்கு கொதித்துக் கெட்டியானதும் கீழே இறக்கவும். அன்றே அரைத்து அன்றே வார்க்கும் புளியா தோசை எனப்படும் கல் தோசைக்கு நல்ல காம்பினேஷன் இந்தப் புளிப்பும் காரமும் சேர்ந்த சுவையான புளிமிளகாய்.
அடுத்து மிளகாய்த் தொக்கு:
தேவையான பொருட்கள்: கால் கிலோ பச்சை மிளகாய், தேவையான உப்பு, புளி 50 கிராம், வதக்க 200 கிராம் நல்லெண்ணெய், பெருங்காயம் ஒரு துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு. வெல்லத்தூள் 50 கிராம்
முதலில் மிளகாயைக் கழுவிச் சுத்தம் செய்துவிட்டுப் பின்னர் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டு நன்கு சுருள வதக்கவும். வதக்கிய மிளகாயை ஆற வைத்துவிட்டுப் பின்னர் உப்பு, புளி சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். இப்போல்லாம் மிக்சி. முன்னெல்லாம் கல்லுரல் இல்லைனா அம்மியில் அரைக்கணும். கை போயிடும். அரைத்த விழுதை எடுத்துக்கொண்டு, ஒரு வாணலி அல்லது கல்சட்டியில் மிச்சம் உள்ள நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டுக் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பெருங்காயம் சேர்க்கவும். அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறவும். பச்சையாக இருக்கும் அதன் நிறம் மாறி எண்ணெய் பிரிய ஆரம்பிக்கையில் வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் நன்கு சேர்ந்து கிளறியதும் உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி ஆற வைத்து நன்கு அலம்பிய கண்ணாடி பாட்டிலில் அல்லது ஏதேனும் பீங்கான் பாத்திரத்தில் போட்டுப் பயன்படுத்தவும். இதுவும் தோசை, சப்பாத்தி, மோர்சாதம் போன்றவற்றிற்குத் துணையாக நன்கு ருசியாக இருக்கும்.
Wednesday, March 28, 2012
கத்தரிக்காய்ப் பிரியர்களே, வாங்க, சாப்பிடலாம்!
கத்தரிக்காய் சாதம்: நானும் இது போணியாகறதுக்காகப் பொண்ணு, பையர் ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லிப் பார்த்தேன். கத்திரிக்காய்ப் பிரியர்களான அவங்க ரெண்டு பேரும் கத்திரிக்காய் சாதமா? போர்னு சொல்லி என் மனசை உடைச்சுட்டாங்க. வேறே வழியில்லாமல் பேசாமல் இருந்துட்டேன். இப்போ ஸ்ரீராம் கேட்டதும் கொஞ்சம் சாந்தி கிடைச்சது.
நான்கு பேருக்குத் தேவையான அளவு பொருட்கள்:
அரிசி பாஸ்மதி அல்லது நல்ல பழைய அரிசி ஒரு கிண்ணம். நன்கு உதிர் உதிராக வேக வைத்துக் கொண்டு அரை ஸ்பூன் உப்புச் சேர்த்து நெய் ஊற்றி ஆற வைக்கவும்.
கத்தரிக்காய் அரைகிலோ ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கழுவி நீள வாட்டில் வெட்டிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடிதடவி வைக்கவும்.
மிளகாய் வற்றல் 8ல் இருந்து 10 வரை
தனியா/கொத்துமல்லி விதை மூன்று டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு அரை டீஸ்பூன்
வெந்தயம் அரை டீஸ்பூன்
கொப்பரைத் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்
எள்(வெள்ளை) இரண்டு டீஸ்பூன்
இலவங்கப் பட்டை ஒரு துண்டு
ஏலக்காய் பெரியது இரண்டு
சோம்பு இரண்டு டீஸ்பூன்
மராட்டி மொக்கு கொஞ்சம்
உப்பு தேவையான அளவு, புளி கரைத்த நீர் ஒரு சின்னக் கிண்ணம், வெல்லம் ஒரு சிறு துண்டு.
மஞ்சள் பொடி ஒரு சின்ன ஸ்பூன்
2 வெங்காயம் நீளமாக நறுக்கியது
தாளிக்க எண்ணெய், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை
மசாலா சாமான்கள் எல்லாவற்றையும் எண்ணெய் விட்டு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிதம் பிடிக்குமெனில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். இது தேவையில்லை எனில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய கத்தரிக்காய்களைச் சேர்த்துக் கொண்டு, சற்று வதக்கிப் பின்னர் புளிக்கரைசலைச் சேர்க்கவும். தேவையான உப்பைப் போடவும். கத்தரிக்காய் நன்கு வதங்கியதும், மசாலாப் பொடி, வெல்லத் தூள் சேர்க்கவும். சாதத்தில் கொட்டிக் கிளறவும். சற்று நேரம் சாதத்தோடு ஊறவிட்டுப் பின்னர் காரட் தயிர்ப்பச்சடி, அல்லது வெள்ளரிக்காய்ப் பச்சடி அல்லது வெங்காயப் பச்சடியோடு பரிமாறவும்.
நான்கு பேருக்குத் தேவையான அளவு பொருட்கள்:
அரிசி பாஸ்மதி அல்லது நல்ல பழைய அரிசி ஒரு கிண்ணம். நன்கு உதிர் உதிராக வேக வைத்துக் கொண்டு அரை ஸ்பூன் உப்புச் சேர்த்து நெய் ஊற்றி ஆற வைக்கவும்.
கத்தரிக்காய் அரைகிலோ ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கழுவி நீள வாட்டில் வெட்டிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடிதடவி வைக்கவும்.
மிளகாய் வற்றல் 8ல் இருந்து 10 வரை
தனியா/கொத்துமல்லி விதை மூன்று டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு அரை டீஸ்பூன்
வெந்தயம் அரை டீஸ்பூன்
கொப்பரைத் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்
எள்(வெள்ளை) இரண்டு டீஸ்பூன்
இலவங்கப் பட்டை ஒரு துண்டு
ஏலக்காய் பெரியது இரண்டு
சோம்பு இரண்டு டீஸ்பூன்
மராட்டி மொக்கு கொஞ்சம்
உப்பு தேவையான அளவு, புளி கரைத்த நீர் ஒரு சின்னக் கிண்ணம், வெல்லம் ஒரு சிறு துண்டு.
மஞ்சள் பொடி ஒரு சின்ன ஸ்பூன்
2 வெங்காயம் நீளமாக நறுக்கியது
தாளிக்க எண்ணெய், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை
மசாலா சாமான்கள் எல்லாவற்றையும் எண்ணெய் விட்டு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிதம் பிடிக்குமெனில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். இது தேவையில்லை எனில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய கத்தரிக்காய்களைச் சேர்த்துக் கொண்டு, சற்று வதக்கிப் பின்னர் புளிக்கரைசலைச் சேர்க்கவும். தேவையான உப்பைப் போடவும். கத்தரிக்காய் நன்கு வதங்கியதும், மசாலாப் பொடி, வெல்லத் தூள் சேர்க்கவும். சாதத்தில் கொட்டிக் கிளறவும். சற்று நேரம் சாதத்தோடு ஊறவிட்டுப் பின்னர் காரட் தயிர்ப்பச்சடி, அல்லது வெள்ளரிக்காய்ப் பச்சடி அல்லது வெங்காயப் பச்சடியோடு பரிமாறவும்.
சாலட் வகைகள்---தொடர்ச்சி.
வெள்ளரிக்காய் சாலட்: நல்ல பிஞ்சு வெள்ளரிக்காய் 2, தக்காளி சிவப்பாகப் பழுத்தது ஒன்று, வெங்காயம் ஒன்று. வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன், மிளகுத் தூள், உப்பு, பெருங்காயத் தூள், பச்சைக் கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன். எலுமிச்சைச் சாறு அரை மூடி, சர்க்கரை ஒரு டீஸ்பூன்.
வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் சேர்க்கவும். வேர்க்கடலையை வறுத்துச் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறைச் சேர்த்துக் கொண்டு பச்சைக் கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.
வெள்ளரிக்காய்க்குப் பதிலாக வெள்ளை முள்ளங்கி, பப்பாளிக்காய் போன்றவற்றை வைத்தும் மேற்சொன்ன முறையில் சாலட் செய்யலாம். அடுத்துப் பார்க்கப் போவது பாஸ்தா சாலட்.
இதற்குப் பாஸ்தா ஒரு பாக்கெட் வேண்டும். காரட், வெங்காயம், குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது, உப்பு, சர்க்கரை, முட்டைக்கோஸ் பொடிப் பொடியாக நறுக்கியது. தாளிக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், சாலட் ஆயில் ஒரு டேபிள் ஸ்பூன்.(தேவையானால், நான் சேர்ப்பதில்லை)
பாஸ்தாவை நன்கு கழுவி வெந்நீரில் மெதுவாக ஆகும் வரை வேக வைத்துப் பின் குளிர்ந்த நீரில் போட்டு வடிகட்டி வைக்கவும். அடுப்பில் சமையல் எண்ணெய் ஊற்றிக்கொண்டு பச்சைமிளகாய், இஞ்சி விழுதைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை கிளறிவிட்டுப் பின் அடுப்பை அணைத்துக்கொண்டு முதலில் முட்டைக்கோஸைப்போட்டுக் கிளறிப் பின்னர் காரட், வெங்காயம், குடமிளகாய், தக்காளி சேர்த்துக்கொண்டு உப்பு, சர்க்கரை சேர்க்கவும். பின்னர் ஆற வைத்த பாஸ்தாவைச் சேர்க்கவும். தேவை எனில் சாலட் ஆயில் விட்டுக் கிளறி வைக்கவும். இது குளிர்ந்தாலும் சாப்பிடச் சுவையாக இருக்கும். எல்லாருக்கும் பிடிக்குமானு தெரியலை.
வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் சேர்க்கவும். வேர்க்கடலையை வறுத்துச் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறைச் சேர்த்துக் கொண்டு பச்சைக் கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.
வெள்ளரிக்காய்க்குப் பதிலாக வெள்ளை முள்ளங்கி, பப்பாளிக்காய் போன்றவற்றை வைத்தும் மேற்சொன்ன முறையில் சாலட் செய்யலாம். அடுத்துப் பார்க்கப் போவது பாஸ்தா சாலட்.
இதற்குப் பாஸ்தா ஒரு பாக்கெட் வேண்டும். காரட், வெங்காயம், குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது, உப்பு, சர்க்கரை, முட்டைக்கோஸ் பொடிப் பொடியாக நறுக்கியது. தாளிக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், சாலட் ஆயில் ஒரு டேபிள் ஸ்பூன்.(தேவையானால், நான் சேர்ப்பதில்லை)
பாஸ்தாவை நன்கு கழுவி வெந்நீரில் மெதுவாக ஆகும் வரை வேக வைத்துப் பின் குளிர்ந்த நீரில் போட்டு வடிகட்டி வைக்கவும். அடுப்பில் சமையல் எண்ணெய் ஊற்றிக்கொண்டு பச்சைமிளகாய், இஞ்சி விழுதைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை கிளறிவிட்டுப் பின் அடுப்பை அணைத்துக்கொண்டு முதலில் முட்டைக்கோஸைப்போட்டுக் கிளறிப் பின்னர் காரட், வெங்காயம், குடமிளகாய், தக்காளி சேர்த்துக்கொண்டு உப்பு, சர்க்கரை சேர்க்கவும். பின்னர் ஆற வைத்த பாஸ்தாவைச் சேர்க்கவும். தேவை எனில் சாலட் ஆயில் விட்டுக் கிளறி வைக்கவும். இது குளிர்ந்தாலும் சாப்பிடச் சுவையாக இருக்கும். எல்லாருக்கும் பிடிக்குமானு தெரியலை.
Friday, March 2, 2012
வாழைத்தண்டில் சாலட் சாப்பிட வாருங்கள்
ஶ்ரீராம் வாங்கி பாத் பத்திக் கேட்டிருக்கார். அதை எழுதும் முன்னர் ஒரு சில சாலட் வகைகளைப் பார்ப்போம். நான் சொல்லப்போவது எல்லாமே மிக எளிமையாகத் தயாரிக்கக்கூடியவையே. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே தயாரிக்கலாம். சாலட் ஆயில் அல்லது சீஸ் அல்லது மயோனைஸ், வித விதமான சாஸ் என எதுவும் தேவையில்லை. அதெல்லாம் இல்லாமலேயே வெறும் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், உப்பு, பச்சைக்கொத்துமல்லி இருந்தால் போதுமானது. முதலில் வாழைத்தண்டு சாலட்.
வாழைத்தண்டைக் கறியாகவோ அல்லது கூட்டாகவோ சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர்கள் ஒரு முறை அதைப் பொடிப் பொடியாக நறுக்கித் தயிரில் சேர்த்துக் கடுகு, ப.மி. பெருங்காயம் தாளித்து உப்புச் சேர்த்துப் பச்சடியாகச் சாப்பிட்டலாம். இம்முறையில் வாழைத்தண்டின் பயன்களை உடனடியாகப் பெறலாம்.
அடுத்து சாலட்.
தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு, பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு. மிளகுத் தூள் கால் டீஸ்பூன் அல்லது ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூன் தாளிக்க கடுகு, பச்சைக் கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன். பாசிப்பருப்பைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும்.
நல்ல மொந்தன் வாழைத்தண்டாகவும் அடித்தண்டாகவும் இருந்தால் நல்லாத் தான் இருக்கும். மார்க்கெட்டில் கிடைப்பதைத் தானே வாங்க முடியும்ங்கறீங்களா? சரி, வாங்கினதை நன்றாகத் தோல் சீவிக் கொண்டு மெலிதாக வட்டமாக நறுக்கி நாரையெல்லாம் பிரித்து எடுத்து விடவும். (டிப்ஸ்: வாழைத்தண்டு நாரைச் சேர்த்து வைத்துக்கொண்டால் சுவாமி விளக்குத் திரியாகப் பயன்படுத்தலாம்.) வட்டமாக நறுக்கிய வில்லைகளை நன்கு பொடிப்பொடியாக நறுக்கிக் கொண்டு பாசிப்பருப்போடு சேர்க்கவும். இஞ்சியைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
கவனிக்கவும்: இஞ்சியைத் தோல் சீவிப் பயன்படுத்துங்கள். சுக்கைத் தோலோடு பொடி செய்யுங்கள். அதன் பலன் அப்போது தான் முழுமையாகக் கிடைக்கும். அதோடு இரவில் இஞ்சி, சுக்கு வேண்டாம். கடுக்காய் தான் படுக்கப் போகையில் சாப்பிடலாம்.
நறுக்கியவற்றில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறைச் சேர்த்துக் கலக்கிவிட்டுக் கடுகு தாளித்துக்கொண்டு விருப்பமெனில் பெருங்காயத் தூள் சேர்க்கவும். பச்சைக் கொத்துமல்லியால் அலங்கரித்து அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம்.
வாழைத்தண்டைக் கறியாகவோ அல்லது கூட்டாகவோ சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர்கள் ஒரு முறை அதைப் பொடிப் பொடியாக நறுக்கித் தயிரில் சேர்த்துக் கடுகு, ப.மி. பெருங்காயம் தாளித்து உப்புச் சேர்த்துப் பச்சடியாகச் சாப்பிட்டலாம். இம்முறையில் வாழைத்தண்டின் பயன்களை உடனடியாகப் பெறலாம்.
அடுத்து சாலட்.
தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு, பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு. மிளகுத் தூள் கால் டீஸ்பூன் அல்லது ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூன் தாளிக்க கடுகு, பச்சைக் கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன். பாசிப்பருப்பைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும்.
நல்ல மொந்தன் வாழைத்தண்டாகவும் அடித்தண்டாகவும் இருந்தால் நல்லாத் தான் இருக்கும். மார்க்கெட்டில் கிடைப்பதைத் தானே வாங்க முடியும்ங்கறீங்களா? சரி, வாங்கினதை நன்றாகத் தோல் சீவிக் கொண்டு மெலிதாக வட்டமாக நறுக்கி நாரையெல்லாம் பிரித்து எடுத்து விடவும். (டிப்ஸ்: வாழைத்தண்டு நாரைச் சேர்த்து வைத்துக்கொண்டால் சுவாமி விளக்குத் திரியாகப் பயன்படுத்தலாம்.) வட்டமாக நறுக்கிய வில்லைகளை நன்கு பொடிப்பொடியாக நறுக்கிக் கொண்டு பாசிப்பருப்போடு சேர்க்கவும். இஞ்சியைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
கவனிக்கவும்: இஞ்சியைத் தோல் சீவிப் பயன்படுத்துங்கள். சுக்கைத் தோலோடு பொடி செய்யுங்கள். அதன் பலன் அப்போது தான் முழுமையாகக் கிடைக்கும். அதோடு இரவில் இஞ்சி, சுக்கு வேண்டாம். கடுக்காய் தான் படுக்கப் போகையில் சாப்பிடலாம்.
நறுக்கியவற்றில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறைச் சேர்த்துக் கலக்கிவிட்டுக் கடுகு தாளித்துக்கொண்டு விருப்பமெனில் பெருங்காயத் தூள் சேர்க்கவும். பச்சைக் கொத்துமல்லியால் அலங்கரித்து அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம்.
Friday, February 24, 2012
நீங்க மதுரையா, தஞ்சாவூரா? ரசவாங்கி சாப்பிட வாங்க!
மதுரைக்காரங்க ரசவாங்கின்னா கத்தரிக்காயில் மட்டும் செய்வதைச் சொல்வாங்க. முழுசாய்ப் போட்டுச் செய்யணும். ஆனால் மதுரையை விட்டு அந்தண்டை போனால் கூட்டு வகைகளே ரசவாங்கினு சொல்றாங்க. இன்னும் சிலர் வெங்காயம் எல்லாம் சேர்த்துச் செய்யறாங்க. அதெல்லாம் ரசவாங்கியே இல்லை. இதோ ஒரு பாரம்பரிய ஒரிஜினல் அசல் ரசவாங்கி கீழே இருக்குப் பாருங்க. அதுக்கும் கீழே பார்த்தாத் தஞ்சை மாவட்டங்களில் செய்யப்படும் கூட்டு ரசவாங்கி என்ற பெயரில் அழைப்பதையும் கொடுத்திருக்கேன். முயன்று பாருங்க.
கத்தரிக்காய் பிடிக்குமெனில் குறைந்தது கால் கிலோவுக்குக் குறையாமல் வேண்டும். சின்னதாய் ஒரே மாதிரியாக இருத்தல் நலம். நன்கு கழுவிவிட்டுக் காம்பை முழுதும் நறுக்காமல் கொஞ்சம் போல் அரை இஞ்ச் நறுக்கிவிட்டுக் கத்தரிக்காயை நான்காக நறுக்கிக் கொள்ளவும். காம்போடு இருக்குமாதலால் காய் அப்படியே முழுதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: புளி ஒரு எலுமிச்சம்பழம் அளவு. நீர் விட்டுக் கரைத்து வடிகட்டி வைக்கவும். உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து வைக்கவும். துவரம்பருப்பு ஐம்பது கிராம் நன்கு குழைய வேக விட்டு வைக்கவும்.
வறுத்து அரைக்க: மிவத்தல் எட்டு, தனியா 50 கிராம், மஞ்சள் தூள், பெருங்காயம், கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், உ.பருப்பு ஒரு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன். தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு சுவைக்கு ஏற்ப. எண்ணெய், தேவையான அளவு வறுக்க, தாளிக்க. கடுகு, கருகப்பிலை, மி.வத்தல், ப.மிளகாய் ஒன்று.காரம் தேவை எனில் மிளகு இரண்டு டீஸ்பூனாக வைத்துக்கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் வறுத்து அரைக்கவும். கொஞ்சம் பொடியைத் தனியாக வைத்துவிட்டு மிச்சப் பொடியை அலம்பி நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயில் ஒரே சீராக அடைத்து வைத்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும்.
அடுப்பில் உருளி அல்லது வாணலியை ஏற்றி எண்ணெய் ஊற்றி விட்டுக் கடுகு போட்டுத் தாளிக்கவும். கருகப்பிலை, மி.வத்தல் ஒன்று, ப.மிளகாய் ஒன்று இரண்டாய்க் கிள்ளிச் சேர்க்கவும். பெருங்காயம் சேர்த்துக்கொண்டு அடைத்து வைத்துள்ள கத்தரிக்காய்களைப் போட்டுச் சற்று நேரம் வதக்கவும். மூடி வைத்துச் சிறிது நேரம் வதக்கிவிட்டுப் புளி ஜலம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைத்ததை அதிலே சேர்க்கவும். சாம்பார் போல ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல், ரசம் மாதிரி நீர்க்கவும் இல்லாமல் நிதானமாகப் புளி கரைத்தது இருத்தல் நலம். புளி வாசனை போகக் கொதித்ததும், வேக வைத்துள்ள துவரம்பருப்பில் நீர் 200 கிராமுக்குக் குறையாமல் ஊற்றிக் கரைத்துக்கொண்டு அதைக் கொதிக்கும் கலவையில் ஊற்றவும். நன்கு பொங்கி வருகையில் கீழே இறக்கி வைத்து மிச்சம் எடுத்து வைத்துள்ள பொடியைப் போட்டுக் கலக்கவும். இது கத்தரிக்காயில் மட்டுமே செய்யப் படும் ரசவாங்கி. இதிலேயே கத்தரிக்காய்களும் நிறையச் சேர்க்கப் படுவதால், சாம்பார் என்று ஒன்று தனியாக வைக்காமல் ரசமும் வைக்காமல் சாப்பிடப் பிடிக்கும் எனில் அப்பளம், கறிவடாம் பொரித்து வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.
இப்போத் தஞ்சாவூர்ப்பக்கம் ரசவாங்கி என்ற பெயரில் அழைக்கப்படும் கூட்டு வகை ரசவாங்கிகள்.
இது ஏற்கெனவே பொரிச்ச கூட்டுச் செய்முறையில் வந்திருக்கலாம். என்றாலும் ரசவாங்கி என்றால் கொஞ்சம் புளி கரைத்த நீர் சேர்க்கவேண்டும். இதில் துவரம்பருப்புப் போட்டுச் செய்யும் முறையும், பாசிப்பருப்பும், கடலைப் பருப்பும் மட்டும் போட்டுச் செய்யும் முறையும் உண்டு. இரண்டிலும் பருப்புத் தான் மாற்றிக்கொள்ளவேண்டும். செய்முறை ஒன்றே.
இதற்கு வெள்ளைப் பூஷணி, செளசெள, கத்தரிக்காய் போன்றவைகள் மட்டுமே நன்றாக இருக்கும். மேற்சொன்ன காய்களை நன்கு அலம்பி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன் , மி.வத்தல்2 அல்லது 3, கொ.மல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் உ.பருப்பு, 1/2 டீஸ்பூன் மிளகு,1/2 டீஸ்பூன் வெந்தயம், பெருங்காயம் தேங்காய் துருவல். இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொஞ்சம் நீர் விட்டு விழுதாக அரைத்து வைக்கவும். எண்ணெய் தாளிக்க, வறுக்க. கருகப்பிலை, கொத்துமல்லி. உப்பு, சுவைக்கு ஏற்ப, புளி ஒரு நெல்லிக்காய் அளவு நீர் விட்டுக் கரைக்கவும். ஒரு சின்னத் துண்டு வெல்லம், (பிடித்தமானால்), மொச்சை, கொண்டைக்கடலை, காராமணி போன்றவற்றை முதல் நாளே ஊற வைத்துப் பின்னர் வேக வைக்கும்போது சேர்க்கலாம். அப்படி முதல்நாள் ஊற வைக்கவில்லை என்றாலும் வறுக்கும் பொருட்களை வறுக்கும்போது மேற்சொன்னவற்றில் இரண்டையோ அல்லது எல்லாமும் கொஞ்சம் கொஞ்சமோ எடுத்துக்கொண்டு எண்ணெயில் போட்டு வெடிக்க விட்டுச் சேர்க்கலாம். இது கடிக்கக் கஷ்டம் எனில் வெந்நீரில் ஊற வைத்துவிட்டுச் சேர்க்கலாம். பருப்பு வேகும்போதே சேர்த்தால் நன்கு வெந்துவிடும். அல்லது பச்சை மொச்சை கிடைக்கும் காலங்களில் அதை மட்டும் சேர்க்கலாம்.
பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் களைந்து கழுவிக்கொண்டு ஒரு உருளி அல்லது கடாயில் நீர் விட்டுக்கொண்டு அதில் போட்டு வேக வைக்கவும். நன்கு குழைந்து வரும் சமயம் நறுக்கி வைத்துள்ள காய்களைப் போட்டு மஞ்சள் தூள் சேர்க்கவும். காய்கள் பாதி வெந்ததும், கரைத்து வைத்துள்ள புளி நீரைச் சேர்த்து உப்பையும் சேர்க்கவும். சேர்ந்து கொதிக்கையில் வறுத்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும். அதுவே கெட்டியாக இருக்கும். நன்கு சேர்ந்ததும் கீழே இறக்கித் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை போட்டுத் தாளித்துப் பச்சைக் கொத்துமல்லி தூவவும்.
அடுத்தது துவரம்பருப்புச் சேர்ப்பதற்கு மேற்சொன்ன சாமான்களில் பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் தவிர்த்துவிட்டுத் துவரம்பருப்பை நன்கு குழைய வேக விட்டுச் சேர்க்கவும். ருசியில் மாறுபாடு தெரியும்.
கத்தரிக்காய் பிடிக்குமெனில் குறைந்தது கால் கிலோவுக்குக் குறையாமல் வேண்டும். சின்னதாய் ஒரே மாதிரியாக இருத்தல் நலம். நன்கு கழுவிவிட்டுக் காம்பை முழுதும் நறுக்காமல் கொஞ்சம் போல் அரை இஞ்ச் நறுக்கிவிட்டுக் கத்தரிக்காயை நான்காக நறுக்கிக் கொள்ளவும். காம்போடு இருக்குமாதலால் காய் அப்படியே முழுதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: புளி ஒரு எலுமிச்சம்பழம் அளவு. நீர் விட்டுக் கரைத்து வடிகட்டி வைக்கவும். உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து வைக்கவும். துவரம்பருப்பு ஐம்பது கிராம் நன்கு குழைய வேக விட்டு வைக்கவும்.
வறுத்து அரைக்க: மிவத்தல் எட்டு, தனியா 50 கிராம், மஞ்சள் தூள், பெருங்காயம், கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், உ.பருப்பு ஒரு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன். தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு சுவைக்கு ஏற்ப. எண்ணெய், தேவையான அளவு வறுக்க, தாளிக்க. கடுகு, கருகப்பிலை, மி.வத்தல், ப.மிளகாய் ஒன்று.காரம் தேவை எனில் மிளகு இரண்டு டீஸ்பூனாக வைத்துக்கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் வறுத்து அரைக்கவும். கொஞ்சம் பொடியைத் தனியாக வைத்துவிட்டு மிச்சப் பொடியை அலம்பி நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயில் ஒரே சீராக அடைத்து வைத்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும்.
அடுப்பில் உருளி அல்லது வாணலியை ஏற்றி எண்ணெய் ஊற்றி விட்டுக் கடுகு போட்டுத் தாளிக்கவும். கருகப்பிலை, மி.வத்தல் ஒன்று, ப.மிளகாய் ஒன்று இரண்டாய்க் கிள்ளிச் சேர்க்கவும். பெருங்காயம் சேர்த்துக்கொண்டு அடைத்து வைத்துள்ள கத்தரிக்காய்களைப் போட்டுச் சற்று நேரம் வதக்கவும். மூடி வைத்துச் சிறிது நேரம் வதக்கிவிட்டுப் புளி ஜலம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைத்ததை அதிலே சேர்க்கவும். சாம்பார் போல ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல், ரசம் மாதிரி நீர்க்கவும் இல்லாமல் நிதானமாகப் புளி கரைத்தது இருத்தல் நலம். புளி வாசனை போகக் கொதித்ததும், வேக வைத்துள்ள துவரம்பருப்பில் நீர் 200 கிராமுக்குக் குறையாமல் ஊற்றிக் கரைத்துக்கொண்டு அதைக் கொதிக்கும் கலவையில் ஊற்றவும். நன்கு பொங்கி வருகையில் கீழே இறக்கி வைத்து மிச்சம் எடுத்து வைத்துள்ள பொடியைப் போட்டுக் கலக்கவும். இது கத்தரிக்காயில் மட்டுமே செய்யப் படும் ரசவாங்கி. இதிலேயே கத்தரிக்காய்களும் நிறையச் சேர்க்கப் படுவதால், சாம்பார் என்று ஒன்று தனியாக வைக்காமல் ரசமும் வைக்காமல் சாப்பிடப் பிடிக்கும் எனில் அப்பளம், கறிவடாம் பொரித்து வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.
இப்போத் தஞ்சாவூர்ப்பக்கம் ரசவாங்கி என்ற பெயரில் அழைக்கப்படும் கூட்டு வகை ரசவாங்கிகள்.
இது ஏற்கெனவே பொரிச்ச கூட்டுச் செய்முறையில் வந்திருக்கலாம். என்றாலும் ரசவாங்கி என்றால் கொஞ்சம் புளி கரைத்த நீர் சேர்க்கவேண்டும். இதில் துவரம்பருப்புப் போட்டுச் செய்யும் முறையும், பாசிப்பருப்பும், கடலைப் பருப்பும் மட்டும் போட்டுச் செய்யும் முறையும் உண்டு. இரண்டிலும் பருப்புத் தான் மாற்றிக்கொள்ளவேண்டும். செய்முறை ஒன்றே.
இதற்கு வெள்ளைப் பூஷணி, செளசெள, கத்தரிக்காய் போன்றவைகள் மட்டுமே நன்றாக இருக்கும். மேற்சொன்ன காய்களை நன்கு அலம்பி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன் , மி.வத்தல்2 அல்லது 3, கொ.மல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் உ.பருப்பு, 1/2 டீஸ்பூன் மிளகு,1/2 டீஸ்பூன் வெந்தயம், பெருங்காயம் தேங்காய் துருவல். இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொஞ்சம் நீர் விட்டு விழுதாக அரைத்து வைக்கவும். எண்ணெய் தாளிக்க, வறுக்க. கருகப்பிலை, கொத்துமல்லி. உப்பு, சுவைக்கு ஏற்ப, புளி ஒரு நெல்லிக்காய் அளவு நீர் விட்டுக் கரைக்கவும். ஒரு சின்னத் துண்டு வெல்லம், (பிடித்தமானால்), மொச்சை, கொண்டைக்கடலை, காராமணி போன்றவற்றை முதல் நாளே ஊற வைத்துப் பின்னர் வேக வைக்கும்போது சேர்க்கலாம். அப்படி முதல்நாள் ஊற வைக்கவில்லை என்றாலும் வறுக்கும் பொருட்களை வறுக்கும்போது மேற்சொன்னவற்றில் இரண்டையோ அல்லது எல்லாமும் கொஞ்சம் கொஞ்சமோ எடுத்துக்கொண்டு எண்ணெயில் போட்டு வெடிக்க விட்டுச் சேர்க்கலாம். இது கடிக்கக் கஷ்டம் எனில் வெந்நீரில் ஊற வைத்துவிட்டுச் சேர்க்கலாம். பருப்பு வேகும்போதே சேர்த்தால் நன்கு வெந்துவிடும். அல்லது பச்சை மொச்சை கிடைக்கும் காலங்களில் அதை மட்டும் சேர்க்கலாம்.
பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் களைந்து கழுவிக்கொண்டு ஒரு உருளி அல்லது கடாயில் நீர் விட்டுக்கொண்டு அதில் போட்டு வேக வைக்கவும். நன்கு குழைந்து வரும் சமயம் நறுக்கி வைத்துள்ள காய்களைப் போட்டு மஞ்சள் தூள் சேர்க்கவும். காய்கள் பாதி வெந்ததும், கரைத்து வைத்துள்ள புளி நீரைச் சேர்த்து உப்பையும் சேர்க்கவும். சேர்ந்து கொதிக்கையில் வறுத்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும். அதுவே கெட்டியாக இருக்கும். நன்கு சேர்ந்ததும் கீழே இறக்கித் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை போட்டுத் தாளித்துப் பச்சைக் கொத்துமல்லி தூவவும்.
அடுத்தது துவரம்பருப்புச் சேர்ப்பதற்கு மேற்சொன்ன சாமான்களில் பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் தவிர்த்துவிட்டுத் துவரம்பருப்பை நன்கு குழைய வேக விட்டுச் சேர்க்கவும். ருசியில் மாறுபாடு தெரியும்.
Thursday, February 16, 2012
உங்க ஊரில் மாவடு வர ஆரம்பிச்சுட்டதா?
இப்போ ஊறுகாய் போடும் பருவம் ஆரம்பிச்சாச்சு. இன்னும் கொஞ்ச நாட்களில் மாவடு, மாங்காய் வர ஆரம்பித்துவிடும். முதல்லே மாவடு போடுவது எப்படினு பார்க்கலாமா? மாவடு பலருக்கும் பிடிக்கும் என்றாலும் யாரும் வீட்டில் போடுவதில்லை. அது என்னமோ பெரிய வேலைனு நினைக்கிறாங்க போல. இல்லை; மாவடு போடுவது ரொம்பவே எளிதான ஒன்று. எப்படினு கேட்கிறீங்களா?
முதல்லே மாவடு சீசனில் கிடைக்கும் நல்ல உருண்டை வடுவாக வாங்கிக் கொள்ளவும். விலையா? அதிகம் இல்லை ஜென்டில் உமன்! கிலோ 100ரூபாய்னு தான் சொல்வாங்க. :)))))
உருண்டை வடு கிடைக்கலையா? சரி,கவலை படேல். நீள வடுவே வாங்கிக்கலாம். எந்த வடுவானாலும் காம்புகளோடு இருக்கணும். கூடியவரை எடை போட்டு வாங்குங்க. படியில் அளந்து வாங்க வேண்டாம். இப்போ மூன்று கிலோ மாவடுக்குத் தேவையான பொருட்கள்.
மிளகாய் வற்றல் 100 கிராம்(காரம் வேண்டுமெனில் கூட வைச்சுக்கலாம்.), கடுகு 50 கிராம், மஞ்சள்(பச்சை கிடைத்தால் நல்லது, இல்லையெனில் மஞ்சள் தூள்) விளக்கெண்ணெய் நூறு கிராம். பெருங்காயம் தேவை இல்லை.
உப்பு இதான் முக்கியமான ஒன்று முன்பெல்லாம் ஒரு படி மாவடுக்கு 1/8 படி உப்பு அதாவது சென்னை அளவில் ஆழாக்கு உப்பு என்ற கணக்கு உண்டு. இப்போக்கிலோவில் என்பதால் உப்பு மூன்றுகிலோ மாவடுக்கும் சேர்த்து 300 கிராம் எடுத்துக்கொள்ளவும். அல்லது ஆழாக்கில் இரண்டு எடுத்துக்கொள்ளவும். ஒரு சிலர் உப்பை நீர் விட்டுக் காய்ச்சி ஆற வைத்து விடுவார்கள். அப்படியும் விடலாம். உப்பை அப்படியே வெறும் வாணலியில் வறுத்தும் போடலாம்.
மாவடுவை நன்கு கழுவி நீரை வடிகட்டிக்கொள்ளவும். மிளகாய் வற்றல், கடுகு, மஞ்சள் சேர்த்துக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அல்லது பொடியாகவும் செய்து கொள்ளலாம். எப்படியும் நீர் விட்டுக்கொண்டு விடும். ஆகையால் அதிகம் நீர் சேர்க்காமல் பொடியாகவே வைத்துக்கொள்ளலாம்.
ஊறுகாய் போடும் ஜாடியில் அடியில் கொஞ்சம் உப்பு, மிளகாய்,கடுகு, மஞ்சள் கலவை போட்டுவிட்டு அதன் மேல் மாவடு ஒரு கை போடவும். இப்போது மீண்டும் உப்பு, மிளகாய்க்கலவை, திரும்ப மாவடு என்று இரண்டும் முழுதும் போட்டு முடிக்கவும். கடைசியில் மிச்சம் இருக்கும் உப்பு,மிளகாய்க் கலவையை மேலே போட்டுவிட்டு விளக்கெண்ணெயை ஊற்றிவிட்டுக் கிளற வேண்டாம். அப்படியே மூடி வைக்கவும்.
மறுநாள் திறந்து பார்த்தால் கொஞ்சம் ஜலம் விட்டிருக்கும். இப்போது நன்கு கிளறிவிடவும். கிளறுவதற்கு மரக்கரண்டிகளையே பயன்படுத்தவும். குறைந்தது நான்கு, ஐந்து நாட்கள் இப்படிக் கிளறிவிட்டுக்கொண்டே வந்தால் மாவடு சுருங்க ஆரம்பிக்கும். நன்கு சுருங்கிவிட்டதெனில் மாவடு நன்கு ஊறி இருப்பதாகப் பொருள். எடுத்துப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். மறக்காமல் தினமும் ஒரு முறை கிளறிவிட வேண்டும்.
ஒரு சிலர் மாவடு சுருங்கினால் வெடுக்கென இருக்காது என நினைத்துக்கொண்டு அதில் ஐஸைப் போடுவது, அல்லது குளிர்பெட்டியில் வைப்பது, உப்பை நிறையவும் போட்டு ஐஸையும் போடுவது எனச் செய்வார்கள். இவை எதுவுமே தேவை இல்லை. தேவையான உப்பைப் போட்டுவிட்டுத் தினமும் கிளறிக் கொடுத்துவந்தாலே போதுமானது. ஒரு வருடம் ஆனாலும் வெளியேயே வைத்திருக்கலாம்; வீணாகாது.
முதல்லே மாவடு சீசனில் கிடைக்கும் நல்ல உருண்டை வடுவாக வாங்கிக் கொள்ளவும். விலையா? அதிகம் இல்லை ஜென்டில் உமன்! கிலோ 100ரூபாய்னு தான் சொல்வாங்க. :)))))
உருண்டை வடு கிடைக்கலையா? சரி,கவலை படேல். நீள வடுவே வாங்கிக்கலாம். எந்த வடுவானாலும் காம்புகளோடு இருக்கணும். கூடியவரை எடை போட்டு வாங்குங்க. படியில் அளந்து வாங்க வேண்டாம். இப்போ மூன்று கிலோ மாவடுக்குத் தேவையான பொருட்கள்.
மிளகாய் வற்றல் 100 கிராம்(காரம் வேண்டுமெனில் கூட வைச்சுக்கலாம்.), கடுகு 50 கிராம், மஞ்சள்(பச்சை கிடைத்தால் நல்லது, இல்லையெனில் மஞ்சள் தூள்) விளக்கெண்ணெய் நூறு கிராம். பெருங்காயம் தேவை இல்லை.
உப்பு இதான் முக்கியமான ஒன்று முன்பெல்லாம் ஒரு படி மாவடுக்கு 1/8 படி உப்பு அதாவது சென்னை அளவில் ஆழாக்கு உப்பு என்ற கணக்கு உண்டு. இப்போக்கிலோவில் என்பதால் உப்பு மூன்றுகிலோ மாவடுக்கும் சேர்த்து 300 கிராம் எடுத்துக்கொள்ளவும். அல்லது ஆழாக்கில் இரண்டு எடுத்துக்கொள்ளவும். ஒரு சிலர் உப்பை நீர் விட்டுக் காய்ச்சி ஆற வைத்து விடுவார்கள். அப்படியும் விடலாம். உப்பை அப்படியே வெறும் வாணலியில் வறுத்தும் போடலாம்.
மாவடுவை நன்கு கழுவி நீரை வடிகட்டிக்கொள்ளவும். மிளகாய் வற்றல், கடுகு, மஞ்சள் சேர்த்துக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அல்லது பொடியாகவும் செய்து கொள்ளலாம். எப்படியும் நீர் விட்டுக்கொண்டு விடும். ஆகையால் அதிகம் நீர் சேர்க்காமல் பொடியாகவே வைத்துக்கொள்ளலாம்.
ஊறுகாய் போடும் ஜாடியில் அடியில் கொஞ்சம் உப்பு, மிளகாய்,கடுகு, மஞ்சள் கலவை போட்டுவிட்டு அதன் மேல் மாவடு ஒரு கை போடவும். இப்போது மீண்டும் உப்பு, மிளகாய்க்கலவை, திரும்ப மாவடு என்று இரண்டும் முழுதும் போட்டு முடிக்கவும். கடைசியில் மிச்சம் இருக்கும் உப்பு,மிளகாய்க் கலவையை மேலே போட்டுவிட்டு விளக்கெண்ணெயை ஊற்றிவிட்டுக் கிளற வேண்டாம். அப்படியே மூடி வைக்கவும்.
மறுநாள் திறந்து பார்த்தால் கொஞ்சம் ஜலம் விட்டிருக்கும். இப்போது நன்கு கிளறிவிடவும். கிளறுவதற்கு மரக்கரண்டிகளையே பயன்படுத்தவும். குறைந்தது நான்கு, ஐந்து நாட்கள் இப்படிக் கிளறிவிட்டுக்கொண்டே வந்தால் மாவடு சுருங்க ஆரம்பிக்கும். நன்கு சுருங்கிவிட்டதெனில் மாவடு நன்கு ஊறி இருப்பதாகப் பொருள். எடுத்துப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். மறக்காமல் தினமும் ஒரு முறை கிளறிவிட வேண்டும்.
ஒரு சிலர் மாவடு சுருங்கினால் வெடுக்கென இருக்காது என நினைத்துக்கொண்டு அதில் ஐஸைப் போடுவது, அல்லது குளிர்பெட்டியில் வைப்பது, உப்பை நிறையவும் போட்டு ஐஸையும் போடுவது எனச் செய்வார்கள். இவை எதுவுமே தேவை இல்லை. தேவையான உப்பைப் போட்டுவிட்டுத் தினமும் கிளறிக் கொடுத்துவந்தாலே போதுமானது. ஒரு வருடம் ஆனாலும் வெளியேயே வைத்திருக்கலாம்; வீணாகாது.
Subscribe to:
Posts (Atom)