எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, October 3, 2014

நவராத்திரி நிவேதனம் கேசரி

கேசரி கிளறுவது ரொம்பவே சுலபம்.  யாராக இருந்தாலும் சீக்கிரம் கற்றுக் கொண்டு செய்துடலாம்.


ரவை      ஒரு கிண்ணம்


சர்க்கரை  இரண்டு கிண்ணம்

நெய்      முக்கால் கிண்ணம்

ஏலக்காய்த் தூள் செய்தது அரை டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழம் இரண்டும் சேர்ந்து 2 டேபிள் ஸ்பூன்


கொதிக்க வைத்த நீர் தேவையான அளவு


வாணலி அல்லது வெண்கல உருளியில் நெய்யைச் சூடு பண்ணிக் கொண்டு ரவையை அதில் போட்டுச் சிவக்க வறுக்கவும்.  ரவை வறுபட்டதும் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கவும்.  இதைச் செய்யும்போதே இன்னொரு பக்கம்  மூன்று கிண்ணம் நீரைக் கொதிக்க வைக்கவும்.  ரவையும், சர்க்கரையும் நன்கு கலந்ததும், கொதிக்கும் வெந்நீரைக் கொஞ்சமாக விடாமல் மொத்தமாக ஊற்றவும்.


கை விடாமல் கிளறவும்.  சர்க்கரை இளகிப் பாகும் நீரும் சேர்ந்து கொதித்து ரவை கெட்டியாக வர ஆரம்பிக்கும்.  மீதம் இருக்கும் நெய்யை ஊற்றவும்.  இன்னொரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழத்தைப் போட்டுச் சிவக்க வறுத்துக் கேசரியில் கொட்டவும்.  ரவை நன்கு கெட்டியாகிப் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் கீழே இறக்கி ஏலப் பொடி தூவி நன்கு கிளறவும்.  விநியோகம் செய்யத் தயார்.



2 comments:

  1. கேசரி என் பாஸுக்கு ரொம்பப் பிடிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பிடிக்கும். வலை உலக அறிமுக நண்பர் அம்பிக்கும் கேசரின்னா உயிர். அவரைக் கடுப்பேத்தறதுக்குன்னே கேசரி பத்தி எழுதின காலம் ஒன்று உண்டு. :))) இப்போப் பழைய நண்பர்கள் எல்லாருமே என்னை மறந்துவிட்டனர். :)))))

      Delete