எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, September 29, 2014

நவராத்திரிச் சுண்டல் வகைகள்! மொச்சைப்பருப்புச் சுண்டல் 3

தேவையான பொருட்கள்:-

மொச்சைப்பருப்பு கால் கிலோ

மி. வத்தல் இரண்டு

கருகப்பிலை,

பெருங்காயம்

தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தாளிக்க எண்ணெய்  இரண்டு டீஸ்பூன்


வறுக்க:

மி. வத்தல் நான்கு

தனியா ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம்


மேலே சொன்னவற்றை எண்ணெயில் வறுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும்.  பிடிக்காதவர்கள் சாம்பார்ப் பொடி போடலாம்.  அதுவும் பிடிக்கலை எனில் தாளிக்கையில் நான்கு மிளகாய் வற்றலாகத் தாளிக்கவும். இது சுமாராகத் தான் இருக்கும்.



மொச்சையை நன்கு கழுவிக் கொண்டு மூழ்கும் அளவுக்கு மேல் நீரை ஊற்றி முதல் நாளே ஊற வைக்கவும். மறு நாள் காலையிலிருந்து அதை வேக வைக்கும் வரை கழுவி நீரை மாற்றிக் கொண்டே இருக்கவும்.  பின்னர் குக்கரில் அல்லது ப்ரஷர் பானில் தேவையான உப்பைச் சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும்.  குக்கரோ ப்ரஷர் பானோ ஒரு சத்தம் கொடுத்ததும் அடுப்பைத் தணித்து வைத்துப்பின்னர் அதே நிலையிலேயே மூன்று அல்லது நான்கு சப்தங்கள் விடவும்.  இப்படி விட்டால் நன்கு குழையும்.கையில் எடுத்து நசுக்கினால் நன்கு குழைந்திருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு மி.வத்தல், கருகப்பிலை சேர்த்து வெந்த மொச்சையை நீரை வடிகட்டிச் சேர்க்கவும்.



சிறிது கிளறியதும், வறுத்த பொடியைச் சேர்த்துக் கிளறவும்.  நன்கு சேர்ந்து வரும்போது தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கீழே இறக்கவும். விநியோகத்துக்குத் தயார்.

No comments:

Post a Comment