அப்படித்தான் நானும் நினைச்சேன் முதல்லே. ஆனால் நல்லாவே இருந்தது. ஊருக்குப் போகையிலே ராஜ்மா ரொட்டி பண்ணி எடுத்துட்டுப் போகலாம்னு மருமகள் சொன்னாள். எனக்குக் கொஞ்சம் யோசனை தான். அன்றே சாயந்திரமாப் பண்ணினா. சாப்பிட்டால் நல்லாவே இருந்தது. எனக்குத் தெரிந்த வரையில் அவள் போட்டிருந்த பொருட்கள்:
ராஜ்மா ஒரு கப் முதல் நாளே ஊற வைத்து வேக வைத்து மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
மேற்சொன்ன அளவு ராஜ்மா விழுதுக்கு இரண்டு கப் கோதுமை மாவு தேவைப்படும்.
மற்றத் தேவையான பொருட்கள்: மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், அம்சூர் பொடி, உப்பு, மாவில் கலக்க ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய். மாவு பிசைய நீர். ரொட்டியைத் தட்டி எடுக்கத் தேவையான எண்ணெய் தனியாக.
கோதுமை மாவில் ராஜ்மா விழுதைப் போட்டுக் கலந்து கொண்டு அதோடு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், அம்சூர் பொடி, தேவையான உப்புச் சேர்த்துக் கலக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான நீர் சேர்த்து மாவை நன்றாகப் பிசையவும். ரொட்டி மாவு பதத்துக்கு வந்ததும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் ரொட்டியை ஒவ்வொன்றாக இட்டுத் தவாவில் எண்ணெய் தடவிப் போட்டுச் சுட்டு எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள ராய்தா எனப்படும் பச்சடி நன்றாக இருக்கும்.
ராய்தா:
வெங்காயம், காரட், வெள்ளரிக்காய் துருவிப் போட்டுப் பச்சைக் கொத்துமல்லி போட்டு, நல்ல கெட்டித் தயிரில் உப்பு, ஜீரகப்பொடி, காலா நமக் பொடி ஒரு சிட்டிகை போட்டுக் கலந்து வைக்கவும்.
எச்சரிக்கை
படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
Sunday, November 27, 2011
Tuesday, November 15, 2011
ரங்கு சமையல் கத்துக்கிறார்
அப்பாடா!
என்ன அப்பாடா! இன்னிக்கு சமையல் இல்லையா?
நோ, இன்னிக்கு நோ சமையல் டே. தங்குவின் அறிவிப்பு.
என்னது? அப்போ என்ன சாப்பிடப் போறோமாம்?
பட்டினி தான்!
அடிப் பாவி! சரி, நானாவது சமைத்துத் தொலைக்கிறேன்.
அப்படி வாங்க வழிக்கு! ஹாஹாஹாஹா, தங்குவின் வெற்றிச் சிரிப்பு.
நான் வெறும் ரசம் தான் வைக்கப் போறேன். ரங்குவின் அறிவிப்பு.
சரி, போகட்டும், வைக்கிறது வைக்கிறீங்க, மைசூர் ரசமா வைச்சுடுங்களேன்.
நல்லா நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்துட்டா பாரு!
ஏன்? தினம் தினம் நான் தானே சமைக்கிறேன். இன்னிக்கு ஒரு நாள் செய்தா என்னவாம்?
எனக்கு மைசூர் ரசமும் தெரியாது, மங்களூர் போண்டோவும் வராது.
நான் சொல்லித் தரேன். செய்ங்க. தங்கு ஓர் அதட்டல் போட வேறு வழியில்லாத ரங்கு பணிகிறார்.
முதல்லே பருப்பை வேக வைக்கணும். அது பாட்டுக்கு வேகட்டும். அதுக்குள்ளே நாம் இதெல்லாம் தயார் பண்ணிக்கலாம்.
என்னது?
புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு எடுத்து ஊற வைச்சுக் கரைச்சுக்குங்க. அதைத் தனியா வைங்க, சரியா?
சரி, சரி, அப்புறமா சொல்லித் தொலை. அடம்!
மி.வத்தல் 4, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு. இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக்கோங்க. ஜீரகம் வறுக்காமல் பச்சையாக எடுத்து வறுத்த சாமான்களோடு சேர்த்துக்கோங்க.
ஐயையே, வறுக்கச் சொன்னால் என்ன செய்யறீங்க? இப்படியா கறுப்பா ஆக்கறது? நகருங்க நானே வறுத்துத் தந்து தொலைக்கிறேன்.
நல்லா வறு, என்னை வறுக்கிறாப்போல் நினைச்சுக்கோ!
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்கே நீங்க தான் என்னை வறுக்கிறீங்க.
தங்குவே எல்லாவற்றையும் வறுத்து எடுத்தாச்சு.
இப்போ இதை எல்லாம் மிக்சியில் போட்டு அரைங்க.
எப்படி? எங்க வீட்டு மனுஷங்களை நீ வாயில் போட்டு அரைப்பியே, அப்படியா?
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சரி, சரி,அரைச்சுட்டேன், இதோ.
இப்போப் புளி ஜலத்தை அடுப்பில் வைச்சு அதிலே ஒரு தக்காளிப்பழத்தை நறுக்கிப் போடுங்க. உப்புச் சேர்த்துக் கொஞ்சம் போல் பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடுங்க. வேணுமானால் ஒரே ஒரு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போடலாம். கொதி வந்ததும், வெந்த பருப்பைச் சேர்த்துட்டு, அரைச்சு வைச்சதையும் சேர்த்து ஒரு கொதி விடுங்க. அப்புறமா ஜலம் விட்டு விளாவிவிட்டு நெய்யில் கடுகு, மி,வத்தல் ஒண்ணு, கருகப்பிலை தாளிச்சு, கொத்துமல்லி நறுக்கிப் போடுங்க.
அப்பாடா, எல்லாம் முடிச்சுட்டேன். வா, சீக்கிரமா வந்து படம் எடுத்துட்டு நீ எழுதுவியே அதிலே போடு.
அதெல்லாம் நான் சமைக்கிறச்சே தான். இதை எல்லாம் எடுக்க மாட்டேன்.
என்ன அப்பாடா! இன்னிக்கு சமையல் இல்லையா?
நோ, இன்னிக்கு நோ சமையல் டே. தங்குவின் அறிவிப்பு.
என்னது? அப்போ என்ன சாப்பிடப் போறோமாம்?
பட்டினி தான்!
அடிப் பாவி! சரி, நானாவது சமைத்துத் தொலைக்கிறேன்.
அப்படி வாங்க வழிக்கு! ஹாஹாஹாஹா, தங்குவின் வெற்றிச் சிரிப்பு.
நான் வெறும் ரசம் தான் வைக்கப் போறேன். ரங்குவின் அறிவிப்பு.
சரி, போகட்டும், வைக்கிறது வைக்கிறீங்க, மைசூர் ரசமா வைச்சுடுங்களேன்.
நல்லா நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்துட்டா பாரு!
ஏன்? தினம் தினம் நான் தானே சமைக்கிறேன். இன்னிக்கு ஒரு நாள் செய்தா என்னவாம்?
எனக்கு மைசூர் ரசமும் தெரியாது, மங்களூர் போண்டோவும் வராது.
நான் சொல்லித் தரேன். செய்ங்க. தங்கு ஓர் அதட்டல் போட வேறு வழியில்லாத ரங்கு பணிகிறார்.
முதல்லே பருப்பை வேக வைக்கணும். அது பாட்டுக்கு வேகட்டும். அதுக்குள்ளே நாம் இதெல்லாம் தயார் பண்ணிக்கலாம்.
என்னது?
புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு எடுத்து ஊற வைச்சுக் கரைச்சுக்குங்க. அதைத் தனியா வைங்க, சரியா?
சரி, சரி, அப்புறமா சொல்லித் தொலை. அடம்!
மி.வத்தல் 4, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு. இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக்கோங்க. ஜீரகம் வறுக்காமல் பச்சையாக எடுத்து வறுத்த சாமான்களோடு சேர்த்துக்கோங்க.
ஐயையே, வறுக்கச் சொன்னால் என்ன செய்யறீங்க? இப்படியா கறுப்பா ஆக்கறது? நகருங்க நானே வறுத்துத் தந்து தொலைக்கிறேன்.
நல்லா வறு, என்னை வறுக்கிறாப்போல் நினைச்சுக்கோ!
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்கே நீங்க தான் என்னை வறுக்கிறீங்க.
தங்குவே எல்லாவற்றையும் வறுத்து எடுத்தாச்சு.
இப்போ இதை எல்லாம் மிக்சியில் போட்டு அரைங்க.
எப்படி? எங்க வீட்டு மனுஷங்களை நீ வாயில் போட்டு அரைப்பியே, அப்படியா?
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சரி, சரி,அரைச்சுட்டேன், இதோ.
இப்போப் புளி ஜலத்தை அடுப்பில் வைச்சு அதிலே ஒரு தக்காளிப்பழத்தை நறுக்கிப் போடுங்க. உப்புச் சேர்த்துக் கொஞ்சம் போல் பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடுங்க. வேணுமானால் ஒரே ஒரு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போடலாம். கொதி வந்ததும், வெந்த பருப்பைச் சேர்த்துட்டு, அரைச்சு வைச்சதையும் சேர்த்து ஒரு கொதி விடுங்க. அப்புறமா ஜலம் விட்டு விளாவிவிட்டு நெய்யில் கடுகு, மி,வத்தல் ஒண்ணு, கருகப்பிலை தாளிச்சு, கொத்துமல்லி நறுக்கிப் போடுங்க.
அப்பாடா, எல்லாம் முடிச்சுட்டேன். வா, சீக்கிரமா வந்து படம் எடுத்துட்டு நீ எழுதுவியே அதிலே போடு.
அதெல்லாம் நான் சமைக்கிறச்சே தான். இதை எல்லாம் எடுக்க மாட்டேன்.
Thursday, November 10, 2011
Wednesday, November 9, 2011
தினம் தினம் என்னத்தைச் சமைக்கிறது?
போர் அடிக்குதா? புளியஞ்சாதம், தேங்காய்ச் சாதம் எல்லாமும் அலுத்துப் போச்சா? இதோ கொஞ்சம் புது மாதிரியான சமையல். சாப்பிட்டுப் பாருங்க வாங்க.தினம் ஏதேனும் குழம்பு, ரசம்னு வைச்சால் மிஞ்சிப் போகிறது. மறுநாளைக்குச் சுட வைத்துச் சாப்பிடும் வழக்கமும் இல்லை. துவையல், பொடி, எலுமிச்சை சாதம்னு எல்லாம் அலுப்பாய்ப் போச்சா! சரினு புதுமாதிரியா இருக்கட்டும்னு புளியோகெரெ பண்ணினேன். எம்.டி.ஆருக்குத் தான் விளம்பரமா? நமக்கும் வேணுமில்ல? அதான் படம் எடுத்துப் போட்டாச்சு. படத்திலே பார்ப்பது புளியோகெரெ! கடுகோரைனும் சிலபேர் சொல்றாங்க.
ஒரு கர்நாடக சமையல்:
கடுகோரை:
தேவையான பொருட்கள்:
அரைக்க: புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு, தேங்காய்துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4 அல்லது 5, வெல்லம் ஒரு துண்டு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை.
தாளிக்க: கடுகு, உபருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை எண்ணெய் கால் கப்
ஒரு கப் அரிசியைக் கழுவிக் களைந்து முதலில் சாதம் வடித்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் உப்புச் சேர்த்து, நல்லெண்ணை ஊற்றிக் கிளறி ஆற வைக்கவும்.
அரைக்கவேண்டிய சாமான்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைப் போட்டுத் தாளித்துக் கொண்டு பின் அரைத்த விழுதையும் போட்டு வதக்கவும். நன்கு வதக்கியதும் வடித்த சாதத்தைப் போட்டு நன்கு கிளறவும்.
இதைத் தயிர்ப்பச்சடி, மோர்க்குழம்பு அல்லது அவியல் போன்றவற்றோடு உண்ணலாம்.
தொட்டுக்க மோர்க்கூட்டு: இங்கே சைனீஸ் பஜாரில் பூசணிக்காய்(வெள்ளை) நல்லாவே கிடைக்குது. அது வாங்கிட்டு வந்தாங்க. அதிலே செய்தேன். பூசணிக்காயை நீளமாக மெலிதாக நறுக்கிக் கொண்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவும். அதிகப்படி நீரை வடிக்கவேண்டும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து நைஸாக அரைக்கவும். வெந்த பூசணிக்காயில் கொட்டிக் கலந்து ஒரு கொதி வந்ததும் கெட்டித் தயிர் சேர்த்து லேசாய்க் கொதித்ததும் கீழே இறக்கிக் கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்
ரசமே இல்லைனா சாப்பாடும் ரசம் இல்லை; வாழ்க்கையிலும் ரசம் இல்லை.
எலுமிச்சை ரசம்.
பாசிப்பருப்பைக் குழைய வேக வைத்துக்கொண்டு, இரண்டு, மூன்று தக்காளியை மிக்சியில் போட்டு அடித்து அதில் கலந்து கொஞ்சம் நீர் சேர்த்துக்கொண்டு, பச்சை மிளகாய், ரசப் பொடி,பெருங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் நீர் விட்டு விளாவி நுரைத்து வருகையில் கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளிக்கலாம். அல்லது சீரகப் பொடி போட்டுவிட்டுக் கடுகு மட்டும் தாளிக்கலாம். பச்சைக்கொத்துமல்லி சேர்த்து எலுமிச்சைச் சாறையும் சேர்க்கவேண்டும்.
ஒரு கர்நாடக சமையல்:
கடுகோரை:
தேவையான பொருட்கள்:
அரைக்க: புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு, தேங்காய்துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4 அல்லது 5, வெல்லம் ஒரு துண்டு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை.
தாளிக்க: கடுகு, உபருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை எண்ணெய் கால் கப்
ஒரு கப் அரிசியைக் கழுவிக் களைந்து முதலில் சாதம் வடித்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் உப்புச் சேர்த்து, நல்லெண்ணை ஊற்றிக் கிளறி ஆற வைக்கவும்.
அரைக்கவேண்டிய சாமான்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைப் போட்டுத் தாளித்துக் கொண்டு பின் அரைத்த விழுதையும் போட்டு வதக்கவும். நன்கு வதக்கியதும் வடித்த சாதத்தைப் போட்டு நன்கு கிளறவும்.
இதைத் தயிர்ப்பச்சடி, மோர்க்குழம்பு அல்லது அவியல் போன்றவற்றோடு உண்ணலாம்.
தொட்டுக்க மோர்க்கூட்டு: இங்கே சைனீஸ் பஜாரில் பூசணிக்காய்(வெள்ளை) நல்லாவே கிடைக்குது. அது வாங்கிட்டு வந்தாங்க. அதிலே செய்தேன். பூசணிக்காயை நீளமாக மெலிதாக நறுக்கிக் கொண்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவும். அதிகப்படி நீரை வடிக்கவேண்டும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து நைஸாக அரைக்கவும். வெந்த பூசணிக்காயில் கொட்டிக் கலந்து ஒரு கொதி வந்ததும் கெட்டித் தயிர் சேர்த்து லேசாய்க் கொதித்ததும் கீழே இறக்கிக் கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்
ரசமே இல்லைனா சாப்பாடும் ரசம் இல்லை; வாழ்க்கையிலும் ரசம் இல்லை.
எலுமிச்சை ரசம்.
பாசிப்பருப்பைக் குழைய வேக வைத்துக்கொண்டு, இரண்டு, மூன்று தக்காளியை மிக்சியில் போட்டு அடித்து அதில் கலந்து கொஞ்சம் நீர் சேர்த்துக்கொண்டு, பச்சை மிளகாய், ரசப் பொடி,பெருங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் நீர் விட்டு விளாவி நுரைத்து வருகையில் கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளிக்கலாம். அல்லது சீரகப் பொடி போட்டுவிட்டுக் கடுகு மட்டும் தாளிக்கலாம். பச்சைக்கொத்துமல்லி சேர்த்து எலுமிச்சைச் சாறையும் சேர்க்கவேண்டும்.
Monday, November 7, 2011
சில உருளைக்கிழங்கு செய்முறைகள் !
உருளைக்கிழங்கு சமையல்கள்:
உருளைக்கிழங்குக் காரக்கறி: உருளைக்கிழங்கு கால் கிலோ, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, எண்ணெய் வதக்க. கடுகு தாளிக்கத் தேவையான அளவு.
உருளைக்கிழங்கை மண்போக நன்கு கழுவித் தோலை நீக்கவேண்டுமானால் நீக்கிவிட்டுப் பொடிப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்து, நறுக்கிய உருளைக்கிழங்குகளைப் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மொறுமொறுவெனப் பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும்.
உருளைக்கிழங்கு காரக்கறி 2-ஆம் வகை: உருளைக்கிழங்கு கால் கிலோ, வெங்காயம் பெரியதெனில் இரண்டு, சின்ன வெங்காயம் என்றால் நூறுகிராம் தோல் உரித்துப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் ஒன்று, மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கருகப்பிலை, தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, பெருங்காயத்தூள். வதக்க எண்ணெய்.
உருளைக்கிழங்கைக் கழுவி வேக வைத்துத் தோலுரித்துக்கொண்டு ஒன்றிரண்டாக மசிக்கவும். அல்லது நான்கு பாகமாகவோ சிறிய துண்டுகளாகவோ நறுக்கிக்கொள்ளலாம். கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயப்பொடி, கருகப்பிலை, க.பருப்பு, உ.பருப்பு தாளித்துக்கொண்டு, பச்சைமிளகாயையும் அரிந்து போடவும். பின் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துக்கொண்டு நன்கு பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும். பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். நன்கு பொடி வாசனை போகும் வரை வதக்கி எடுக்கவும். இதிலேயே இறக்குகையில் கொஞ்சம் கரம்மசாலாவைப் போட்டால் மசாலா கிழங்காக ருசிக்கலாம். தேவை எனில் பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும்.
உருளைக்கிழங்கு போண்டோ:
மேலே சொன்ன மாதிரி கொஞ்சம்காரத்தைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்கு கறி தயாரித்துக்கொள்ளவும்.
மேல்மாவுக்குத் தேவையான பொருட்கள்; கடலைமாவு இரண்டு கிண்ணம், அரிசி மாவு அரைக்கிண்ணம், மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், கரைக்க நீர்.
பொரிக்க எண்ணெய்
கடலைமாவு, அரிசிமாவு,மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் உப்புச் சேர்த்துக்கலந்து கொண்டு நீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும்.
இப்போது தயாராக வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கறியை ஒரு எலுமிச்சம்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் வைத்து அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், அடுப்பைத் தணித்துக் கொண்டு உருளைக்கிழங்கு உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்துக்கொண்டு எண்ணெயில் போடவும். நன்கு திருப்பிப் போட்டு வெந்ததும் கரண்டியால் அரித்து எடுத்து வடிகட்டவும். சூடான தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்
உருளைக்கிழங்கு பஜ்ஜி:
உருளைக்கிழங்கு பெரிதாக ஒன்றிருந்தாலே போதும். நன்கு கழுவிக் கொண்டு தோலைச் சீவி விட்டு வட்ட வட்டமாகச் சீவித் தண்ணீரில் போடவும். உருளைக்கிழங்கை நன்கு தண்ணீரில் போட்டு அலசிவிட்டால் அதிலுள்ள மாவுச்சத்து குறையும் என்பார்கள். உண்பதில் கவலைப்படவேண்டாம்.
பஜ்ஜி மாவுக்கு: 2 கிண்ணம் கடலைமாவு, அரைக்கிண்ணம் அரிசி மாவு,அரைக்கிண்ணம்மைதா மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்,கரைக்க நீர், பொரிக்க எண்ணெய்
எல்லா மாவுகளையும் ஒன்றாய்க் கலந்து கொண்டு உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். நீர் விட்டுக் கொண்டு தோசைமாவு பதத்துக்குக் கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு எண்ணெய் காய்ந்ததும், வட்டமாக நறுக்கிய உருளைக்கிழங்கு வில்லைகளை மாவில் தோய்த்துக்கொண்டு எண்ணெயில் போடவும். சூடான தேங்காய்ச் சட்னி, கொத்துமல்லிச் சட்னியோடு பரிமாறவும்.
உருளைக்கிழங்கு வடை: ஜவ்வரிசி ஒரு கிண்ணம். தயிரில் ஊறப் போடவும். உருளைக்கிழங்கு பெரிதாக இரண்டு. வேகவைத்துத் தோலுரித்துக்கொள்ளவும். வேர்க்கடலை ஒரு கிண்ணம் நன்கு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். 6 பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு சின்னக் கட்டுக் கொத்துமல்லி சேர்த்து அரைத்த விழுது ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, பெருங்காயப் பொடி, காரப்பொடி(தேவையானால்) பச்சைமிளகாய்க் காரமே போதுமெனில் அதோடு நிறுத்திக்கொள்ளலாம். காரம் போதவில்லையெனில் அரைத்த விழுதையே இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம்.
இப்போது ஜவ்வரிசி நன்கு ஊறி இருக்கும். அதில் வேர்க்கடலை மாவு, வெந்த உருளைக்கிழங்கைச் சேர்த்துப் பிசையவும். காரத்திற்குத் தேவையான அளவு அரைத்த விழுது, உப்புச் சேர்க்கவும். பெருங்காயத்தூள், கருகப்பிலை தேவை எனில் சேர்க்கவும் அநேகமாகப் பிசைந்த மாவு கெட்டியாகவே இருக்கும். இல்லை எனில் கொஞ்சம் மைதாமாவோ அல்லது கடலைமாவோ சேர்க்கலாம். சற்றுநேரம் வைத்திருந்தால் ஜவ்வரிசி நன்கு ஊறி ஈரத்தை இழுத்துக்கொள்ளும்.
இப்போது கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு எண்ணெய் காய்ந்ததும், மாவை வடைகளாய்த் தட்டி எண்ணெயில் போடவும். ஜவ்வரிசி நன்கு பொரிந்து வடை மொறுமொறுவென வரும். சூடான தக்காளிச் சட்னி அல்லது புளிச்சட்னி, பச்சைச் சட்னியோடு சாப்பிடலாம்.
உருளைக்கிழங்கு தம் அல்லது ஆலு தம்: ஓரே மாதிரியான சின்னச் சின்ன உருளைக்கிழங்கு கால் கிலோ. வேகவைத்துத் தோல் உரித்துக்கொள்ளவும். வெந்த கிழங்கில் இரண்டு மூன்று இடங்களில் சற்றுப் பெரிய ஊசி அல்லது பல் குத்தும் குச்சியால் குத்திவிட்டுவிட்டு மிளகாய்த்தூள், உப்புச் சேர்த்து
வதக்கி வைத்துக்கொள்ளவும்.
தக்காளி கால் கிலோ நன்கு வேக வைத்துச் சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய்(தேவை எனில்) சேர்த்து அரைக்கவும். வெங்காயம் தேவைப்பட்டால் சேர்க்கலாம். பூண்டைக் குறைத்து வெங்காயம் சேர்க்கலாம். அல்லது பூண்டு போடாமல் வெங்காயம் சேர்க்கலாம்.
வதக்க, தாளிக்க எண்ணெய் அல்லது வெண்ணெய்/வனஸ்பதி, க்ரீம் அல்லது வெண்ணெய், அல்லது சீஸ், தயிர் கெட்டியாக. மஞ்சள் தூள்
கரம் மசாலா பவுடர் ஒரு டீஸ்பூன். கரம் மசாலா பவுடர் தயாரிப்பு முறை
சோம்பு 50 கிராம்
லவங்கப்பட்டை 25 கிராம்
லவங்கம் என்ற கிராம்பு ஐந்து எண்ணிக்கை
பெரிய ஏலக்காய் நான்கு
இவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் பொடித்து வைத்துக்கொள்ளவும். கிராம்பு அதிகம் சேர்த்தால் காரம் அதிகமாக இருக்கும்.
இப்போது கடாய் அல்லது நான்-ஸ்டிக் பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி ஒரு டீஸ்பூன் சர்க்கரை போடவும். சர்க்கரை கரைந்ததும் அரைத்த மசாலா விழுதைப் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். எண்ணெய் பிரிகையில் வடிகட்டி வைத்த தக்காளிச் சாறை ஊற்றவும். தேவையான உப்பைப் போடவும். சற்றுக் கொதித்ததும் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளைப் போடவும். உருளைக்கிழங்கு சேர்ந்து கொதித்துக் கொண்டிருக்கையில் தயிரை நீர்விடாமல் நன்கு கடைந்து அதில் மேலே ஊற்றவும். சற்று நேரம் பொறுத்துக் கீழே இறக்கிவிட்டுக் க்ரீம் அல்லது வெண்ணெய் சேர்க்கவும். இல்லை எனில் சீஸைத் துருவிச் சேர்க்கவும். பச்சைக்கொத்துமல்லியால் அலங்கரிக்கலாம். சப்பாத்தி, பராட்டாவிற்கு ஏற்ற சைட் டிஷ் இது.
உருளைக்கிழங்குக் காரக்கறி: உருளைக்கிழங்கு கால் கிலோ, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, எண்ணெய் வதக்க. கடுகு தாளிக்கத் தேவையான அளவு.
உருளைக்கிழங்கை மண்போக நன்கு கழுவித் தோலை நீக்கவேண்டுமானால் நீக்கிவிட்டுப் பொடிப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்து, நறுக்கிய உருளைக்கிழங்குகளைப் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மொறுமொறுவெனப் பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும்.
உருளைக்கிழங்கு காரக்கறி 2-ஆம் வகை: உருளைக்கிழங்கு கால் கிலோ, வெங்காயம் பெரியதெனில் இரண்டு, சின்ன வெங்காயம் என்றால் நூறுகிராம் தோல் உரித்துப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் ஒன்று, மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கருகப்பிலை, தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, பெருங்காயத்தூள். வதக்க எண்ணெய்.
உருளைக்கிழங்கைக் கழுவி வேக வைத்துத் தோலுரித்துக்கொண்டு ஒன்றிரண்டாக மசிக்கவும். அல்லது நான்கு பாகமாகவோ சிறிய துண்டுகளாகவோ நறுக்கிக்கொள்ளலாம். கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயப்பொடி, கருகப்பிலை, க.பருப்பு, உ.பருப்பு தாளித்துக்கொண்டு, பச்சைமிளகாயையும் அரிந்து போடவும். பின் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துக்கொண்டு நன்கு பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும். பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். நன்கு பொடி வாசனை போகும் வரை வதக்கி எடுக்கவும். இதிலேயே இறக்குகையில் கொஞ்சம் கரம்மசாலாவைப் போட்டால் மசாலா கிழங்காக ருசிக்கலாம். தேவை எனில் பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும்.
உருளைக்கிழங்கு போண்டோ:
மேலே சொன்ன மாதிரி கொஞ்சம்காரத்தைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்கு கறி தயாரித்துக்கொள்ளவும்.
மேல்மாவுக்குத் தேவையான பொருட்கள்; கடலைமாவு இரண்டு கிண்ணம், அரிசி மாவு அரைக்கிண்ணம், மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், கரைக்க நீர்.
பொரிக்க எண்ணெய்
கடலைமாவு, அரிசிமாவு,மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் உப்புச் சேர்த்துக்கலந்து கொண்டு நீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும்.
இப்போது தயாராக வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கறியை ஒரு எலுமிச்சம்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் வைத்து அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், அடுப்பைத் தணித்துக் கொண்டு உருளைக்கிழங்கு உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்துக்கொண்டு எண்ணெயில் போடவும். நன்கு திருப்பிப் போட்டு வெந்ததும் கரண்டியால் அரித்து எடுத்து வடிகட்டவும். சூடான தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்
உருளைக்கிழங்கு பஜ்ஜி:
உருளைக்கிழங்கு பெரிதாக ஒன்றிருந்தாலே போதும். நன்கு கழுவிக் கொண்டு தோலைச் சீவி விட்டு வட்ட வட்டமாகச் சீவித் தண்ணீரில் போடவும். உருளைக்கிழங்கை நன்கு தண்ணீரில் போட்டு அலசிவிட்டால் அதிலுள்ள மாவுச்சத்து குறையும் என்பார்கள். உண்பதில் கவலைப்படவேண்டாம்.
பஜ்ஜி மாவுக்கு: 2 கிண்ணம் கடலைமாவு, அரைக்கிண்ணம் அரிசி மாவு,அரைக்கிண்ணம்மைதா மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்,கரைக்க நீர், பொரிக்க எண்ணெய்
எல்லா மாவுகளையும் ஒன்றாய்க் கலந்து கொண்டு உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். நீர் விட்டுக் கொண்டு தோசைமாவு பதத்துக்குக் கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு எண்ணெய் காய்ந்ததும், வட்டமாக நறுக்கிய உருளைக்கிழங்கு வில்லைகளை மாவில் தோய்த்துக்கொண்டு எண்ணெயில் போடவும். சூடான தேங்காய்ச் சட்னி, கொத்துமல்லிச் சட்னியோடு பரிமாறவும்.
உருளைக்கிழங்கு வடை: ஜவ்வரிசி ஒரு கிண்ணம். தயிரில் ஊறப் போடவும். உருளைக்கிழங்கு பெரிதாக இரண்டு. வேகவைத்துத் தோலுரித்துக்கொள்ளவும். வேர்க்கடலை ஒரு கிண்ணம் நன்கு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். 6 பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு சின்னக் கட்டுக் கொத்துமல்லி சேர்த்து அரைத்த விழுது ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, பெருங்காயப் பொடி, காரப்பொடி(தேவையானால்) பச்சைமிளகாய்க் காரமே போதுமெனில் அதோடு நிறுத்திக்கொள்ளலாம். காரம் போதவில்லையெனில் அரைத்த விழுதையே இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம்.
இப்போது ஜவ்வரிசி நன்கு ஊறி இருக்கும். அதில் வேர்க்கடலை மாவு, வெந்த உருளைக்கிழங்கைச் சேர்த்துப் பிசையவும். காரத்திற்குத் தேவையான அளவு அரைத்த விழுது, உப்புச் சேர்க்கவும். பெருங்காயத்தூள், கருகப்பிலை தேவை எனில் சேர்க்கவும் அநேகமாகப் பிசைந்த மாவு கெட்டியாகவே இருக்கும். இல்லை எனில் கொஞ்சம் மைதாமாவோ அல்லது கடலைமாவோ சேர்க்கலாம். சற்றுநேரம் வைத்திருந்தால் ஜவ்வரிசி நன்கு ஊறி ஈரத்தை இழுத்துக்கொள்ளும்.
இப்போது கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு எண்ணெய் காய்ந்ததும், மாவை வடைகளாய்த் தட்டி எண்ணெயில் போடவும். ஜவ்வரிசி நன்கு பொரிந்து வடை மொறுமொறுவென வரும். சூடான தக்காளிச் சட்னி அல்லது புளிச்சட்னி, பச்சைச் சட்னியோடு சாப்பிடலாம்.
உருளைக்கிழங்கு தம் அல்லது ஆலு தம்: ஓரே மாதிரியான சின்னச் சின்ன உருளைக்கிழங்கு கால் கிலோ. வேகவைத்துத் தோல் உரித்துக்கொள்ளவும். வெந்த கிழங்கில் இரண்டு மூன்று இடங்களில் சற்றுப் பெரிய ஊசி அல்லது பல் குத்தும் குச்சியால் குத்திவிட்டுவிட்டு மிளகாய்த்தூள், உப்புச் சேர்த்து
வதக்கி வைத்துக்கொள்ளவும்.
தக்காளி கால் கிலோ நன்கு வேக வைத்துச் சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய்(தேவை எனில்) சேர்த்து அரைக்கவும். வெங்காயம் தேவைப்பட்டால் சேர்க்கலாம். பூண்டைக் குறைத்து வெங்காயம் சேர்க்கலாம். அல்லது பூண்டு போடாமல் வெங்காயம் சேர்க்கலாம்.
வதக்க, தாளிக்க எண்ணெய் அல்லது வெண்ணெய்/வனஸ்பதி, க்ரீம் அல்லது வெண்ணெய், அல்லது சீஸ், தயிர் கெட்டியாக. மஞ்சள் தூள்
கரம் மசாலா பவுடர் ஒரு டீஸ்பூன். கரம் மசாலா பவுடர் தயாரிப்பு முறை
சோம்பு 50 கிராம்
லவங்கப்பட்டை 25 கிராம்
லவங்கம் என்ற கிராம்பு ஐந்து எண்ணிக்கை
பெரிய ஏலக்காய் நான்கு
இவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் பொடித்து வைத்துக்கொள்ளவும். கிராம்பு அதிகம் சேர்த்தால் காரம் அதிகமாக இருக்கும்.
இப்போது கடாய் அல்லது நான்-ஸ்டிக் பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி ஒரு டீஸ்பூன் சர்க்கரை போடவும். சர்க்கரை கரைந்ததும் அரைத்த மசாலா விழுதைப் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். எண்ணெய் பிரிகையில் வடிகட்டி வைத்த தக்காளிச் சாறை ஊற்றவும். தேவையான உப்பைப் போடவும். சற்றுக் கொதித்ததும் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளைப் போடவும். உருளைக்கிழங்கு சேர்ந்து கொதித்துக் கொண்டிருக்கையில் தயிரை நீர்விடாமல் நன்கு கடைந்து அதில் மேலே ஊற்றவும். சற்று நேரம் பொறுத்துக் கீழே இறக்கிவிட்டுக் க்ரீம் அல்லது வெண்ணெய் சேர்க்கவும். இல்லை எனில் சீஸைத் துருவிச் சேர்க்கவும். பச்சைக்கொத்துமல்லியால் அலங்கரிக்கலாம். சப்பாத்தி, பராட்டாவிற்கு ஏற்ற சைட் டிஷ் இது.
Tuesday, August 2, 2011
நாரத்தை உணவுகள் சில.
நாரத்தங்காய் சாப்பிட்டால் சிலருக்கு அதன் பிறகு வரும் ஏப்பத்தினால் பிடிக்காது. ஆனால் நாரத்தங்காய் நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு உதவுவது எத்தனை பேருக்குத் தெரியும்? உணவு செரிமானம் ஆகத் தினமும் நாரத்தையை ஏதேனும் ஒரு உருவில் சாப்பிட்டு வரலாம். முதலில் நாரத்தங்காய்ப் பச்சடி செய்யும் முறையைப் பார்க்கலாமா? நன்கு வளர்ந்த நாரத்தங்காய் இரண்டு. செடியிலிருந்து பறித்தாலோ அல்லது விலைக்கு வாங்கினாலோ வாங்கியதும் நன்கு கழுவி விட்டுப் பின்னர் வெந்நீரில் மூழ்கப் போட்டு வைக்கவும். பத்து நிமிடங்கள் இருந்தால் போதும்.
தேவையான பொருட்கள்: நாரத்தை 2, புளி ஒரு எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் பத்து, ஐம்பது கிராம் இஞ்சி தோல் சீவிக்கொண்டு பொடியாக நறுக்கவும். பெருங்காயம், கடுகு, வெந்தயம், தாளிக்க எண்ணெய்(நல்லெண்ணெய் கிடைத்தால் நல்லது, இல்லை எனில் ஏதேனும் சமையல் எண்ணெய்), மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவைக்கு ஏற்ப.
புளியை நன்கு நீரில் கரைத்துக்கொள்ளவும். இரண்டு கிண்ணம் புளிச்சாறு இருக்கலாம். நாரத்தையைப் பொடிப் பொடியாக நறுக்கி விதைகளை நீக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலி, கல்சட்டி அல்லது உருளி, நான் ஸ்டிக் கடாய் ஏதேனும் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் போடவும். கடுகு வெடித்ததும், நாரத்தங்காய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள் சேர்த்துப் புளிக்கரைசலை ஊற்றி உப்பும் சேர்க்கவும். நன்கு புளி வாசனை போகக் கொதித்துக் கெட்டியானதும் கீழே இறக்குகையில் பிடித்தமானால் ஒரு சின்னத் துண்டு வெல்லம் சேர்க்கவும். சேர்க்காவிட்டாலும் சுவை குன்றாது. இது வாயு, பித்தம் போன்றவற்றுக்கும் குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றிற்கும் சிறந்தது. உடல் வெப்பம் குறையும். வயிற்றுப் புழு நீங்கும். பசியை அதிகரித்து நாக்கிற்குச் சுவை கூட்டும்.
நாரத்தை சாதம்: இது இருமுறைகளில் செய்யலாம். முதல்முறை சாதாரணமாக எலுமிச்சை சாதம் செய்யும் முறையாகும். நல்ல ஜாதி நார்த்தங்காய் எனில் அதில் சாறு நிறைய இருக்கும். ஆகவே நாலு பேருக்கு ஒரு நார்த்தங்காய் போதுமானது.
தேவையான பொருட்கள்: நார்த்தங்காய் ஒன்று, பச்சை மிளகாய் நான்கு, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு ஆகியவை ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன், கருகப்பிலை, தாளிக்க நல்லெண்ணெய் அல்லது ஏதேனும் சமையல் எண்ணெய். உப்பு தேவையான அளவுக்கு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை. சமைத்த சாதம் நான்கு கிண்ணம்.
சாதத்தை நன்கு உதிர்த்து உப்புச் சேர்த்துக்கொண்டு, மஞ்சள் தூள், நார்த்தைச் சாறு சேர்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை போன்றவை போட்டுத் தாளித்து வேர்க்கடலை வறுபட்டதும், ப.மிளகாய், கருகப்பிலை சேர்த்து அதைக் கலந்து வைத்த சாதத்தில் போட்டுக் கிளறவும். அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம்.
அடுத்த முறை: இதற்கும் நார்த்தங்காய் மற்றப் பொருட்கள் அனைத்தும் முன்னர் சொன்னபடியே எடுத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய் இரண்டைக் குறைத்துக்கொண்டு காய்ந்த மிளகாய் இரண்டை எடுத்துக்கொள்ளவும். தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், மி.வத்தல் போன்றவற்றைச் சிறிது உப்புச் சேர்த்து நன்கு அரைக்கவும். தண்ணீர் விட வேண்டாம். பின்னர் அதை வடித்த சாதத்தில் போட்டுக் கலக்கவும். நாரத்தைச் சாறு பிழிந்து கொண்டு சாதத்தில் கலக்கவும். பின்னர் மேலே சொன்னபடி தாளிதம் செய்து கொண்டு தாளிதத்தைச் சாதத்தில் கலக்கவும். தயிர்ப்பச்சடியோடு பரிமாறவும்.
நார்த்தை இலைப்பொடி அல்லது வேப்பிலைக்கட்டி: இதற்கு நார்த்தை இலைகளை நடுவில் நரம்பு நீக்கி இரண்டு கிண்ணங்கள் எடுத்து வெயிலில் காய வைத்துக்கொள்ளவும். ஓமம் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு.
இன்னொரு முறையில் ஓமத்தைக் குறைத்துக் கொண்டு மி.வத்தல் நான்கு அல்லது ஐந்து, உ.பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.எல்லாப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கொண்டு மிக்சியில் போட்டுப் பொடி செய்து கொள்ளவும். வாயில் வரும் சுவையற்ற தன்மை நீங்கவும், உணவுச் சுவை தெரியவும் இந்தப் பொடியில் கொஞ்சம் சூடான சாதத்தைப் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிட்டால் நல்லது. மோர் சாதத்துக்கும் ஊறுகாய் போல் பயன்படும்.
Friday, July 1, 2011
உங்கள் மேனிப் பராமரிப்புக்கு
வீட்டு மருந்துக் குறிப்புகள்:
கண்களுக்குக்கீழே உள்ள கருவளையம் போக்கப் பயத்த மாவு, கசகசாவை அரைத்துப் பூசி வர வேண்டும்.
தோல் தடிப்புக்கு பூவன் வாழைப்பழத்தை மசித்து மேலே தேய்க்கவும்.
சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்க பச்சைப் பயறு மாவு, கொண்டைக்கடலை மாவு, அரிசி மாவு, சர்க்கரை சம அளவு எடுத்துக் குழைத்து முகத்தில் தடவிக்கொள்ளவும். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யவும். சற்று நேரம் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவவும். கடுக்காய்ப் பிஞ்சை வாங்கி மோரில் ஊற வைத்து அம்மியில் அரைத்து விழுதைத் தலையில் தேய்த்துக்கொள்ளவேண்டும். பதினைந்து நிமிடம் ஊறிவிட்டுக் குளித்தால் உடலுக்கும், தலைச்சூடு குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்.
50 கிராம் எள்ளை நன்கு ஊற வைக்கவும். அதை நன்கு அரைத்துத் தலையில் தடவிக்கொண்டு சிறிது நேரம் ஊறிவிட்டுக் குளிக்கவும். தலைச்சூடு குறைவதோடு நரையும் தெரியாது.
வீட்டிலேயே சீயக்காய்த் தூள் கலக்கும் முறை:
சீயக்காய், காய்களாக அரைகிலோ வாங்கிக் காய வைத்துக்கொள்ளவும். இதோடு பச்சைப் பயறு கால் கிலோ, புழுங்கலரிசி, நூறு கிராம், கோரைக்கிழங்கு கால் கிலோ, வெந்தயம் நூறு கிராம், வேப்பிலை காய வைத்தது இரண்டு கைப்பிடி, வெட்டி வேர்(நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்) 50 கிராம், எலுமிச்சைத் தோல்கள் காய வைத்தது, செம்பருத்திப் பூக்கள், இலைகள், இரண்டு கைப்பிடி, கறிவேப்பிலை காய்ந்தது இரண்டு கைப்பிடி, நெல்லிமுள்ளி(நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்) 50 கிராம் அல்லது பத்து பெரிய நெல்லிக்காய்கள் காய வைத்தது. இவை அனைத்தையும் நன்கு காய வைத்து சீயக்காய் அரைக்கும் மாவு மிஷினில் கொடுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளிக்கையில் பயன்படுத்தலாம். தினசரி உடலுக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொண்டு ஊறிப் பின்னர் இந்தப் பொடியாலும் உடலைத் தேய்த்துக்கழுவலாம்.
இப்போதெல்லாம் இவை பொய்யாய்ப்பழங்கதையாய்ப் போய்விட்டன. என்றாலும் இம்முறையில் சீயக்காய் அரைத்துத் தலைக்குத் தேய்த்துக்குளித்தபோது இருந்த சுகமும், தலைமுடியின் அடர்த்தியும், நீளமும் இப்போதெல்லாம் காண முடியவில்லை. மேலும் ஆங்கில மருத்துவர்கள் வேறே எண்ணெய்க் குளியலே கூடாது என்றும் உடலில் எண்ணெயே பட வேண்டாம் என்றும் கூறிவிடுகிறார்கள். அவ்வப்போது இம்மாதிரிக்குறிப்புகள் வரும்.
கண்களுக்குக்கீழே உள்ள கருவளையம் போக்கப் பயத்த மாவு, கசகசாவை அரைத்துப் பூசி வர வேண்டும்.
தோல் தடிப்புக்கு பூவன் வாழைப்பழத்தை மசித்து மேலே தேய்க்கவும்.
சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்க பச்சைப் பயறு மாவு, கொண்டைக்கடலை மாவு, அரிசி மாவு, சர்க்கரை சம அளவு எடுத்துக் குழைத்து முகத்தில் தடவிக்கொள்ளவும். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யவும். சற்று நேரம் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவவும். கடுக்காய்ப் பிஞ்சை வாங்கி மோரில் ஊற வைத்து அம்மியில் அரைத்து விழுதைத் தலையில் தேய்த்துக்கொள்ளவேண்டும். பதினைந்து நிமிடம் ஊறிவிட்டுக் குளித்தால் உடலுக்கும், தலைச்சூடு குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்.
50 கிராம் எள்ளை நன்கு ஊற வைக்கவும். அதை நன்கு அரைத்துத் தலையில் தடவிக்கொண்டு சிறிது நேரம் ஊறிவிட்டுக் குளிக்கவும். தலைச்சூடு குறைவதோடு நரையும் தெரியாது.
வீட்டிலேயே சீயக்காய்த் தூள் கலக்கும் முறை:
சீயக்காய், காய்களாக அரைகிலோ வாங்கிக் காய வைத்துக்கொள்ளவும். இதோடு பச்சைப் பயறு கால் கிலோ, புழுங்கலரிசி, நூறு கிராம், கோரைக்கிழங்கு கால் கிலோ, வெந்தயம் நூறு கிராம், வேப்பிலை காய வைத்தது இரண்டு கைப்பிடி, வெட்டி வேர்(நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்) 50 கிராம், எலுமிச்சைத் தோல்கள் காய வைத்தது, செம்பருத்திப் பூக்கள், இலைகள், இரண்டு கைப்பிடி, கறிவேப்பிலை காய்ந்தது இரண்டு கைப்பிடி, நெல்லிமுள்ளி(நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்) 50 கிராம் அல்லது பத்து பெரிய நெல்லிக்காய்கள் காய வைத்தது. இவை அனைத்தையும் நன்கு காய வைத்து சீயக்காய் அரைக்கும் மாவு மிஷினில் கொடுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளிக்கையில் பயன்படுத்தலாம். தினசரி உடலுக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொண்டு ஊறிப் பின்னர் இந்தப் பொடியாலும் உடலைத் தேய்த்துக்கழுவலாம்.
இப்போதெல்லாம் இவை பொய்யாய்ப்பழங்கதையாய்ப் போய்விட்டன. என்றாலும் இம்முறையில் சீயக்காய் அரைத்துத் தலைக்குத் தேய்த்துக்குளித்தபோது இருந்த சுகமும், தலைமுடியின் அடர்த்தியும், நீளமும் இப்போதெல்லாம் காண முடியவில்லை. மேலும் ஆங்கில மருத்துவர்கள் வேறே எண்ணெய்க் குளியலே கூடாது என்றும் உடலில் எண்ணெயே பட வேண்டாம் என்றும் கூறிவிடுகிறார்கள். அவ்வப்போது இம்மாதிரிக்குறிப்புகள் வரும்.
Subscribe to:
Posts (Atom)
