எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, August 15, 2014

காஞ்சிபுரம் இட்லி அடை! :)

காஞ்சிபுரம் இட்லி அடை

ஹா,ஹா, என்ன பெயர் வைக்கிறதுனு யோசிச்சுட்டு இந்தப் பெயரை வைச்சுட்டேன்.  காஞ்சிபுரம் இட்லிமாவு மிஞ்சினதுனு சொன்னேன் இல்லையா?  அதோட கூடக் கொஞ்சம் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஊற வைத்துக் கொஞ்சமாய் மி.வத்தல், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்து இந்த இட்லி மாவோடு சேர்த்துக் கொண்டு அடையாக வார்த்தேன்.  ஒருநாள் பாடு தீர்ந்தது. :))))  கீழே படங்கள் பார்க்கலாம்.




கீழே காஞ்சிபுரம் இட்லி மாவு



இதிலே தான் அரைத்த து.பருப்பு, க. பருப்பு மாவு



எல்லாத்தையும் ஒண்ணாய்க் கலந்த மாவு.  இதான் அடையாக வார்த்தேன்.  அடை வார்க்கையில் படம் எடுக்க முடியலை. :)

3 comments:

  1. நல்ல ஐடியா. வார்த்தவுடன் எப்படி வந்தது என்றும் படம் போட்டிருக்கலாமே....

    ReplyDelete
    Replies
    1. grrrrrrrrrrrrrrrrrrr அதான் முந்தைய பதிவிலே சொல்லி இருக்கேனே! பையர் ஃபோன் வந்துடுச்சு, அதனால் படம் எடுக்க மறந்து போச்சுனு! ஒழுங்காப் படிக்கிறதில்லை. ரிவிஷன் பண்ணுங்க. தேர்வு இருக்கு. :P :P :P

      Delete
  2. நல்ல யோசனை. காஞ்சிபுரம் இட்லி ஒருநாள் வார்த்து பார்க்கணும். அப்போ மிஞ்சினால் இதை செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete