எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, January 10, 2013

பொரிச்ச கூட்ட்டு வா ஆஆஆஆஆஆஆஆஆரம்!

அடுத்ததும் பொரிச்ச கூட்டுத்தான்.  இதுக்குக் கொத்தவரைக்காய், அவரைக்காய், பீன்ஸ் போன்றவைக்கே முதலிடம்.  எனினும் சில சமயம் செளசெளவிலோ, பூஷணிக்காயிலோ போனாப்போகுதுனு செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

மேலே சொன்ன காய்களில் ஏதேனும் ஒன்று கால் கிலோ, தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்(கழுவி, நனைத்து ஊற வைக்கவும்.) சாம்பார்ப் பொடி ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயம் கட்டி அல்லது பொடி சிறிதளவு.  தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, தாளிக்கத் தே. எண்ணை சிறந்தது, இல்லைனா சமையல் எண்ணெய் ஏதானும் ஒன்று ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன்.

கடலைப்பருப்பை நன்கு ஊற வைத்து முதலில் வேக வைக்கவும்.  பின்பு நறுக்கிய காய்களை அவரை, கொத்தவரை, பீன்ஸ் போன்றவை என்றால் வேறொரு கடாயில் சிறிது வதக்கி வெந்து கொண்டிருக்கும் பருப்பில் சேர்க்கவும்.  மற்றக் காய்கள் எனில் நறுக்கி அப்படியே சேர்க்கலாம்.  சாம்பார்ப் பொடி ஒரு டீஸ்பூன் போட்டுத் தேவையானால் மஞ்சள் பொடி சேர்க்கவும்.  கொஞ்சம் வெந்ததும் உப்புச் சேர்க்கவும்.  நன்கு வெந்து சேர்ந்து வரும் சமயம் தே.எண்ணெயில் கடுகு, உபருப்பு, பெருங்காயம் சேர்த்துத் தேங்காய்த் துருவலைப் போட்டு வறுத்துக் கொண்டு  கடைசியில் கருகப்பிலையைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டிக் கொண்டு கூட்டில் கொட்டிக் கலக்கவும்.  அதுவே சேர்ந்து இருக்கும்.  சேர்ந்து இல்லை என்றாலோ அல்லது மாவு சேர்ப்பது பிடித்தம் என்றாலோ அரிசி மாவு இரண்டு டீஸ்பூன் கரைத்து ஊற்றிக் கொஞ்சம் கொதிக்க விடவும்.

No comments:

Post a Comment