<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188</id><updated>2012-02-17T08:00:28.461-08:00</updated><title type='text'>சாப்பிடலாம்  வாங்க</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>47</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-8310484138994116094</id><published>2012-02-16T05:56:00.001-08:00</published><updated>2012-02-16T06:09:20.312-08:00</updated><title type='text'>உங்க ஊரில் மாவடு வர ஆரம்பிச்சுட்டதா?</title><content type='html'>இப்போ ஊறுகாய் போடும் பருவம் ஆரம்பிச்சாச்சு. இன்னும் கொஞ்ச நாட்களில் மாவடு, மாங்காய் வர ஆரம்பித்துவிடும்.  முதல்லே மாவடு போடுவது எப்படினு பார்க்கலாமா?  மாவடு பலருக்கும் பிடிக்கும் என்றாலும் யாரும் வீட்டில் போடுவதில்லை.  அது என்னமோ பெரிய வேலைனு நினைக்கிறாங்க போல.  இல்லை; மாவடு போடுவது ரொம்பவே எளிதான ஒன்று. எப்படினு கேட்கிறீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;முதல்லே மாவடு சீசனில் கிடைக்கும் நல்ல உருண்டை வடுவாக வாங்கிக் கொள்ளவும். விலையா?  அதிகம் இல்லை ஜென்டில் உமன்!  கிலோ 100ரூபாய்னு தான் சொல்வாங்க. :)))))&lt;br /&gt;&lt;br /&gt;உருண்டை வடு கிடைக்கலையா? சரி,கவலை படேல். நீள வடுவே வாங்கிக்கலாம்.  எந்த வடுவானாலும் காம்புகளோடு இருக்கணும்.  கூடியவரை எடை போட்டு வாங்குங்க.  படியில் அளந்து வாங்க வேண்டாம்.  இப்போ மூன்று கிலோ மாவடுக்குத் தேவையான பொருட்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மிளகாய் வற்றல் 100 கிராம்(காரம் வேண்டுமெனில் கூட வைச்சுக்கலாம்.), கடுகு 50 கிராம், மஞ்சள்(பச்சை கிடைத்தால் நல்லது, இல்லையெனில் மஞ்சள் தூள்) விளக்கெண்ணெய் நூறு கிராம். பெருங்காயம் தேவை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உப்பு இதான் முக்கியமான ஒன்று முன்பெல்லாம் ஒரு படி மாவடுக்கு 1/8 படி உப்பு அதாவது சென்னை அளவில் ஆழாக்கு உப்பு என்ற கணக்கு உண்டு.  இப்போக்கிலோவில் என்பதால் உப்பு மூன்றுகிலோ மாவடுக்கும் சேர்த்து 300 கிராம் எடுத்துக்கொள்ளவும்.  அல்லது ஆழாக்கில் இரண்டு எடுத்துக்கொள்ளவும்.  ஒரு சிலர் உப்பை நீர் விட்டுக் காய்ச்சி ஆற வைத்து விடுவார்கள்.  அப்படியும் விடலாம்.  உப்பை அப்படியே வெறும் வாணலியில் வறுத்தும் போடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவடுவை நன்கு கழுவி நீரை வடிகட்டிக்கொள்ளவும்.  மிளகாய் வற்றல், கடுகு, மஞ்சள் சேர்த்துக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.  அல்லது பொடியாகவும் செய்து கொள்ளலாம்.   எப்படியும் நீர் விட்டுக்கொண்டு விடும்.  ஆகையால் அதிகம் நீர் சேர்க்காமல் பொடியாகவே வைத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊறுகாய் போடும் ஜாடியில் அடியில் கொஞ்சம் உப்பு, மிளகாய்,கடுகு, மஞ்சள் கலவை போட்டுவிட்டு அதன் மேல் மாவடு ஒரு கை போடவும்.  இப்போது மீண்டும் உப்பு, மிளகாய்க்கலவை, திரும்ப மாவடு என்று இரண்டும் முழுதும் போட்டு முடிக்கவும்.  கடைசியில் மிச்சம் இருக்கும் உப்பு,மிளகாய்க் கலவையை மேலே போட்டுவிட்டு விளக்கெண்ணெயை ஊற்றிவிட்டுக் கிளற வேண்டாம்.  அப்படியே மூடி வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் திறந்து பார்த்தால் கொஞ்சம் ஜலம் விட்டிருக்கும்.  இப்போது நன்கு கிளறிவிடவும்.  கிளறுவதற்கு மரக்கரண்டிகளையே பயன்படுத்தவும்.  குறைந்தது நான்கு, ஐந்து நாட்கள் இப்படிக் கிளறிவிட்டுக்கொண்டே வந்தால் மாவடு சுருங்க ஆரம்பிக்கும்.  நன்கு சுருங்கிவிட்டதெனில் மாவடு நன்கு ஊறி இருப்பதாகப் பொருள். எடுத்துப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். மறக்காமல் தினமும் ஒரு முறை கிளறிவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலர் மாவடு சுருங்கினால் வெடுக்கென இருக்காது என நினைத்துக்கொண்டு அதில் ஐஸைப் போடுவது, அல்லது குளிர்பெட்டியில் வைப்பது, உப்பை நிறையவும் போட்டு ஐஸையும் போடுவது எனச் செய்வார்கள்.  இவை எதுவுமே தேவை இல்லை.  தேவையான உப்பைப் போட்டுவிட்டுத் தினமும் கிளறிக் கொடுத்துவந்தாலே போதுமானது.  ஒரு வருடம் ஆனாலும் வெளியேயே வைத்திருக்கலாம்;  வீணாகாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-8310484138994116094?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/8310484138994116094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=8310484138994116094' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/8310484138994116094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/8310484138994116094'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2012/02/blog-post_16.html' title='உங்க ஊரில் மாவடு வர ஆரம்பிச்சுட்டதா?'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-699513654171502801</id><published>2012-02-05T16:28:00.001-08:00</published><updated>2012-02-05T16:30:37.624-08:00</updated><title type='text'>காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிட வாங்க!</title><content type='html'>இப்போ நல்லாக் காய்கள் எல்லாம் விதம் விதமாய்க் கிடைக்கும்.  இந்தக் காய்கள் எல்லாப் பருவங்களிலும் கிடைக்காது.  இப்போக் கிடைக்கும் காய்களை வைத்து ஊறுகாய் போடுவது எப்படினு பார்க்கலாமா?  இந்த ஊறுகாய் செய்து வைத்துக்கொண்டால் சப்பாத்திக்குக் காய் கிடைக்கலைனா சைட் டிஷ் ஆகப் பயன்படுத்திக்கலாம். ஏதேனும் ஒரு பருப்பை வேகவைத்து தால் பண்ணிண்டால் போதும்.  காய்கள் கொஞ்சம் இருந்தாலே போதுமானது.  ஒவ்வொன்றிலும் வகைக்கு ஒன்றாக இருந்தாலே இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வரும். தேவையான காய்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;காரட் இரண்டு&lt;br /&gt;&lt;br /&gt;பீட்ரூட் பெரிது என்றால் ஒன்று, சின்னது என்றால் 2&lt;br /&gt;&lt;br /&gt;டர்னிப் அதே போல் பெரிது ஒன்று அல்லது சின்னது 2&lt;br /&gt;&lt;br /&gt;நூல்கோலும் அவ்வாறே.&lt;br /&gt;&lt;br /&gt;சிவப்புக் குடைமிளகாய் பெரிதாக ஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள் குடைமிளகாய் பெரிதாக ஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;காலி ஃப்ளவர் தேவை எனில் உதிர்த்துக்கொண்டு ஒரு கிண்ணம்&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை மிளகாய் நூறு கிராம்&lt;br /&gt;&lt;br /&gt;இஞ்சி நூறு கிராம் (இளசாக)&lt;br /&gt;&lt;br /&gt;மாங்காய் இஞ்சி (கிடைத்தால்) 50 கிராம்&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை மஞ்சள் நூறு கிராம் இளசாக&lt;br /&gt;&lt;br /&gt;மாங்காய் கிடைத்தால் ஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;எலுமிச்சம்பழம் பத்து நல்ல சாறுள்ளதாக. &lt;br /&gt; &lt;br /&gt;சர்க்கரை கால் கிண்ணம்&lt;br /&gt;&lt;br /&gt;உப்பு தேவையான அளவு&lt;br /&gt;&lt;br /&gt;மிளகாய்த் தூள் 50 கிராம்&lt;br /&gt;&lt;br /&gt;நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் 250 கிராம்&lt;br /&gt;&lt;br /&gt;கடுகு, வெந்தயப் பொடி கால் கிண்ணம், சோம்பு 50 கிராம் வெறும் வாணலியில் வறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வினிகர்(white cooking vinegar) ஒரு கிண்ணம்&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து எலுமிச்சம்பழம் சாறு பிழிந்து ஊறுகாய் போடும் பாத்திரத்தில் ஊற்றிவிடவும்.  மிச்சம் ஐந்து பழத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி அதோடு சேர்க்கவும். ,மாங்காயையும் அவ்வாறே துண்டம் துண்டமாக நறுக்கி எலுமிச்சைச் சாறும் எலுமிச்சைத் துண்டங்களோடும் சேர்த்துப் போடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;காய்களை நன்கு கழுவிக் கொண்டு பீட்ரூட், காரட், டர்னிப், நூல்கோல் போன்றவற்றைத் தோல் சீவிக் கொண்டு ஒரு இஞ்ச் நீளத்தில் மெலிதாக நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.&lt;br /&gt;உதிர்த்த காலிஃப்ளவர் பூக்களை கொதிக்கும் வெந்நீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துச் சிறிது நேரம் வைத்து விட்டு வடிகட்டிக்கொள்ளவும்.&lt;br /&gt;குடைமிளகாய்களையும், பச்சை மிளகாயையும் தேவைக்கு ஏற்ப நறுக்கிக் கொள்ளவும்.  பச்சை மிளகாய் பெரிதானால் இரண்டாக நறுக்கிக் கொண்டு குறுக்கே வாயைப் பிளந்து வைத்துக் கொள்ளவும். &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் இஞ்சி, மஞ்சள், மாங்காய் இஞ்சி போன்றவற்றையும் தோலைச் சீவிக் கொண்டு ஒரு இஞ்ச் நீளத்தில் மெலிதாக நறுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடாய் அல்லது நான்  ஸ்டிக் கடாயில் ஒரு கரண்டி சமையல் எண்ணெயை ஊற்றிக் கொண்டு முதலில் இஞ்சி, மஞ்சள், மாங்காய் இஞ்சி நறுக்கியவற்றை வதக்கவும்.  நன்கு வதங்கியதும் தனியே எடுத்து ஆற வைக்கவும்.  பின்னர் மிளகாய்களை அதே போல் வதக்கவும்.  மிளகாய் சீக்கிரம் வதங்கி விடும். அதையும் தனியே எடுத்து ஆற வைக்கவும். இப்போது எண்ணெய் கடாயில் இல்லை எனில் மேலும் ஒரு கரண்டி ஊற்றிக் கொண்டு காய்களைப் போட்டு வதக்கவும். காய்கள் கொஞ்சம் வதங்கியதும், காய்களுக்கு மட்டும் தேவையான உப்பைப் போட்டுக் கொஞ்சம் மஞ்சள் தூள் தூவவும். காய்கள் நன்கு வதங்க வேண்டும். பின்னர் அதையும் எடுத்து ஆற வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;எலுமிச்சை, மாங்காய் சேர்த்துப் போட்டிருக்கும் பாத்திரத்தில் வதக்கி ஆறவைத்த காய்களைச் சேர்க்கவும். தேவையான உப்பையும், மிளகாய்த் தூள், சர்க்கரை போன்றவற்றைச் சேர்க்கவும்.  நன்கு கலந்து விடவும்.  ஒரு நாள் அப்படியே வைத்துவிட்டு மறு நாள் வதக்கியதுக்கு எடுத்தது போக மீதம் உள்ள எண்ணெயை நன்கு சூடு பண்ணி ஆறவிட்டு ஊறுகாயில் சேர்த்துக் கலக்கவும்.   கடுகு, வெந்தயப் பொடி, வறுத்த சோம்பு போன்றவற்றையும் சேர்க்கவும். இவை நன்கு ஆறியதும் வினிகர் ஊற்றிக் கலந்து ஊறுகாயை இரண்டு நாட்கள் நன்கு ஊறவிட்டுப் பின் பாட்டிலில் போட்டுப் பயன்படுத்தவும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைக்குப் படம் எடுத்துப் போடறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-699513654171502801?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/699513654171502801/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=699513654171502801' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/699513654171502801'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/699513654171502801'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2012/02/blog-post.html' title='காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிட வாங்க!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-7871952614152702864</id><published>2012-01-11T05:39:00.001-08:00</published><updated>2012-01-11T05:41:33.379-08:00</updated><title type='text'>பொங்கலுக்குத் தனித்தனியான ஒரு கூட்டு!</title><content type='html'>சர்க்கரைப்பொங்கல்:&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் கிட்டத்தட்ட அக்கார அடிசில் போலத்தான்.  ஆனால் அவ்வளவு பால் தேவையில்லை.  அக்கார அடிசிலுக்கு முழுக்க முழுக்கப் பாலிலேயே வேக வைத்தால் நன்றாய் இருக்கும். இதற்குக்கொஞ்சம் நீரும் சேர்த்துக்கொள்ளலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருட்கள்: &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல பச்சரிசி இரண்டு கிண்ணம், பாசிப்பருப்பு முக்கால் கிண்ணம், வெல்லம் அரை கிலோ தூள் செய்து கொள்ளவும்.  பால் அரை லிட்டர், நெய் 200 கிராம், முந்திரிப்பருப்பு 50 கிராம், திராக்ஷை 50 கிராம், தேங்காய்ப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய், ஜாதிக்காய்ப் பொடி, பச்சைக்கற்பூரம்(பிடித்தால்) வேக வைக்க நீர்.&lt;br /&gt;&lt;br /&gt;வாணலியை அடுப்பில் ஏற்றிச் சூடாக்கிக்கொண்டு பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் தனித்தனியாக நன்கு சிவக்க வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும்.  அடுப்பில் அடி கனமான உருளி அல்லது வேறு கனமான பாத்திரத்தை வைத்துப் பாலும் நீரும், நெய்யுமாய்க் கலந்து வைக்கவும் .  பால் கொதித்து வருகையில் பாசிப்பருப்பை நன்கு களைந்து அதில் சேர்க்கவும். பருப்பு நன்கு உருத்தெரியாமல் வெந்ததும், அரிசியைச் சேர்க்கவும்.  மீதம் இருக்கும் பாலையும் ஊற்றிவிட்டுத் தேவையானால் நீரும் சேர்த்துக்கொள்ளவும்.  அரிசியும், பருப்பும் நன்கு குழைந்து கெட்டிப்படும் போது வெல்லத்தைச் சேர்க்கவும்.  தேவையானால் கொஞ்சம் நெய் சேர்க்கலாம்.  கைவிடாமல் கிளறவும்.  அடியில் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வெல்ல வாசனை நன்கு போய்ச் சேர்ந்து சுருண்டு வரும்போது அடுப்பை அணைத்துவிட்டுப் பக்கத்தில் வேறொரு வாணலியில் நெய்யை ஊற்றிக்கொண்டு, முந்திரிப்பருப்பு, திராக்ஷை, தேங்காய்க் கீற்று போன்றவற்றைப் போட்டு நன்கு வறுத்துப் பொங்கலில் சேர்க்கவும்.  ஏலக்காய், ஜாதிக்காய்ப் பொடியைச் சேர்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;தனிக்கூட்டு:  &lt;br /&gt;&lt;br /&gt;இது தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பொங்கலன்று செய்யப்படுகிறது.  இதைத் தவிர சுமங்கலிப் பிரார்த்தனை என்னும் விசேஷங்களிலும் தஞ்சை மாவட்டக்காரர்கள் செய்வார்கள்.  இதற்கு 5 முதல் ஏழு காய்கள் வரை உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேக வைத்துக்கொள்ள வேண்டும்.  காய்களைத் தனியாக வேக வைத்து இந்தக் கூட்டு கிரேவியைத் தனியாகச் செய்து கொண்டு பின்னர் காய்களில் போட்டுக் கலப்பார்கள்.  விபரமாக இப்போது பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குத் தேவையான காய்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;வாழைக்காய் பெரிதாக ஒன்று அல்லது மீடியம் சைசில் இரண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கத்திரிக்காய் கால் கிலோ&lt;br /&gt;&lt;br /&gt;பறங்கிக்காய் கால் கிலோ&lt;br /&gt;&lt;br /&gt;அவரைக்காய் கால் கிலோ&lt;br /&gt;&lt;br /&gt;சேனைக்கிழங்கு கால் கிலோ&lt;br /&gt;&lt;br /&gt;சர்க்கரை வள்ளிக்கிழங்கு கால் கிலோ&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை மொச்சை தோலுரித்தது இரண்டு கிண்ணம்&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்புக் கொண்டைக்கடலை(காய்ந்தது)  ஒரு சிறு கிண்ணம்&lt;br /&gt;&lt;br /&gt;மொச்சை காய்ந்தது ஒரு சிறு கிண்ணம்&lt;br /&gt;&lt;br /&gt;தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு சின்ன மூடி&lt;br /&gt;&lt;br /&gt;தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை, தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரேவி தயாரிக்க&lt;br /&gt;&lt;br /&gt;புளி கால் கிலோ ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும்,  உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம் நூறு கிராம் தூள் செய்தது. வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரைக்க&lt;br /&gt;&lt;br /&gt;மிளகாய் வற்றல் பத்து, நூறு கிராம் தனியா, கடலைப்பருப்பு 2 டேபிஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு இரண்டு டீஸ்பூன், தேங்காய் துருவல், பெருங்காயம் ஒரு சின்ன துண்டு. ஒரு சின்ன மூடி. வறுக்க எண்ணெய்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் காய்களைத் தனித்தனியாக உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.  பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாகச் சிவக்க எண்ணெயில் வறுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிகனமான வாணலி அல்லது கடாயில் புளிக் கரைசலை ஊற்றி உப்பையும் மஞ்சள் தூளையும் போட்டுப் புளி வாசனை போகக் கொதிக்க விடவும்.  அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து ஒரு கொதி விடவும்.  சேர்ந்து வரும்போது, இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணையைப் போட்டு நூறு கிராம் பொடி செய்த வெல்லத்தையும் போடவும்.  நன்கு கொதிக்க விடவும்.  ரொம்பத் தளர்த்தியாகவும் இல்லாமல், ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல் கரண்டியால் எடுக்கும் பதம் வரும் சமயம் இன்னொரு வாணலியைப் பக்கத்தில் வைத்துத் தேங்காய் எண்ணெயை ஒரு பெரிய கரண்டி ஊற்ற வேண்டும்.  எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மொச்சை, கொண்டைக்கடலை, தேங்காய்க் கீற்றுகள், கருகப்பிலை போன்றவற்றை நன்கு வறுத்துக் கொதிக்கும் கூட்டு கிரேவியில் கொட்டிக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;காய்களுக்கு ஒவ்வொன்றாகத் தனித்தனியாக எடுத்துக்கொண்டு கூட்டு கிரேவியை ஒரு பெரிய கரண்டி ஊற்றிக் கலந்து கொள்ளவும்.  வேக வைத்த எல்லாக் காய்களையும் இம்முறையில் கலக்கவும்.  பொதுவாகக் காய்கள் நான்கு என்றால் இந்தத் தனிக்கூட்டையும் சேர்த்து ஐந்தாக வழிபாட்டில் படையலுக்கு வைப்பார்கள்.  இல்லை எனில் காய்கள் ஆறு+தனிக்கூட்டு என ஏழு இருக்கவேண்டும்.  ஒற்றைப்படையில் வைக்கவேண்டும் என்பதே முக்கியம். &lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் வழிபாடு முடிந்ததும், மீதம் இருக்கும் எல்லாக் காய்களைப் போட்டுக் கலந்த கூட்டுக்களை ஒன்றாய்ச் சேர்த்து மீதம் இருக்கும் தனிக்கூட்டு கிரேவியையும் கலந்து நறுக்காமல் காய்கள் மீதம் இருந்தால் அவற்றையும் நறுக்கிப் போட்டு நன்கு கொதிக்க வைப்பார்கள். இதை எரிச்ச கறி என்று சொல்வதுண்டு.  சில வீடுகளில் பொங்கல் கழிந்து ஒரு மாதம் வரையும் கூட இந்த எரிச்ச கறி மீதம் தொடர்ந்து வரும்.  தினம் தினம் இதைக்கொதிக்க வைக்கவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-7871952614152702864?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/7871952614152702864/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=7871952614152702864' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/7871952614152702864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/7871952614152702864'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2012/01/blog-post_11.html' title='பொங்கலுக்குத் தனித்தனியான ஒரு கூட்டு!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-6166439769177738708</id><published>2012-01-10T04:03:00.000-08:00</published><updated>2012-01-10T04:04:34.752-08:00</updated><title type='text'>திருவாதிரைக்களி செய்முறையும், ஏழுதான் குழம்பும்!</title><content type='html'>திருவாதிரைக்களி செய்முறை:&lt;br /&gt;தேவையான பொருட்கள்:&lt;br /&gt;நல்ல பச்சரிசி இரண்டு கிண்ணம்.  வெல்லம் தூள் செய்தது மூன்று கிண்ணம்.  து.பருப்பு ஊற வைத்தது ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு சின்ன மூடி, முந்திரிப்பருப்பு, தாளிக்க, வறுக்க நெய் இரண்டு டேபிள் ஸ்பூன். ஏலக்காய்ப்பொடி அரை டீஸ்பூன்.  வேக வைக்க நீர்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசியைக் களைந்து சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.  ஊறின அரிசியில் இருந்து நீரைச் சுத்தமாக வடித்து வைக்கவும்.  வடிகட்டி இருந்தால் அதில் போட்டு நீரை வடிக்கவும்.  நீர் நன்றாக வடிய வேண்டும்.  ஒரு மணி நேரம் வைத்திருந்த பின்னர் அடுப்பில் ஒரு கடாயை ஏற்றிச் சூடு செய்யவும்.   அதில் இந்த அரிசியைக் கொஞ்சம்கொஞ்சமாகப் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.  மொத்த அரிசியையும் இப்படி வறுத்துக்கொண்டு ஆற வைக்கவும்.  ஆறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு ரவை போல் உடைக்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அடுப்பில் நான் ஸ்டிக் பாத்திரம் அல்லது வெண்கல உருளி அல்லது அடி கனமான பாத்திரம் ஒன்றை ஏற்றி நாலு கிண்ணம் நீரை ஊற்றவும். கொஞ்சம் கூட வைத்தாலும் நீர் கொதித்ததும் எடுத்துத் தனியாக வைத்துக்கொண்டால் பின்னால் தேவைப்படும்போது கொஞ்சம்கொஞ்சமாக ஊற்றிக்கொள்ளலாம்.  நீர் நன்கு கொதித்து வருகையில் ஊற வைத்த துவரம்பருப்பைப் போட்டு ஒரு கொதி வரும்போது தூள் வெல்லத்தையும் போடவும். வெல்ல வாசனை போகக் கொதிக்க வேண்டும்.  கொதித்ததும் அரைத்துப் பொடித்த மாவைப் போட்டுக்கொண்டே கிளறவேண்டும்.  மாவைக் கட்டியில்லாமல் கிளற வேண்டும். நன்கு உப்புமா பதத்துக்கு வரும்வரை கிளறவேண்டும்.  நீர் போதவில்லை எனில் எடுத்து வைத்திருக்கும் வெந்நீரை ஊற்றிக்கொள்ளலாம். நன்கு பொல பொலவென்று வந்ததும், பக்கத்தில் இன்னொரு பாத்திரம் அல்லது வாணலியில் நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுக்கவும்.  முந்திரிப்பருப்பைக் களியில் போட்டுவிட்டு அந்த நெய்யிலேயே தேங்காய் துருவலையும் வறுக்கவும். களியில் போடவும்.  ஏலக்காய்ப் பொடியைத் தூவவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோடு சைட் டிஷாகப் பண்ண வேண்டியது ஏழுதான் குழம்பு.  சிலர் வீட்டில் கூட்டுப் போல் கெட்டியாகவும் இருக்கும்.  மதுரை, தஞ்சை மாவட்டங்களில் இதற்குத் துவரம்பருப்பையும் குழைய வேக வைத்துச் சேர்ப்பார்கள்.  திருநெல்வேலி மாவட்டத்தில் சிலர் பருப்பே போடாமல் செய்வார்கள்.  இதற்குப் பெரும்பாலும் நாட்டுக்கறிகாய்களே சுவையாக இருக்கும்.  கிடைக்காத இடம் என்றால் கிடைக்கும் வேறு காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான காய்கள்:&lt;br /&gt;வெள்ளைப் பூஷணிக்காய் ஒரு கீற்று&lt;br /&gt;பறங்கிக்காய் ஒரு கீற்று&lt;br /&gt;வாழைக்காய் பெரிதாக இருந்தால் ஒன்று சின்னது என்றால் 2&lt;br /&gt;கத்திரிக்காய்  5ல் இருந்து 8க்குள்&lt;br /&gt;சர்க்கரை வள்ளிக்கிழங்கு பெரிய கிழங்கு என்றால் ஒன்று&lt;br /&gt;பச்சை மொச்சை உரித்தது ஒரு கிண்ணம்&lt;br /&gt;அவரைக்காய் 100 கிராம்&lt;br /&gt;சேனைக்கிழங்கு கால் கிலோ&lt;br /&gt;சேப்பங்கிழங்கு(விரும்பினால் கால் கிலோ)&lt;br /&gt;சிறுகிழங்கு கால் கிலோ&lt;br /&gt;கொத்தவரைக்காய் 100 கிராம்&lt;br /&gt;இதோடு பீன்ஸ், காரட், செளசெள இதெல்லாம் விரும்பினால் சேர்க்கலாம். எல்லாக் காய்களையும் இரண்டு அங்குல நீளம் ஒரெ மாதிரியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தனியாக வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கால் கிலோ துவரம்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்துக்க் குழைய வேகவைக்கவும்.  புளி நூறு கிராம் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். இவை எல்லாம் தயாராக இருக்கட்டும்.  இப்போது அரைக்க வேண்டியவை&lt;br /&gt;&lt;br /&gt;அரைக்க:&lt;br /&gt;மி.வத்தல் பத்து அல்லது பதினைந்து&lt;br /&gt;கொத்துமல்லி விதை 100 கிராம்&lt;br /&gt;கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்&lt;br /&gt;உளுத்தம்பருப்பு ஒரு டீ ஸ்பூன்&lt;br /&gt;மிளகு ஒரு டீஸ்பூன்&lt;br /&gt;வெந்தயம் ஒரு டீஸ்பூன்&lt;br /&gt;அரிசி ஒரு டேபிள் ஸ்பூன்&lt;br /&gt;தேங்காய் துருவல் ஒரு மூடி&lt;br /&gt;ஒரு சிலர் எள்ளும், கடுகும் அரைக்கும்பொருட்களோடு சேர்ப்பார்கள்.  ஆனால் அதெல்லாம் அவரவர் விருப்பம்.  தாளகம் என்றால் பாதிமூடி அரைக்கையில் சேர்த்தாலும் தாளிக்கையில் பல்,பல்லாகக்கீறியும் போடுவதுண்டு.  மேலே சொன்ன பொருட்களை ஒவ்வொன்றாகச் சமையல் எண்ணெயில் வறுக்கவும்.  வறுத்த பொருட்களை ஆறவிட்டு மிக்சியில் போட்டு நன்றாகப் பொடி செய்யவும்.&lt;br /&gt;தாளிக்க:  தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, மி.வத்தல்.கருகப்பிலை, கொத்துமல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;காய்களைக்கழுவி கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.  புளி கரைத்த நீரைக் கொதிக்க வைத்து வேக விட்ட காய்களை சேர்க்கவும். புளிக்கரைசலுக்குத் தேவையான உப்பையும் போடவும். நன்கு கொதிக்கையில் வெந்த பருப்பைச் சேர்த்துக்கொண்டு, ஒரு கொதி விட்டதும், அரைத்து வைத்த பொடியைப் போடவும்.  இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெயைக் காய வைத்துக்கொண்டு அதில் கடுகு, மி.வத்தல் 2 கருகப்பிலையைப் போட்டுத் தாளிக்கவும். பச்சைக்கொத்துமல்லியைத் தூவவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-6166439769177738708?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/6166439769177738708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=6166439769177738708' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/6166439769177738708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/6166439769177738708'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2012/01/blog-post_10.html' title='திருவாதிரைக்களி செய்முறையும், ஏழுதான் குழம்பும்!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-534302673505609535</id><published>2012-01-09T04:26:00.000-08:00</published><updated>2012-01-09T04:28:36.309-08:00</updated><title type='text'>பொங்கலோ பொங்கல்!  கூவுங்க எல்லாரும்!</title><content type='html'>அக்கார அடிசிலுக்குப் பால் நிறைய வேண்டும். ஆண்டாள் செய்தாப்போல் நூறு தடா இல்லைனாலும் ஒரு லிட்டராவது வேண்டும். நல்ல பச்சை அரிசி கால்கிலோ, வெல்லம் பாகு அரை கிலோ, நெய் கால் கிலோ. பாசிப்பருப்பு ஒரு கிண்ணம். நீரே வேண்டாம். பாலிலேயே வேகவேண்டும். ஆகவே முடிந்தவரைக்கும் ஒரு லிட்டருக்குக் குறையாமல் பால் எடுத்துக்கொள்ளவும். குங்குமப் பூ, ஏலக்காய், பச்சைக்கற்பூரம் ஒரு சிட்டிகை அளவு மட்டுமே. முந்திரிப்பருப்பு, திராக்ஷை எல்லாம் தேவைப்பட்டால். சாதாரணமாய் இதற்குப் போடுவது இல்லை. ஆனால் நான் போடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாசிப்பருப்பையும், பச்சை அரிசியையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். நன்கு களைந்து சுத்தம் செய்து கொள்ளவும். வெண்கலப்பானையை அடுப்பில் வைத்துப் பாலைக் கொஞ்சமாக முதலில் ஊற்றவும். தேவையான பாலில் பாதி அளவு ஊற்றலாம். பால் கொதிக்க ஆரம்பித்ததும் பாசிப்பருப்பைக் களைந்து சுத்தம் செய்து அதில் போடவும். சிறிது நேரத்துக்கு ஒருமுறை கிளறிக்கொடுக்கவும். பால் அடியில் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். இதை நான் ஸ்டிக் பாத்திரத்திலோ அல்லது குக்கரிலோ செய்தால் அவ்வளவு சுவை வராது. பருப்பு வெந்ததும் அரிசியைக் களைந்து அதோடு சேர்த்துப் போடவும். மிச்சம் இருக்கும் பாலைக்கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். அரிசி நன்கு வெந்து குழையும் பதம் வரவேண்டும். அப்போது வெல்லத்தைத் தூளாக்கிச் சுத்தம் செய்து சேர்க்க்கவும். வெல்ல வாசனை போக நன்கு கொதிக்கவேண்டும். வெல்லம், பால் இரண்டும் சேர்ந்து வரும்வரையில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்து விடாமல் கிளற வேண்டும். நன்கு கலந்து பாயசம் போலவும் இல்லாமல் ரொம்பக் கெட்டியாக உருட்டும்படியும் இல்லாமல் கையால் எடுத்துச்சாப்பிடும் பதம் வரும் வரை கிளற வேண்டும். பின்னர் ஏலப்பொடி சேர்த்துப் பாலில் கரைத்த குங்குமப் பூவும் சேர்த்துப் பச்சைக்கற்பூரமும் சேர்க்கவும். தேவைப்பட்டால் நெய்யில் முந்திரிப்பருப்பு, திராக்ஷை வறுத்துச் சேர்க்கவும். அது இல்லாமலேயே நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குக்கரில் வைப்பவர்கள் பாதிப்பாலை விட்டுக் குக்கரில் அரிசி, பருப்பைக் குழைய வைத்துக்கொண்டு பின்னர் வெளியே எடுத்து அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீர் அல்லது பால் விட்டுக் கரைத்துக் கொதிக்கையில் குக்கரில் இருந்து எடுத்த கலவையைப் போட்டு மிச்சம் பாலையும் விட்டுக் கிளறவேண்டும். இதிலும் அடிப்பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும். பின்னர் நன்கு சேர்ந்து தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும், வெல்ல வாசனை போய்விட்டதா என்று பார்த்துவிட்டு அடுப்பை அணைக்கவும். ஏலக்காய், குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்க்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-534302673505609535?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/534302673505609535/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=534302673505609535' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/534302673505609535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/534302673505609535'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2012/01/blog-post.html' title='பொங்கலோ பொங்கல்!  கூவுங்க எல்லாரும்!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1855594148667731108</id><published>2011-11-28T15:00:00.001-08:00</published><updated>2011-11-28T15:13:58.284-08:00</updated><title type='text'>காஞ்சிபுரம் இட்லி சாப்பிடக் காஞ்சிபுரத்துக்கு ஏன் போகணும்?</title><content type='html'>ஒரே இட்லியாய்ச் செய்துட்டு இருக்கியே?  போர் அடிக்கலை?&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்ன ஏடிஎம் மாதிரி இட்லியைக்குடிக்கவா சொன்னேன்?&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி! ஆனால் இட்லியால் அடிச்சால் எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;என்னது? இட்லியால் அடிச்சேனா? நானா?  இருங்க, இருங்க நிஜமாவே இட்லியால் அடிக்கிறேன். நாளைக்குக்காஞ்சிபுரம் இட்லிதான் செய்யப் போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே, காப்பாத்து!&lt;br /&gt;***************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருட்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;புழுங்கல் அரிசி(இட்லி)  ஒரு கிண்ணம்&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை அரிசி  ஒரு கிண்ணம்&lt;br /&gt;&lt;br /&gt;முழு உளுந்து தோல் நீக்கியது ஒரு கிண்ணம்&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றையும் கலந்து களைந்து ஊற வைக்கவும்.  நான்கு மணி நேரம் ஊறியதும் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ரொம்பவே நைஸாகவும் கூடாது.  ரொம்பக் கொரகொரப்பாகவும் கூடாது.  ரவை போல் அரைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுக்கு, மிளகு, ஜீரகம் ஒன்றிரண்டாக உடைத்துக்கொண்டது இரண்டு டீஸ்பூன், உப்பு, நெய்.&lt;br /&gt;&lt;br /&gt;தாளிக்க எண்ணெய் அல்லது நெய், 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் (எல்லாம் சேர்த்து) இஞ்சி தேவையானால் ஒரு துண்டு. கருகப்பிலை, கொத்துமல்லிபொடிப்பொடியாக நறுக்கியது இரண்டு டீஸ்பூன். &lt;br /&gt;&lt;br /&gt;ஊற வைத்த பட்டாணி, துருவிய காரட்(தேவையானால் மாவில் கலக்கலாம். இது அவரவர் விருப்பம்போல்.  தேங்காயும் பல்லுப் பல்லாகக்கீறிச் சேர்க்கலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அரைத்த மாவில் பொடித்த சுக்கு, மிளகு, ஜீரகக்கலவையோடு உப்பையும் போட்டு நெய்யையும் விட்டுக் கலந்து புளிக்க வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் இட்லி செய்யும் முன்னர் தாளிக்க எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக்கொண்டு அதில் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்துக் கொட்டி மாவில் கலக்கவும்.  தேவையானால் ஊற வைத்த பட்டாணி, காரட், தேங்காய்க் கீறல் சேர்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இட்லிப் பாத்திரம் அல்லது இட்லிக்குக்கரில் நீரை ஊற்றிச் சூடாக்கவும்.  நீர் கொதித்து வந்ததும், இட்லித்தட்டுக்களில் நன்றாகத் ததும்ப எண்ணெய் தடவி மாவை ஊற்றவும்.  எல்லாத்தட்டுக்களையும் குக்கரினுள் அடுக்கிவிட்டு மூடி வைக்கவும்.  இட்லி வேகப் பத்து நிமிடங்கள் ஆகும்.  பின்னர் வெளியே எடுத்து சுவையான சட்னி அல்லது கொத்சோடு பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கொத்சு:&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருட்கள்:  புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு ஊற வைத்துக் கரைத்து வடிகட்டிய நீர் இரண்டு கிண்ணம்.  உப்பு, மிளகாய் வற்றல் 3, பச்சை மிளகாய் 2 அல்லது 3. மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை, பெருங்காயம் ஒரு துண்டு.  கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை.  கத்தரிக்காய் நடுத்தரமாக ஒன்று, சின்ன வெங்காயம் பத்துப் பனிரண்டு, அல்லது ஒரு நடுத்தரப் பெரிய வெங்காயம், தக்காளி ஒன்று. பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.  தாளிக்க எண்ணெய்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும்.  பின்னர் முதலில் வெங்காயத்தைப் போட்டு வதக்கிவிட்டுப் பின் கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றையும் போட்டு நன்கு வதக்கவும்.  மஞ்சள் பொடி சேர்த்துத் தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்க்கவும்.  புளிக்கரைசலை ஊற்றி உப்புச் சேர்க்கவும். சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி சூடான இட்லியுடன் பரிமாறவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-1855594148667731108?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/1855594148667731108/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=1855594148667731108' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/1855594148667731108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/1855594148667731108'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/11/blog-post_28.html' title='காஞ்சிபுரம் இட்லி சாப்பிடக் காஞ்சிபுரத்துக்கு ஏன் போகணும்?'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-398453193237533893</id><published>2011-11-27T12:23:00.001-08:00</published><updated>2011-11-27T12:44:03.166-08:00</updated><title type='text'>இப்போ என்னோட முறை ராஜ்மாவில்! :))</title><content type='html'>ராஜ்மாவிலே மருமகள் ரொட்டி பண்ணினால் மாமியார் ஏதானும் செய்ய வேண்டாமா?  ஆகவே நான் பஞ்சாபிலே பிரபலம் ஆன ராஜ்மா கிரேவி(குழம்பு மாதிரி)+ ஃபிரைட் ரைஸ் செய்தேன். இதற்கு வெண்ணெய் அல்லது நெய் இருந்தால் நன்றாக இருக்கும். பஞ்சாபில் வெண்ணெய், நெய் தாராளமாய்க் கிடைப்பதால் அதிலேயே செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருட்கள்:  நாலு பேருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜ்மா இரண்டு கிண்ணம் எடுத்துக்கொண்டு முதல் நாளே ஊற வைத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;மசாலாவிற்கு: ஒரு ஸ்பூன்  சோம்பு, உடைத்த மிளகு ஒரு ஸ்பூன், பெரிய ஏலக்காய் 4, லவங்கப் பட்டை ஒரு துண்டு, தேஜ்பத்தா எனப்படும் மசாலா இலை, இலவங்கம் 4&lt;br /&gt;&lt;br /&gt;தாளிதம் செய்ய:&lt;br /&gt;&lt;br /&gt;ஜீரகம்,சோம்பு ஒரு டீஸ்பூன்,&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும் ஒரு கிண்ணம் &lt;br /&gt;&lt;br /&gt;தக்காளி பொடியாக நறுக்கியது ஒரு கிண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை மிளகாய், இஞ்சி விழுது ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது காரத்திற்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், 2 ஸ்பூன் தனியாத் தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்&lt;br /&gt;&lt;br /&gt;கெட்டித் தயிர் ஒரு கிண்ணம்.  மேலே தூவ சீஸ் துருவல் அல்லது புதிதான க்ரீம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்மதி அரிசி 2 கிண்ணம், உப்பு, பட்டாணி(பச்சை அல்லது காய்ந்த பச்சைப்பட்டாணி ஊற வைத்தது அரைக்  கிண்ணம். கிராம்பு, ஏலக்காய் வகைக்கு இரண்டு. வறுக்க நெய் ஒரு டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்மதி அரிசியையும், பட்டாணியையும் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.  குக்கரில் அல்லது பிரஷர் பானில் நெய்யை ஊற்றி கிராம்பு, ஏலக்காய் போட்டுக்கொண்டு பாஸ்மதி அரிசியைப் போட்டு வறுக்கவும்.  அரிசி முழுதும் நெய்யோடு நன்கு கலந்ததும், பட்டாணியைச் சேர்த்து உப்பையும் போட்டுவிட்டுத் தேவையான நீரை விட்டுக் குக்கரை மூடி சாதம் தயார் செய்து கொள்ளவும். இப்போது ராஜ்மா கிரேவி தயாரிக்கும் முறை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சொல்லி இருக்கும்  மசாலாப் பொருட்களை  நசுக்கிக் கொண்டு ஒரு சின்ன வெள்ளைத்துணியில் கட்டி ராஜ்மாவை வேக வைக்கையில் அதோடு போட்டுவிடவும்.  வேகும்போதே இந்த மசாலா அதற்குள் போய் இறங்கிக்கொள்ளும்.   முதல் நாளே ஊற வைத்து அளவாக நீர் சேர்த்து  நன்கு வேக வைக்கவும்.  வெந்த ராஜ்மாவில் இருந்து மசாலாப் பையை எடுத்துவிடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்துக்கொண்டு வெண்ணெய் அல்லது சமையல் எண்ணெயை விடவும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, ஜீரகம் தாளித்துக்கொண்டு வெங்காயத்தைப்போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் இஞ்சி பேஸ்டைப் போட்டு வதக்கவும்.  நன்கு வதங்கியதும் வேக வைத்த ராஜ்மாவைச் சேர்க்கவும். உப்புச் சேர்த்து ஒரு கொதி விடவும்.  கெட்டித் தயிரில் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையானால் அம்சூர் பொடி சேர்த்து ராஜ்மாவில் கொட்டிக் கலக்கவும்.  மறுபடி ஒரு கொதி விடவும். இதற்கு கரம் மசாலாப் பொடி தேவையில்லை.  தேவை எனில்  பொடிப்பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயம், பச்சைக் கொத்துமல்லியால் அலங்கரிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;தயாரிக்கப்பட்ட சூடான சாதத்தில் இந்தக் குழம்பை விட்டுச் சாப்பிடலாம்.  குளிர்நாட்களுக்கு ஏற்ற உணவு.  படம் இன்னொரு முறை செய்கையில் எடுத்துச் சேர்க்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-398453193237533893?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/398453193237533893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=398453193237533893' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/398453193237533893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/398453193237533893'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/11/blog-post_5862.html' title='இப்போ என்னோட முறை ராஜ்மாவில்! :))'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-9040635283203010727</id><published>2011-11-27T11:53:00.000-08:00</published><updated>2011-11-27T12:14:04.223-08:00</updated><title type='text'>ராஜ்மாவில் ரொட்டியா? கடவுளே!</title><content type='html'>அப்படித்தான் நானும் நினைச்சேன் முதல்லே.  ஆனால் நல்லாவே இருந்தது.  ஊருக்குப் போகையிலே ராஜ்மா ரொட்டி பண்ணி எடுத்துட்டுப் போகலாம்னு மருமகள் சொன்னாள்.  எனக்குக் கொஞ்சம் யோசனை தான். அன்றே சாயந்திரமாப் பண்ணினா. சாப்பிட்டால் நல்லாவே இருந்தது.  எனக்குத் தெரிந்த வரையில் அவள் போட்டிருந்த பொருட்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;ராஜ்மா ஒரு கப் முதல் நாளே ஊற வைத்து வேக வைத்து மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.  &lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன அளவு ராஜ்மா விழுதுக்கு இரண்டு கப் கோதுமை மாவு தேவைப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;மற்றத் தேவையான பொருட்கள்:  மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், அம்சூர் பொடி, உப்பு, மாவில் கலக்க ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்.  மாவு பிசைய நீர்.  ரொட்டியைத் தட்டி எடுக்கத் தேவையான எண்ணெய் தனியாக.&lt;br /&gt;&lt;br /&gt;கோதுமை மாவில் ராஜ்மா விழுதைப் போட்டுக் கலந்து கொண்டு அதோடு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், அம்சூர் பொடி, தேவையான உப்புச் சேர்த்துக் கலக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.  தேவையான நீர் சேர்த்து மாவை நன்றாகப் பிசையவும்.  ரொட்டி மாவு பதத்துக்கு வந்ததும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர்  ரொட்டியை ஒவ்வொன்றாக இட்டுத் தவாவில் எண்ணெய் தடவிப் போட்டுச் சுட்டு எடுக்கவும்.  இதற்குத் தொட்டுக்கொள்ள ராய்தா எனப்படும் பச்சடி நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராய்தா:&lt;br /&gt;&lt;br /&gt; வெங்காயம், காரட், வெள்ளரிக்காய் துருவிப் போட்டுப் பச்சைக் கொத்துமல்லி போட்டு, நல்ல கெட்டித் தயிரில் உப்பு, ஜீரகப்பொடி, காலா நமக் பொடி ஒரு சிட்டிகை போட்டுக் கலந்து வைக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-9040635283203010727?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/9040635283203010727/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=9040635283203010727' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/9040635283203010727'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/9040635283203010727'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/11/blog-post_27.html' title='ராஜ்மாவில் ரொட்டியா? கடவுளே!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-3393719566435413423</id><published>2011-11-15T05:03:00.000-08:00</published><updated>2011-11-15T05:33:00.558-08:00</updated><title type='text'>ரங்கு சமையல் கத்துக்கிறார்</title><content type='html'>அப்பாடா!  &lt;br /&gt;&lt;br /&gt;என்ன அப்பாடா! இன்னிக்கு சமையல் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;நோ, இன்னிக்கு நோ சமையல் டே. தங்குவின் அறிவிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னது? அப்போ என்ன சாப்பிடப் போறோமாம்?&lt;br /&gt;&lt;br /&gt;பட்டினி தான்!&lt;br /&gt;&lt;br /&gt;அடிப் பாவி! சரி, நானாவது சமைத்துத் தொலைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி வாங்க வழிக்கு! ஹாஹாஹாஹா, தங்குவின் வெற்றிச் சிரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வெறும் ரசம் தான் வைக்கப் போறேன். ரங்குவின் அறிவிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, போகட்டும், வைக்கிறது வைக்கிறீங்க, மைசூர் ரசமா வைச்சுடுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்துட்டா பாரு!&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்? தினம் தினம் நான் தானே சமைக்கிறேன். இன்னிக்கு ஒரு நாள் செய்தா என்னவாம்?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மைசூர் ரசமும் தெரியாது, மங்களூர் போண்டோவும் வராது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்லித் தரேன். செய்ங்க. தங்கு ஓர் அதட்டல் போட வேறு வழியில்லாத ரங்கு பணிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்லே பருப்பை வேக வைக்கணும்.  அது பாட்டுக்கு வேகட்டும்.  அதுக்குள்ளே நாம் இதெல்லாம் தயார் பண்ணிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னது?&lt;br /&gt;&lt;br /&gt;புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு எடுத்து ஊற வைச்சுக் கரைச்சுக்குங்க.  அதைத் தனியா வைங்க, சரியா? &lt;br /&gt;&lt;br /&gt;சரி, சரி, அப்புறமா சொல்லித் தொலை. அடம்!&lt;br /&gt;&lt;br /&gt;மி.வத்தல் 4, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு. இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக்கோங்க. ஜீரகம் வறுக்காமல் பச்சையாக எடுத்து வறுத்த சாமான்களோடு சேர்த்துக்கோங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயையே, வறுக்கச் சொன்னால் என்ன செய்யறீங்க? இப்படியா கறுப்பா ஆக்கறது? நகருங்க நானே வறுத்துத் தந்து தொலைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா வறு, என்னை வறுக்கிறாப்போல் நினைச்சுக்கோ!&lt;br /&gt;&lt;br /&gt;க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்கே நீங்க தான் என்னை வறுக்கிறீங்க.  &lt;br /&gt;&lt;br /&gt;தங்குவே எல்லாவற்றையும் வறுத்து எடுத்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ இதை எல்லாம் மிக்சியில் போட்டு அரைங்க.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி?  எங்க வீட்டு மனுஷங்களை நீ வாயில் போட்டு அரைப்பியே, அப்படியா?&lt;br /&gt;&lt;br /&gt;க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்&lt;br /&gt;&lt;br /&gt;சரி, சரி,அரைச்சுட்டேன், இதோ. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போப் புளி ஜலத்தை அடுப்பில் வைச்சு அதிலே ஒரு தக்காளிப்பழத்தை நறுக்கிப் போடுங்க.  உப்புச் சேர்த்துக் கொஞ்சம் போல் பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடுங்க.  வேணுமானால் ஒரே ஒரு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போடலாம். கொதி வந்ததும், வெந்த பருப்பைச் சேர்த்துட்டு, அரைச்சு வைச்சதையும் சேர்த்து ஒரு கொதி விடுங்க. அப்புறமா ஜலம் விட்டு விளாவிவிட்டு நெய்யில் கடுகு, மி,வத்தல் ஒண்ணு, கருகப்பிலை தாளிச்சு, கொத்துமல்லி நறுக்கிப் போடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா, எல்லாம் முடிச்சுட்டேன்.  வா, சீக்கிரமா வந்து படம் எடுத்துட்டு நீ எழுதுவியே அதிலே போடு.&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் நான் சமைக்கிறச்சே தான்.  இதை எல்லாம் எடுக்க மாட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-3393719566435413423?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/3393719566435413423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=3393719566435413423' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/3393719566435413423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/3393719566435413423'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/11/blog-post_15.html' title='ரங்கு சமையல் கத்துக்கிறார்'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-6643931402143125216</id><published>2011-11-10T07:35:00.000-08:00</published><updated>2011-11-10T07:36:28.633-08:00</updated><title type='text'></title><content type='html'>சாதாரணமா சமையல் முறையை எழுதினா யாருமே வந்து பார்க்கிறதில்லை.  அதனால் இனிமேல் ரங்குவும் தங்குவும் சமைக்கப் போறாங்க.   வந்து பாருங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-6643931402143125216?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/6643931402143125216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=6643931402143125216' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/6643931402143125216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/6643931402143125216'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/11/blog-post_10.html' title=''/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-2977148165543238162</id><published>2011-11-09T18:11:00.000-08:00</published><updated>2011-11-12T18:31:32.389-08:00</updated><title type='text'>தினம் தினம் என்னத்தைச் சமைக்கிறது?</title><content type='html'>போர் அடிக்குதா? புளியஞ்சாதம், தேங்காய்ச் சாதம் எல்லாமும் அலுத்துப் போச்சா? இதோ கொஞ்சம் புது மாதிரியான சமையல். சாப்பிட்டுப் பாருங்க வாங்க.தினம் ஏதேனும் குழம்பு, ரசம்னு வைச்சால் மிஞ்சிப் போகிறது.  மறுநாளைக்குச் சுட வைத்துச் சாப்பிடும் வழக்கமும் இல்லை.  துவையல், பொடி, எலுமிச்சை சாதம்னு எல்லாம் அலுப்பாய்ப் போச்சா! சரினு புதுமாதிரியா இருக்கட்டும்னு புளியோகெரெ பண்ணினேன்.  எம்.டி.ஆருக்குத் தான் விளம்பரமா? நமக்கும் வேணுமில்ல?  அதான் படம் எடுத்துப் போட்டாச்சு. படத்திலே பார்ப்பது புளியோகெரெ!  கடுகோரைனும் சிலபேர் சொல்றாங்க.&lt;br /&gt;&lt;a href='http://2.bp.blogspot.com/-fHz9SA3SKMY/Tr7o2UB0sHI/AAAAAAAABpQ/m4hBeLC3UbQ/s1600/DSC01191.JPG'&gt;&lt;img src='http://2.bp.blogspot.com/-fHz9SA3SKMY/Tr7o2UB0sHI/AAAAAAAABpQ/m4hBeLC3UbQ/s320/DSC01191.JPG' border='0' alt=''style='clear:both;float:left; margin:0px 10px 10px 0;' /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஒரு கர்நாடக சமையல்:&lt;br /&gt;&lt;br /&gt;கடுகோரை:&lt;br /&gt;தேவையான பொருட்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;அரைக்க:  புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு, தேங்காய்துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4 அல்லது 5, வெல்லம் ஒரு துண்டு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை.&lt;br /&gt;&lt;br /&gt;தாளிக்க:  கடுகு, உபருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை எண்ணெய் கால் கப்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கப் அரிசியைக் கழுவிக் களைந்து முதலில் சாதம் வடித்துக்கொள்ள வேண்டும்.  கொஞ்சம் உப்புச் சேர்த்து, நல்லெண்ணை ஊற்றிக் கிளறி ஆற வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரைக்கவேண்டிய சாமான்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும்.  ஒரு வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைப் போட்டுத் தாளித்துக் கொண்டு பின் அரைத்த விழுதையும் போட்டு வதக்கவும்.  நன்கு வதக்கியதும் வடித்த சாதத்தைப் போட்டு நன்கு கிளறவும். &lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தயிர்ப்பச்சடி, மோர்க்குழம்பு அல்லது அவியல் போன்றவற்றோடு உண்ணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href='http://4.bp.blogspot.com/-4Nf402g1G14/Tr7o2TeWAlI/AAAAAAAABpc/n38_oH_dbQw/s1600/DSC01192.JPG'&gt;&lt;img src='http://4.bp.blogspot.com/-4Nf402g1G14/Tr7o2TeWAlI/AAAAAAAABpc/n38_oH_dbQw/s320/DSC01192.JPG' border='0' alt=''style='clear:both;float:left; margin:0px 10px 10px 0;' /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;தொட்டுக்க மோர்க்கூட்டு: இங்கே சைனீஸ் பஜாரில் பூசணிக்காய்(வெள்ளை) நல்லாவே கிடைக்குது.  அது வாங்கிட்டு வந்தாங்க.  அதிலே செய்தேன்.  பூசணிக்காயை நீளமாக மெலிதாக நறுக்கிக் கொண்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவும். அதிகப்படி நீரை வடிக்கவேண்டும்.  பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து நைஸாக அரைக்கவும்.  வெந்த பூசணிக்காயில் கொட்டிக் கலந்து ஒரு கொதி வந்ததும் கெட்டித் தயிர் சேர்த்து லேசாய்க் கொதித்ததும் கீழே இறக்கிக் கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும் &lt;br /&gt;&lt;br /&gt;ரசமே இல்லைனா சாப்பாடும் ரசம் இல்லை; வாழ்க்கையிலும் ரசம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  எலுமிச்சை ரசம். &lt;br /&gt;&lt;br /&gt;பாசிப்பருப்பைக் குழைய வேக வைத்துக்கொண்டு, இரண்டு, மூன்று தக்காளியை மிக்சியில் போட்டு அடித்து அதில் கலந்து கொஞ்சம் நீர் சேர்த்துக்கொண்டு, பச்சை மிளகாய், ரசப் பொடி,பெருங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் நீர் விட்டு விளாவி நுரைத்து வருகையில் கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளிக்கலாம்.  அல்லது சீரகப் பொடி போட்டுவிட்டுக் கடுகு மட்டும் தாளிக்கலாம்.  பச்சைக்கொத்துமல்லி சேர்த்து எலுமிச்சைச் சாறையும் சேர்க்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href='http://2.bp.blogspot.com/-XEQW7kmnSy8/Tr7o2xQWMfI/AAAAAAAABpo/Ijc3lR8_YH8/s1600/DSC01193.JPG'&gt;&lt;img src='http://2.bp.blogspot.com/-XEQW7kmnSy8/Tr7o2xQWMfI/AAAAAAAABpo/Ijc3lR8_YH8/s320/DSC01193.JPG' border='0' alt=''style='clear:both;float:left; margin:0px 10px 10px 0;' /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;div style='clear:both; text-align:LEFT'&gt;&lt;a href='http://picasa.google.com/blogger/' target='ext'&gt;&lt;img src='http://photos1.blogger.com/pbp.gif' alt='Posted by Picasa' style='border: 0px none ; padding: 0px; background: transparent none repeat scroll 0% 50%; -moz-background-clip: initial; -moz-background-origin: initial; -moz-background-inline-policy: initial;' align='middle' border='0' /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-2977148165543238162?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/2977148165543238162/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=2977148165543238162' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/2977148165543238162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/2977148165543238162'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/11/blog-post_09.html' title='தினம் தினம் என்னத்தைச் சமைக்கிறது?'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fHz9SA3SKMY/Tr7o2UB0sHI/AAAAAAAABpQ/m4hBeLC3UbQ/s72-c/DSC01191.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1141905825126865435</id><published>2011-11-07T08:08:00.001-08:00</published><updated>2011-11-07T08:08:31.236-08:00</updated><title type='text'>சில உருளைக்கிழங்கு செய்முறைகள் !</title><content type='html'>உருளைக்கிழங்கு சமையல்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;உருளைக்கிழங்குக் காரக்கறி:  உருளைக்கிழங்கு கால் கிலோ, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, எண்ணெய் வதக்க.  கடுகு தாளிக்கத் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;உருளைக்கிழங்கை மண்போக நன்கு கழுவித் தோலை நீக்கவேண்டுமானால் நீக்கிவிட்டுப் பொடிப் பொடியாக நறுக்கவும்.  கடாயில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்து, நறுக்கிய உருளைக்கிழங்குகளைப் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மொறுமொறுவெனப் பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;உருளைக்கிழங்கு காரக்கறி 2-ஆம் வகை:  உருளைக்கிழங்கு கால் கிலோ, வெங்காயம் பெரியதெனில் இரண்டு, சின்ன வெங்காயம் என்றால் நூறுகிராம் தோல் உரித்துப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  பச்சை மிளகாய் ஒன்று, மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கருகப்பிலை, தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, பெருங்காயத்தூள். வதக்க எண்ணெய்.&lt;br /&gt;&lt;br /&gt;உருளைக்கிழங்கைக் கழுவி வேக வைத்துத் தோலுரித்துக்கொண்டு ஒன்றிரண்டாக மசிக்கவும். அல்லது நான்கு பாகமாகவோ சிறிய துண்டுகளாகவோ நறுக்கிக்கொள்ளலாம்.  கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயப்பொடி, கருகப்பிலை, க.பருப்பு, உ.பருப்பு தாளித்துக்கொண்டு, பச்சைமிளகாயையும் அரிந்து போடவும்.  பின் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துக்கொண்டு நன்கு பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும். பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.  நன்கு பொடி வாசனை போகும் வரை வதக்கி எடுக்கவும்.  இதிலேயே இறக்குகையில் கொஞ்சம் கரம்மசாலாவைப் போட்டால் மசாலா கிழங்காக ருசிக்கலாம். தேவை எனில் பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும்.&lt;br /&gt;&lt;br /&gt;உருளைக்கிழங்கு போண்டோ:&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன மாதிரி கொஞ்சம்காரத்தைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்கு கறி தயாரித்துக்கொள்ளவும்.  &lt;br /&gt;&lt;br /&gt;மேல்மாவுக்குத் தேவையான பொருட்கள்;  கடலைமாவு இரண்டு கிண்ணம், அரிசி மாவு அரைக்கிண்ணம், மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், கரைக்க நீர். &lt;br /&gt;&lt;br /&gt;பொரிக்க எண்ணெய்&lt;br /&gt;&lt;br /&gt;கடலைமாவு, அரிசிமாவு,மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் உப்புச் சேர்த்துக்கலந்து கொண்டு நீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தயாராக வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கறியை ஒரு எலுமிச்சம்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடாயில் எண்ணெய் வைத்து அடுப்பில் வைக்கவும்.  எண்ணெய் காய்ந்ததும், அடுப்பைத் தணித்துக் கொண்டு உருளைக்கிழங்கு உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்துக்கொண்டு எண்ணெயில் போடவும்.  நன்கு திருப்பிப் போட்டு வெந்ததும் கரண்டியால் அரித்து எடுத்து வடிகட்டவும்.  சூடான தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்&lt;br /&gt;&lt;br /&gt;உருளைக்கிழங்கு பஜ்ஜி:&lt;br /&gt;&lt;br /&gt;உருளைக்கிழங்கு பெரிதாக ஒன்றிருந்தாலே போதும்.  நன்கு கழுவிக் கொண்டு தோலைச் சீவி விட்டு வட்ட வட்டமாகச் சீவித் தண்ணீரில் போடவும்.  உருளைக்கிழங்கை நன்கு தண்ணீரில் போட்டு அலசிவிட்டால் அதிலுள்ள மாவுச்சத்து குறையும் என்பார்கள்.  உண்பதில் கவலைப்படவேண்டாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;பஜ்ஜி மாவுக்கு: 2 கிண்ணம் கடலைமாவு, அரைக்கிண்ணம் அரிசி மாவு,அரைக்கிண்ணம்மைதா மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்,கரைக்க நீர், பொரிக்க எண்ணெய்&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா மாவுகளையும் ஒன்றாய்க் கலந்து கொண்டு உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும்.  நீர் விட்டுக் கொண்டு தோசைமாவு பதத்துக்குக் கரைக்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு எண்ணெய் காய்ந்ததும், வட்டமாக நறுக்கிய உருளைக்கிழங்கு வில்லைகளை மாவில் தோய்த்துக்கொண்டு எண்ணெயில் போடவும்.  சூடான தேங்காய்ச் சட்னி, கொத்துமல்லிச் சட்னியோடு பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;உருளைக்கிழங்கு வடை:  ஜவ்வரிசி ஒரு கிண்ணம். தயிரில் ஊறப் போடவும்.  உருளைக்கிழங்கு பெரிதாக இரண்டு.  வேகவைத்துத் தோலுரித்துக்கொள்ளவும்.  வேர்க்கடலை ஒரு கிண்ணம் நன்கு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். 6 பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி,  ஒரு சின்னக் கட்டுக் கொத்துமல்லி சேர்த்து அரைத்த விழுது ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, பெருங்காயப் பொடி, காரப்பொடி(தேவையானால்) பச்சைமிளகாய்க் காரமே போதுமெனில் அதோடு நிறுத்திக்கொள்ளலாம். காரம் போதவில்லையெனில் அரைத்த விழுதையே இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஜவ்வரிசி நன்கு ஊறி இருக்கும்.  அதில் வேர்க்கடலை மாவு, வெந்த உருளைக்கிழங்கைச் சேர்த்துப் பிசையவும்.  காரத்திற்குத் தேவையான அளவு அரைத்த விழுது, உப்புச் சேர்க்கவும். பெருங்காயத்தூள், கருகப்பிலை தேவை எனில் சேர்க்கவும் அநேகமாகப் பிசைந்த மாவு கெட்டியாகவே இருக்கும்.  இல்லை எனில் கொஞ்சம் மைதாமாவோ அல்லது கடலைமாவோ சேர்க்கலாம்.  சற்றுநேரம் வைத்திருந்தால் ஜவ்வரிசி நன்கு ஊறி ஈரத்தை இழுத்துக்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு எண்ணெய் காய்ந்ததும், மாவை வடைகளாய்த் தட்டி எண்ணெயில் போடவும்.  ஜவ்வரிசி நன்கு பொரிந்து வடை மொறுமொறுவென வரும்.  சூடான தக்காளிச் சட்னி அல்லது புளிச்சட்னி, பச்சைச் சட்னியோடு சாப்பிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;உருளைக்கிழங்கு தம் அல்லது ஆலு தம்: ஓரே மாதிரியான சின்னச் சின்ன உருளைக்கிழங்கு கால் கிலோ.  வேகவைத்துத் தோல் உரித்துக்கொள்ளவும். வெந்த கிழங்கில் இரண்டு மூன்று இடங்களில் சற்றுப் பெரிய ஊசி அல்லது பல் குத்தும் குச்சியால் குத்திவிட்டுவிட்டு மிளகாய்த்தூள், உப்புச் சேர்த்து &lt;br /&gt;வதக்கி வைத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளி கால் கிலோ நன்கு வேக வைத்துச் சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய்(தேவை எனில்) சேர்த்து அரைக்கவும். வெங்காயம் தேவைப்பட்டால் சேர்க்கலாம். பூண்டைக் குறைத்து வெங்காயம் சேர்க்கலாம்.  அல்லது பூண்டு போடாமல் வெங்காயம் சேர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வதக்க, தாளிக்க எண்ணெய் அல்லது வெண்ணெய்/வனஸ்பதி, க்ரீம் அல்லது வெண்ணெய், அல்லது சீஸ், தயிர் கெட்டியாக.  மஞ்சள் தூள்&lt;br /&gt;&lt;br /&gt;கரம் மசாலா பவுடர் ஒரு டீஸ்பூன்.  கரம் மசாலா பவுடர் தயாரிப்பு முறை&lt;br /&gt;&lt;br /&gt;சோம்பு 50 கிராம்&lt;br /&gt;லவங்கப்பட்டை 25 கிராம்&lt;br /&gt;லவங்கம் என்ற கிராம்பு  ஐந்து எண்ணிக்கை&lt;br /&gt;பெரிய ஏலக்காய் நான்கு&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் பொடித்து வைத்துக்கொள்ளவும்.  கிராம்பு அதிகம் சேர்த்தால் காரம் அதிகமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கடாய் அல்லது நான்-ஸ்டிக் பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி ஒரு டீஸ்பூன் சர்க்கரை போடவும்.  சர்க்கரை கரைந்ததும் அரைத்த மசாலா விழுதைப் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.  எண்ணெய் பிரிகையில் வடிகட்டி வைத்த தக்காளிச் சாறை ஊற்றவும்.  தேவையான உப்பைப் போடவும். சற்றுக் கொதித்ததும் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளைப் போடவும். உருளைக்கிழங்கு சேர்ந்து கொதித்துக் கொண்டிருக்கையில் தயிரை நீர்விடாமல் நன்கு கடைந்து அதில் மேலே ஊற்றவும்.  சற்று நேரம் பொறுத்துக் கீழே இறக்கிவிட்டுக் க்ரீம் அல்லது வெண்ணெய் சேர்க்கவும்.  இல்லை எனில் சீஸைத் துருவிச் சேர்க்கவும். பச்சைக்கொத்துமல்லியால் அலங்கரிக்கலாம்.  சப்பாத்தி, பராட்டாவிற்கு ஏற்ற சைட் டிஷ் இது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-1141905825126865435?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/1141905825126865435/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=1141905825126865435' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/1141905825126865435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/1141905825126865435'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/11/blog-post.html' title='சில உருளைக்கிழங்கு செய்முறைகள் !'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1773817104561945197</id><published>2011-08-02T01:05:00.000-07:00</published><updated>2011-08-11T08:50:10.961-07:00</updated><title type='text'>நாரத்தை உணவுகள் சில.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-TqHEp08jLFY/TkP58wuHYyI/AAAAAAAABh4/-ZNU7S_Zi9w/s1600/DSC00439narathai.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/-TqHEp08jLFY/TkP58wuHYyI/AAAAAAAABh4/-ZNU7S_Zi9w/s200/DSC00439narathai.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5639625980663784226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாரத்தங்காய் சாப்பிட்டால் சிலருக்கு அதன் பிறகு வரும் ஏப்பத்தினால் பிடிக்காது.  ஆனால் நாரத்தங்காய் நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு உதவுவது எத்தனை பேருக்குத் தெரியும்?  உணவு செரிமானம் ஆகத் தினமும் நாரத்தையை ஏதேனும் ஒரு உருவில் சாப்பிட்டு வரலாம். முதலில் நாரத்தங்காய்ப் பச்சடி செய்யும் முறையைப் பார்க்கலாமா?  நன்கு வளர்ந்த நாரத்தங்காய் இரண்டு. செடியிலிருந்து பறித்தாலோ அல்லது விலைக்கு வாங்கினாலோ வாங்கியதும் நன்கு கழுவி விட்டுப் பின்னர் வெந்நீரில் மூழ்கப் போட்டு வைக்கவும். பத்து நிமிடங்கள் இருந்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருட்கள்: நாரத்தை 2, புளி ஒரு எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் பத்து, ஐம்பது கிராம் இஞ்சி தோல் சீவிக்கொண்டு பொடியாக நறுக்கவும்.  பெருங்காயம், கடுகு, வெந்தயம், தாளிக்க எண்ணெய்(நல்லெண்ணெய் கிடைத்தால் நல்லது, இல்லை எனில் ஏதேனும் சமையல் எண்ணெய்), மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவைக்கு ஏற்ப.&lt;br /&gt;&lt;br /&gt;புளியை நன்கு நீரில் கரைத்துக்கொள்ளவும்.  இரண்டு கிண்ணம் புளிச்சாறு இருக்கலாம். நாரத்தையைப் பொடிப் பொடியாக நறுக்கி விதைகளை நீக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலி, கல்சட்டி அல்லது உருளி, நான் ஸ்டிக் கடாய் ஏதேனும் ஒன்றை வைத்து  எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் போடவும்.  கடுகு வெடித்ததும், நாரத்தங்காய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.  நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள் சேர்த்துப் புளிக்கரைசலை ஊற்றி உப்பும் சேர்க்கவும். நன்கு புளி வாசனை போகக் கொதித்துக் கெட்டியானதும் கீழே இறக்குகையில் பிடித்தமானால் ஒரு சின்னத் துண்டு வெல்லம் சேர்க்கவும்.  சேர்க்காவிட்டாலும் சுவை குன்றாது. இது வாயு, பித்தம் போன்றவற்றுக்கும் குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றிற்கும் சிறந்தது.  உடல் வெப்பம் குறையும். வயிற்றுப் புழு நீங்கும். பசியை அதிகரித்து நாக்கிற்குச் சுவை கூட்டும். &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-MuZXR5A_dTA/TkP6CSj3pVI/AAAAAAAABiA/qlgvwDBbv1U/s1600/DSC00438jathi.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/-MuZXR5A_dTA/TkP6CSj3pVI/AAAAAAAABiA/qlgvwDBbv1U/s200/DSC00438jathi.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5639626075646960978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாரத்தை சாதம்: இது இருமுறைகளில் செய்யலாம். முதல்முறை சாதாரணமாக எலுமிச்சை சாதம் செய்யும் முறையாகும்.  நல்ல ஜாதி நார்த்தங்காய் எனில் அதில் சாறு நிறைய இருக்கும்.  ஆகவே நாலு பேருக்கு ஒரு நார்த்தங்காய் போதுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருட்கள்: நார்த்தங்காய் ஒன்று, பச்சை மிளகாய் நான்கு, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு ஆகியவை ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன், கருகப்பிலை, தாளிக்க நல்லெண்ணெய் அல்லது ஏதேனும் சமையல் எண்ணெய். உப்பு தேவையான அளவுக்கு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை. சமைத்த சாதம் நான்கு கிண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதத்தை நன்கு உதிர்த்து உப்புச் சேர்த்துக்கொண்டு, மஞ்சள் தூள், நார்த்தைச் சாறு சேர்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் கலந்து வைக்கவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை போன்றவை போட்டுத் தாளித்து வேர்க்கடலை வறுபட்டதும், ப.மிளகாய், கருகப்பிலை சேர்த்து அதைக் கலந்து வைத்த சாதத்தில் போட்டுக் கிளறவும். அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை: இதற்கும் நார்த்தங்காய் மற்றப் பொருட்கள் அனைத்தும் முன்னர் சொன்னபடியே எடுத்துக்கொள்ளவும்.  பச்சை மிளகாய் இரண்டைக் குறைத்துக்கொண்டு காய்ந்த மிளகாய் இரண்டை எடுத்துக்கொள்ளவும்.  தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், மி.வத்தல் போன்றவற்றைச் சிறிது உப்புச் சேர்த்து நன்கு அரைக்கவும்.  தண்ணீர் விட வேண்டாம். பின்னர் அதை வடித்த சாதத்தில் போட்டுக் கலக்கவும்.  நாரத்தைச் சாறு பிழிந்து கொண்டு சாதத்தில் கலக்கவும்.  பின்னர் மேலே சொன்னபடி தாளிதம் செய்து கொண்டு தாளிதத்தைச் சாதத்தில் கலக்கவும். தயிர்ப்பச்சடியோடு பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;நார்த்தை இலைப்பொடி அல்லது வேப்பிலைக்கட்டி: இதற்கு நார்த்தை இலைகளை நடுவில் நரம்பு நீக்கி இரண்டு கிண்ணங்கள் எடுத்து வெயிலில் காய வைத்துக்கொள்ளவும். ஓமம் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முறையில் ஓமத்தைக் குறைத்துக் கொண்டு மி.வத்தல் நான்கு அல்லது ஐந்து, உ.பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.எல்லாப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கொண்டு மிக்சியில் போட்டுப் பொடி செய்து கொள்ளவும்.  வாயில் வரும் சுவையற்ற தன்மை நீங்கவும், உணவுச் சுவை தெரியவும் இந்தப் பொடியில் கொஞ்சம் சூடான சாதத்தைப் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிட்டால் நல்லது.  மோர் சாதத்துக்கும் ஊறுகாய் போல் பயன்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-1773817104561945197?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/1773817104561945197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=1773817104561945197' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/1773817104561945197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/1773817104561945197'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/08/blog-post.html' title='நாரத்தை உணவுகள் சில.'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-TqHEp08jLFY/TkP58wuHYyI/AAAAAAAABh4/-ZNU7S_Zi9w/s72-c/DSC00439narathai.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-4673260078851308831</id><published>2011-07-01T03:28:00.000-07:00</published><updated>2011-07-01T03:34:05.474-07:00</updated><title type='text'>உங்கள் மேனிப் பராமரிப்புக்கு</title><content type='html'>வீட்டு மருந்துக் குறிப்புகள்:  &lt;br /&gt;&lt;br /&gt;கண்களுக்குக்கீழே உள்ள கருவளையம் போக்கப் பயத்த மாவு, கசகசாவை அரைத்துப் பூசி வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல் தடிப்புக்கு பூவன் வாழைப்பழத்தை  மசித்து மேலே தேய்க்கவும்.  &lt;br /&gt;&lt;br /&gt;சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்க பச்சைப் பயறு மாவு, கொண்டைக்கடலை மாவு, அரிசி மாவு, சர்க்கரை சம அளவு எடுத்துக் குழைத்து முகத்தில் தடவிக்கொள்ளவும். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யவும். சற்று நேரம் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவவும்.  கடுக்காய்ப் பிஞ்சை வாங்கி மோரில் ஊற வைத்து அம்மியில் அரைத்து விழுதைத் தலையில் தேய்த்துக்கொள்ளவேண்டும்.  பதினைந்து நிமிடம் ஊறிவிட்டுக் குளித்தால் உடலுக்கும், தலைச்சூடு குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;50 கிராம் எள்ளை நன்கு ஊற வைக்கவும். அதை நன்கு அரைத்துத் தலையில் தடவிக்கொண்டு சிறிது நேரம் ஊறிவிட்டுக் குளிக்கவும்.  தலைச்சூடு குறைவதோடு நரையும் தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலேயே சீயக்காய்த் தூள் கலக்கும் முறை: &lt;br /&gt;&lt;br /&gt;சீயக்காய், காய்களாக அரைகிலோ வாங்கிக் காய வைத்துக்கொள்ளவும்.  இதோடு பச்சைப் பயறு கால் கிலோ, புழுங்கலரிசி, நூறு கிராம், கோரைக்கிழங்கு கால் கிலோ, வெந்தயம் நூறு கிராம், வேப்பிலை காய வைத்தது இரண்டு கைப்பிடி, வெட்டி வேர்(நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்) 50 கிராம், எலுமிச்சைத் தோல்கள் காய வைத்தது, செம்பருத்திப் பூக்கள், இலைகள், இரண்டு கைப்பிடி, கறிவேப்பிலை காய்ந்தது இரண்டு கைப்பிடி, நெல்லிமுள்ளி(நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்) 50 கிராம் அல்லது பத்து பெரிய நெல்லிக்காய்கள் காய வைத்தது.  இவை அனைத்தையும் நன்கு காய வைத்து சீயக்காய் அரைக்கும் மாவு மிஷினில் கொடுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.  வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளிக்கையில் பயன்படுத்தலாம். தினசரி உடலுக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொண்டு ஊறிப் பின்னர் இந்தப் பொடியாலும் உடலைத் தேய்த்துக்கழுவலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் இவை பொய்யாய்ப்பழங்கதையாய்ப் போய்விட்டன.  என்றாலும் இம்முறையில் சீயக்காய் அரைத்துத் தலைக்குத் தேய்த்துக்குளித்தபோது இருந்த சுகமும், தலைமுடியின் அடர்த்தியும், நீளமும் இப்போதெல்லாம் காண முடியவில்லை. மேலும் ஆங்கில மருத்துவர்கள் வேறே எண்ணெய்க் குளியலே கூடாது என்றும் உடலில் எண்ணெயே பட வேண்டாம் என்றும் கூறிவிடுகிறார்கள்.  அவ்வப்போது இம்மாதிரிக்குறிப்புகள் வரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-4673260078851308831?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/4673260078851308831/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=4673260078851308831' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/4673260078851308831'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/4673260078851308831'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/07/blog-post.html' title='உங்கள் மேனிப் பராமரிப்புக்கு'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-8051334003847356566</id><published>2011-04-16T01:25:00.001-07:00</published><updated>2011-04-16T02:53:04.592-07:00</updated><title type='text'>வட இந்திய உணவு வகைகள், பானி பூரி, சனா பட்டூரா!</title><content type='html'>அடுத்து நாம் காணப்போவது பானிபூரி.  இதற்கும் பூரிகள் தேவை.  அதோடு காரச் சட்னிபோல் சட்னி செய்து அதை நீர்க்க்க் கரைத்துக்கொள்ளவேண்டும். பச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும்.   இதற்கும் உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும்.  தேவையான பொருட்களை இப்போது பார்க்கலாமா??&lt;br /&gt;&lt;br /&gt;பானிபூரிக்கான பூரிகள் செய்ய: மைதா ஒரு கிண்ணம், கால் கிண்ணம் உளுந்துமாவு, ஒரு கிண்ணம் ரவை, தேவையான உப்பு, பிசைய நீர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும்.  இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும்.  இவை நன்கு உப்ப வேண்டும்.  ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம்.  இவற்றையும் ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம்.  அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம்.  ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம்.   இங்கே பானி என்பது சட்னியை நீர்க்க்க் கரைப்பதைக் குறிக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டு புதினா இலைகள், ஒரு கட்டு கொத்துமல்லி இலைகள், ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு, இரண்டு டீஸ்பூன் ஜீரகம், ஒரு கிண்ணம் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.) இஞ்சி ஒரு துண்டு.  இவை தவிர சட்னி அரைத்த்தும் கலக்க வறுத்த ஜீரகப் பொடி இரண்டு டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பத்த்தில் நல்ல நைசாகவே  அரைக்கவும்.  அரைத்த்தைச் சற்று நேரம் வைக்கவும்.   &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும்.  ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும்.  அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த ப்யறு, உருளைக்கிழங்கை வைக்கவும்.  இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும்.  உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும்.  இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும்.  பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சோளே பட்டூரா அல்லது சனா பட்டூரா:  வட இந்தியாவைப் பொறுத்த வரையில் இது ஒரு முக்கிய உணவு.  தவறாமல் விருந்துகளில் இடம் பிடிக்கும் ஒன்று.  சோளே பட்டூரா என்பது வெறும் கடலைக்கூட்டு என்றே தென்னிந்தியாவில் நினைக்கப் படுகிறது.  உண்மையில் பட்டூரா என்பது ஒரு வகைப் பூரி.  சோளே என்பது மட்டுமே கடலையில் செய்யப் படும் கூட்டு அல்லது சைட் டிஷ்.   இரண்டும் சேர்ந்தே சோளே பட்டூரா அல்லது சனா பட்டூரா என அழைக்கப்படும்.  இதற்குச் சோளே அல்லது சனா செய்ய முதல் நாளே கொண்டைக்கடலையை ஊற வைக்க வேண்டும்.  இது செய்ய வெள்ளைக் கொண்டைக்கடலையே ஏற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான சாமான்கள்: வெள்ளைக் கொண்டைக்கடலை, கால் கிலோ, முதல் நாளே ஊற வைக்கவும்.பெரிய வெங்காயம் 2, தக்காளிப்பழம் 4 அல்லது தக்காளிச் சாறு ஒருகிண்ணம், இஞ்சி ஒரு துண்டு, மாதுளம்பழ முத்துக்கள் ஒரு தேக்கரண்டி, சீரகம் ஒரு டீஸ்பூன், மிளகாய்த் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன், தனியாத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலாத் தூள் அல்லது சாட் மசாலாத் தூள் அல்லது சனா மசாலாத் தூள் ஒரு  டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, புளி கரைத்த நீர் ஒரு கிண்ணம், உப்பு, வெல்லம் ஐம்பது கிராம், உப்பு தேவையான அளவு.  சர்க்கரை ஒரு டீஸ்பூன், எண்ணெய் நூறு கிராம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன பொருட்கள் சோளே அல்லது சனா செய்யப் போதுமானவை.  இதைத் தவிர பட்டூரா செய்யத் தேவையான பொருட்களைப் பார்ப்போமா?&lt;br /&gt;மைதா மாவு அரை கிலோ, வெண்ணெய் அல்லது டால்டா(விருப்பம்போல்) நூறு கிராம், உப்பு தேவையான அளவு, ஒரு சிட்டிகை சமையல் சோடா, தயிர் ஒரு கிண்ணம்.   பொரிக்க எண்ணெய் தேவையான அளவு. முதலில் மாவைப் பிசைந்து வைத்துக்கொள்ளலாம்,  மாவு நன்கு ஊறினால் தான் பூரி உப்புக்கொண்டு கரகரப்பாயும் கையால் பிய்த்தால் உள்ளே பொரபொரவென்றும் வரும்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அகலத் தட்டு அல்லது பேசனில் சிட்டிகை சோடாவைப் போட்டுக்கொண்டு நூறுகிராம் வெண்ணெயைப் போட்டு நன்கு குழைக்கவும்.  குழைக்க்க் குறைந்த்து ஐந்திலிருந்து பத்து நிமிஷம் ஆகவேண்டும்.  இப்போது தேவையான உப்பைச் சேர்த்துக் கலக்கவும்.  இதைச் சிறிது நேரம் நன்கு கலந்து விட்டுப்பின்னர் மைதாமாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துக்கொண்டே கலக்கவும்.  மாவும், வெண்ணெய் விழுதும் நன்கு கலக்க வேண்டும்.  கலக்க்க் கலக்க நம் கைகளுக்கே மாவின் வழவழப்புத் தன்மை மாறி பொரபொரவென வருவது புரியும்.  இப்போது கொஞ்சம் கொஞ்சமாய்த் தயிரைச் சேர்க்கவும்.  மாவை நன்கு பிசையவும்.  மாவு நன்கு கெட்டியாகப் பிசைந்த்தும், ஒரு வெள்ளைத் துணியை ஈரமாக்கி மாவை அதால் மூடி வைக்கவும்.  குறைந்த்து ஆறு மணி நேரமாவது மாவு ஊற வேண்டும்.  நடு நடுவே எடுத்து மாவைப் பிசைந்து திரும்ப மூடி வைக்கவும்.  இப்போது சனா செய்யலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;கொண்டைக்கடலையைக் குக்கரில் வேக வைக்கவேண்டும்.  வேக வைக்கும் முன்னர் ஊற வைத்த கொண்டைக்கடலையை ஒரு டேபிள் ஸ்பூன் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு,  அதோடு நறுக்கிய இஞ்சி, வெங்காயம், மாதுளம் விதைகள் இவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும்.  ஒரு அகன்ற பாத்திரம் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றி,  முதலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையைப் போடவும்.  சர்க்கரை கரைந்த்தும்,  அரைத்த விழுதைப் போட்டு நன்கு வெங்காய வாசனை போக்க் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத்தூள் போன்றவற்றைச் சேர்த்துக் கொண்டு சீரகத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.  சற்று வதங்கி எண்ணெய் பிரியும்போது வேக வைத்த கொண்டைக்கடலை, புளிக்கரைசல், தக்காளிச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும்.  சற்றுக் கொதித்த்தும் வெல்லம் சேர்க்கவும்.  வெல்லம் கட்டாயம் சேர்க்கவேண்டும்.  கெட்டியாகும் வரை கொதிக்க விட்டுப் பாதி  மசாலாத் தூளையும் சேர்க்கவும்.  சேர்ந்து சிறிது நேரம் கொதித்த்தும், கீழே இறக்கி மிச்சம் இருக்கும் மசாலாத் தூளைச் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சைக்கொத்துமல்லி, புதினா ஆகியவற்றால் அலங்கரிக்கவும்.  இதன் மேல் பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னியை ஊற்றிக்கொண்டு அப்படியேயும் சாப்பிடலாம். பட்டூராவுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;பட்டூரா செய்யும் விதம்: பிசைந்து வைத்த மாவைச் சின்ன உருண்டை எடுத்துக்கொண்டு பூரியாக இடவும்.  எண்ணெயைக் காய வைத்துப் பொரித்தெடுக்கவும்.  பூரி நன்கு உப்பிக்கொண்டு வெண்மையாக அப்படியே உப்பல் குறையாமல் இருக்கும்.  சாதாரண கோதுமை பூரியின் உப்பல் குறைந்து சொத சொதவென ஆவது போல் இதிலே ஆகாது.  பூரிகள் சின்னதாகவே இருக்கும்.  தமிழ்நாட்டு ஹோட்டல்களில் பெரியதாக ஒரே  பூரி கொடுக்கிறாப் போல் இருக்காது.  நிதானமாகச் சின்னச் சின்ன பூரிகளாக இருக்கும்.  அடுக்கி வைத்துக்கொண்டு சூடான சோளே/சனாவுடம் பரிமாறவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-8051334003847356566?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/8051334003847356566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=8051334003847356566' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/8051334003847356566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/8051334003847356566'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/04/blog-post_16.html' title='வட இந்திய உணவு வகைகள், பானி பூரி, சனா பட்டூரா!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-5838695626919663858</id><published>2011-04-16T01:20:00.001-07:00</published><updated>2011-04-16T02:52:27.433-07:00</updated><title type='text'>வட இந்திய உணவு வகைகள், பேல் பூரி!</title><content type='html'>வட இந்திய உணவு வகைகள் பற்றி ஒருமுறை கமலம் கேட்டிருந்தார்.  அதிலே பேல் பூரி, பானி பூரி, சனா பட்டூரா போன்றவற்றை அறிந்த்தில்லை என்றார்.  சில குறிப்புகள் இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பேல் பூரி:  இதர்கு முக்கியத் தேவை அரிசிப் பொரிதான். அதோடு வேக வைத்த உருளைக்கிழங்கைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.  வீட்டில் செய்த அல்லது கடையில் வாங்கிய ஓமப்பொடி, வறுத்துக் காரம் போட்ட கடலைப்பருப்பு அல்லது வேர்க்கடலை(பிடித்தமானால்) மாதுளை முத்துக்கள்(பிடித்தமானால்) பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைக்கொத்துமல்லி குறைந்த பக்ஷமாக ஒரு கட்டாவது இருத்தல் நலம். எலுமிச்சைச் சாறு ஒரு சின்னக் கிண்ணம்.  பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னி. சின்னச் சின்ன பூரிகள் பேல் பூரியில் கலக்க.  சட்னி வகைகளை முன் கூட்டியே தயாரித்து வைத்துக்கொள்ளுதல் நல்லது.   இதைத் தவிர இந்த பேல்பூரியில் கலக்கவேண்டிச் சின்னச் சின்ன பூரிகள் செய்து வைத்துக்கொள்ளலாம்.  இந்த பூரிகளைச் செய்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது கலந்து கொடுக்கலாம்.  &lt;br /&gt;முதலில் பூரி செய்யும் விதம்: ரவை ஒரு கிண்ணம், மைதா ஒரு கிண்ணம், கோதுமை மாவு ஒரு கிண்ணம்.  தேவையான அளவுக்கு உப்பு. பொரிக்க எண்ணெய்.  மாவு பிசைய நீர்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மாவையும் நன்கு உப்பைப் போட்டுக் கலந்துகொண்டு தேவையான நீரைச் சேர்த்துக்  கெட்டியாகப் பிசையவும். ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.  பின்னர் மறுபடி நன்கு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொண்டு மெல்லிய பூரிகளாக இடவும். இட்ட பூரியில் ஒரு ஃபோர்க் அல்லது முள் கரண்டியால் குத்திவிடவும். இப்படிக் குத்தாமல் பொரித்தால் பூரி உப்பிவிடும்.  தட்டையான பூரிகளே இதற்குத் தேவை.  ஆகையால் குத்திவிட்டுப் பூரிகளைப் பொரித்தெடுக்கவும்.  பேல் பூரி பண்ணப் போகும் நாளின் முந்தைய தினம் கூட இதைப் பண்ணி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கலாம்.  அடுத்து காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருட்கள்:  கொத்துமல்லி பெரியதாய்  ஒரு கட்டு அல்லது நடுத்தரமாக இரண்டு கட்டு, பச்சை மிளகாய், (காரமானது நல்லது) பத்து அல்லது பனிரண்டு.  இஞ்சி ஒரு துண்டு, பூண்டு(பிடித்தமானால், நான் பூண்டு சேர்ப்பதில்லை) இரண்டு டீஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு.  பெருங்காயம்(தேவை எனில்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொத்துமல்லிக்கீரை, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும்.  கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம்.  கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இனிப்புச் சட்னி:  அவசரமாகப் பண்ண இது வசதி.  பேரீச்சம்பழம் ஐம்பது கிராம், ஒரு சிறு உருண்டை புளி, உப்பு, மிளகாய்த் தூள் ஒரு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சர்க்கரை.  எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.  இதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;புளிச்சட்னி(இனிப்புச் சட்னி இரண்டாம் வகை) 100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும்.  இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும்.  ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு. ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்) ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.  இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும்.  மேலும் இந்த ஜீரகப் பொடி ரசம், சாட், தயிர்வடை போன்றவற்றிலும் கலக்கத் தேவைப்படும்.  ஆகவே நூறு கிராம் ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.  நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும்.  இது பல நாட்கள் பயன்படுத்தலாம்.  பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ பேல் பூரிக்கு வேண்டிய சாமான்கள் தயார்.  இவை எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொண்டால் நேரே பேல்பூரியைக் கலக்க ஆரம்பிக்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரிசிப் பொரி கைகளால் போட்டால் இரண்டு கை அளவு அல்லது இரண்டு பெரிய கிண்ணம் அளவு, அதே அளவு ஓமப்பொடி, நொறுக்கிய பூரிகள், (நம் விருப்பத்திற்கேற்ப பூரிகளைச் சேர்க்கலாம்) இதன் மேல் நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை சேர்க்கவும். இதன் மேலே இரண்டு டீஸ்பூன் காரச் சட்னியை ஊற்றி, இரண்டு டீஸ்பூன் இனிப்புச் சட்னியையும் ஊற்றவும். அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளவும்.  எல்லாவற்றையும் கலக்கும் முன்னர் நறுக்கி வைத்த கொத்துமல்லிக்கீரையைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். உடனே சாப்பிடவும்.  பேல்பூரியை முதலிலேயே கலந்து வைத்தால் சொத சொதவென ஆகிவிடும். ஆகவே அவ்வப்போது சாப்பிடும் நபர்களுக்கு ஏற்பக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலக்கவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-5838695626919663858?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/5838695626919663858/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=5838695626919663858' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/5838695626919663858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/5838695626919663858'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/04/blog-post.html' title='வட இந்திய உணவு வகைகள், பேல் பூரி!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-4120474331814150217</id><published>2011-03-25T06:32:00.001-07:00</published><updated>2011-03-25T06:35:10.675-07:00</updated><title type='text'>கொஜ்ஜு கொஜ்ஜு கொஜ்ஜு கொஜ்ஜு!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-Y6mHz68Wt4M/TYyZ_r_l4MI/AAAAAAAABVQ/Z664WowC8kw/s1600/index%25E0%25AE%2585%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 192px; height: 123px;" src="http://2.bp.blogspot.com/-Y6mHz68Wt4M/TYyZ_r_l4MI/AAAAAAAABVQ/Z664WowC8kw/s200/index%25E0%25AE%2585%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588010557080199362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஜெயஸ்ரீ சொன்ன மங்களூர் கொஜ்ஜுவைப் பத்தி இப்போப் பார்க்கலாமா?? பொதுவா இந்த கொஜ்ஜு அன்னாசிப் பழத் துண்டங்களில் தான் செய்யறாங்க.  ஆனால் வித்தியாசமாய் ஓர் அம்மாள் சங்கரா தொலைக்காட்சி சானலில் மாங்காய், பழுக்கும் நிலையில் இருப்பதில் செய்து காட்டினார்.  அவர் செய் முறையில் மி.வத்தல், தனியா, உளுத்தம்பருப்பு, வெந்தயம், வெள்ளை எள் ஆகியனவற்றோடு கொப்பரைத் துருவலும் இருந்தது. சிலர் தனியா சேர்க்க மாட்டோம் என்கின்றனர்.  பொதுவிலிது ஒரு வகைப் பச்சடி என்றே சொல்லலாம்.  இப்போ அன்னாசிப் பழத் துண்டுகளில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருட்கள் அன்னாசிப் பழத்துண்டுகள் ஒரு கிண்ணம். மி.வத்தல் 4 அல்லது 6 காரத்தின் தன்மைக்கேற்ப, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், உளுந்து இரண்டு டீ ஸ்பூன், வெள்ளை எள் ஒரு டீ ஸ்பூன், வெந்தயம் ஒரு டீ ஸ்பூன். கொப்பரைத் துருவல் ஒரு கப்.  தேங்காய் அதிகம் வேண்டாமெனில் அரை கிண்ணம் போதும்.  எல்லாவற்றையும் வறுக்க எண்ணெய்.  புளி ஒரு நெல்லிக்காய் அளவு நீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும்.   எண்ணெய் விட்டு எல்லாப் பொருட்களையும் அன்னாசிப் பழத் துண்டுகள் தவிர வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னாசித் துண்டங்களைக் குக்கரிலோ அல்லது நீர் வைத்து வாணலியிலோ வேக வைக்கவும்.  வேக வைத்த அன்னாசித் துண்டில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்துப் புளிவாசனை போகக் கொதிக்க விடவும்.  இப்போது பொடித்துள்ள பொடியைத் தேவையான அளவு போடவும்.  ஒரு சின்னத் துண்டு வெல்லம் இஷ்டப் பட்டால் சேர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலர் தனியாவோடு நாம் சாம்பாருக்கு அரைக்கிறாப் போல் கடலைப் பருப்பும் சேர்த்து வறுத்து அரைக்கின்றனர்.  இது அவரவர் ருசிக்கு ஏற்ப மாறுபடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-4120474331814150217?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/4120474331814150217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=4120474331814150217' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/4120474331814150217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/4120474331814150217'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/03/blog-post_25.html' title='கொஜ்ஜு கொஜ்ஜு கொஜ்ஜு கொஜ்ஜு!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Y6mHz68Wt4M/TYyZ_r_l4MI/AAAAAAAABVQ/Z664WowC8kw/s72-c/index%25E0%25AE%2585%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25BF.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-641023473430229696</id><published>2011-03-24T23:38:00.001-07:00</published><updated>2011-03-24T23:55:18.685-07:00</updated><title type='text'>நீங்க எனக்கு பிரண்டையா இல்லையா?</title><content type='html'>ஹிஹிஹி, சிநேகிதர்களைப் பிரண்டை எனக் கேலியாகச் சொல்லுவாங்க. அதுவும் எதனால் என்றால், அந்தக் காலங்களில் ஆங்கிலம் அதிகம் படிக்காத பாட்டிங்க இருந்தாங்க இல்லையா?  அவங்க கிட்டே ஃபிரண்ட் என்று சொன்னால், அவங்க பிரண்டை என்றே சொல்லுவாங்க. என் அப்பாவோட சித்தியும் அப்படித் தான் சொல்லி இருக்காங்க.  ஆனால் இங்கே சொல்லப் போறது பிரண்டை என்னும் வச்சிரவல்லி.  ஹிஹி, என்ன ஒரு பெண்ணோட பேர் மாதிரி இருக்கா?? வச்சிரவல்லி என்றும் ஒரு பெயர் பிரண்டைக்கு உண்டு. இதோ இதான் காய்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-JML3WWeI09o/TYw8LTtxQ0I/AAAAAAAABVI/aEuCoSZDkVw/s1600/images%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/-JML3WWeI09o/TYw8LTtxQ0I/AAAAAAAABVI/aEuCoSZDkVw/s200/images%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5587907402628416322" /&gt;&lt;/a&gt;  இங்கே மார்க்கெட்டில் கிடைக்குது.  வீட்டிலேயே நட்டிருந்தோம்.  கொடி வகை.  வேலை செய்யற ஆளுங்க எப்போ எப்படி வெட்டினாங்கனு புரியலை.  சித்தரத்தையையும் காணோம், இதையும் காணோம்.  இரண்டையும் திரும்ப வச்சிருக்கோம், வரணும்! சரி, சரி, இதோ விஷயத்துக்கு வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரண்டை வாங்கிக்குங்க.  குறைஞ்சது நாலு பேர் உள்ள குடும்பத்துக்குக் கால் கிலோ வேண்டும்.  வாங்கி நல்லாக் கழுவி, கணுவினருகே வெட்டி எடுத்துவிட்டு மிச்சத்தைத் துண்டாக நறுக்கி வைச்சுக்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;மி.வத்தல் உங்கள் காரத்தின் தன்மைக்கேற்ப பத்து அல்லது பனிரண்டு வைச்சுக்கலாம்.  பெருங்காயம் ஒரு துண்டு, கடுகு, உ.பருப்பு முறையே இரண்டு டீஸ்பூன், புளி ஒரு நெல்லிக்காய் அளவு. உப்பு தேவையான அளவ. நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாணலில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு முதலில் கடுகு, உ.பருப்பு வறுத்துத் தனியாக வைக்கவும். பெருங்காயத்தை எண்ணெயில்போட்டுப் பொரித்துக்கொண்டு மிளகாய் வற்றலையும் போட்டு வறுத்துக்கொள்ளவும்.  பின்னர் நறுக்கி வைத்திருக்கும் பிரண்டைகளைப் போட்டு நன்கு வதக்கவும்.  புளியையும் இதில் சேர்க்கவும்.  எல்லாவற்றையும் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கிவிட்டுப் பின்னர் ஆற வைக்கவும்.  ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு உப்புச் சேர்த்து அரைக்கவும்.  கொஞ்சம் கொர கொரப்பாக இருக்கையிலேயே தனியாக எடுத்து வைத்த கடுகு,உ.பருப்பைச் சேர்க்கவும்.  ஒரு சுற்றுச் சுற்றி விட்டுப் பின்னர் வெளியே எடுக்கவும்.  சூடான சாதத்தில், நல்லெண்ணெய் சேர்த்துக்கொண்டு பிரண்டைத் துவையலைப் போட்டுப் பிசைந்து சாப்பிடவும்.  வயிற்றுக் கோளாறுகள், ருசியின்மை, பசியின்மை ஆகியனவற்றுக்கு அரு மருந்து.  வயிறு உப்புசமாக இருந்தாலும் சரியாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இதன் கூடவே தொட்டுக்க சைட் டிஷாக மோர்க்குழம்பு அல்லது மோர்ச்சாறு பயன்படுத்தலாம்.  மோர்ச்சாறு சீக்கிரம் செய்ய முடியும்.  கெட்டியான புளித்த மோரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், அரிசி மாவு சேர்த்துக் கரைக்கவும்.  வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கடுகு, வெந்தயம், மி.வத்தல், ஓமம், து,பருப்பு, கருகப்பிலை தாளித்துக் கரைத்த மோரை ஊற்றவும்.  பொங்கி வரும்போது இறக்கி விடவும். இதை எந்தத் துவையல் அரைத்தாலும் சைட் டிஷாகப் பயன்படுத்தலாம். துவையல் என்பது முக்கியமான காய்கள், அல்லது பொருளை நன்கு வறுத்து மிளகாய் வற்றலோடு சேர்த்துச் செய்வது.  சட்னி என்பது எல்லாவற்றையும் பச்சையாக வைத்துச் செய்வது.  சட்னியில் தாளிதம் அரைக்க வேண்டாம்.  துவையலில் தாளிதத்தைச் சேர்த்து அரைக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-641023473430229696?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/641023473430229696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=641023473430229696' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/641023473430229696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/641023473430229696'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/03/blog-post_24.html' title='நீங்க எனக்கு பிரண்டையா இல்லையா?'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-JML3WWeI09o/TYw8LTtxQ0I/AAAAAAAABVI/aEuCoSZDkVw/s72-c/images%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-4092313083624979683</id><published>2011-03-17T21:50:00.000-07:00</published><updated>2011-03-17T22:03:21.574-07:00</updated><title type='text'>சப்பாத்தி சாப்பிடலாமா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-fZx3yqXqHfQ/TYLnTLjb02I/AAAAAAAABSM/brOxusJA2no/s1600/index%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 192px; height: 192px;" src="http://4.bp.blogspot.com/-fZx3yqXqHfQ/TYLnTLjb02I/AAAAAAAABSM/brOxusJA2no/s200/index%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5585280804597781346" /&gt;&lt;/a&gt;தினம் தினம் என்ன பண்ணறது சப்பாத்திக்கு?? அதுவும் தினசரிச் சாப்பாட்டிலே சப்பாத்தியும் உண்டுங்கறச்சே/ பாலாஜி அங்கிள் சொன்னாப்போல் ஆவக்காய் ஊறுகாயும், வெண்டைக்காய்க் கறியும் நல்லாத் தான் இருக்கும்.  ஆனால் வெண்டைக்காயைச் சாதாரணமாய்ப் பண்ணறாப்போல் பண்ணாமல் கொஞ்சம் வித்தியாசமாப் பார்ப்போமா??&lt;br /&gt;&lt;br /&gt;வெண்டைக்காய் உங்க தேவைக்கு ஏற்பக் கால் அல்லது அரை கிலோ. குடமிளகாய் நூறு கிராம், தக்காளி பெரிது என்றால் ஒன்று, சின்னது என்றால் இரண்டு.  மி.பொடி, ஒரு டீஸ்பூன், தனியா பொடி, பெருங்காயப் பொடி ஒரு டீஸ்பூன், ம.பொடி, உப்பு, சீரகம், கடுகு தாளிக்க. அல்லது சாம்பார் பொடி இரண்டு டீ ஸ்பூன். எண்ணெய். &lt;br /&gt;&lt;br /&gt;வெண்டைக்காயை ரொம்பப் பொடியாக நறுக்காமல் ஒரு இஞ்ச் நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளவும்.  அதே அளவுக்குக் குடை மிளகாய், தக்காளியையும் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் வைச்சு, கடுகு, சீரகம் தாளிக்கவும். பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி சேர்க்கவும். வெண்டைக்காய்த் துண்டங்களைப் போட்டுச் சற்று வதக்கவும்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Y76z7BWyIA8/TYLnPpjaSUI/AAAAAAAABSE/xv69ulTgy8s/s1600/index%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 193px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-Y76z7BWyIA8/TYLnPpjaSUI/AAAAAAAABSE/xv69ulTgy8s/s200/index%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_558528074393267394" /&gt;&lt;/a&gt; குடைமிளகாய்த் துண்டங்களையும் சேர்க்கவும். இரண்டும் நன்கு கலக்கும் வரை வதக்கிக் கொண்டு, மிளகாய்த்தூள், தனியாத் தூள் அல்லது சாம்பார் பொடியும் சேர்த்து,&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-CVtQiZ4Wmto/TYLnJWepujI/AAAAAAAABR8/i4Ws1FkDpII/s1600/images%25E0%25AE%25A4%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 185px;" src="http://3.bp.blogspot.com/-CVtQiZ4Wmto/TYLnJWepujI/AAAAAAAABR8/i4Ws1FkDpII/s200/images%25E0%25AE%25A4%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5585280635731819058" /&gt;&lt;/a&gt; நறுக்கிய தக்காளித் துண்டங்களையும் சேர்த்து உப்பையும் சேர்க்கவும்.  மூடி வைக்க வேண்டாம்.  அப்படியே சற்று நேரம் நன்கு கலந்து கொண்டு வதக்கிக் கொள்ளவும். கறி நன்கு வதங்கியதும், சூடாகச் சப்பாத்தியுடன் பரிமாறவும். இதுக்கு வெங்காயமோ, பூண்டோ தேவை இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-4092313083624979683?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/4092313083624979683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=4092313083624979683' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/4092313083624979683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/4092313083624979683'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/03/blog-post_17.html' title='சப்பாத்தி சாப்பிடலாமா?'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-fZx3yqXqHfQ/TYLnTLjb02I/AAAAAAAABSM/brOxusJA2no/s72-c/index%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-6643390361405377043</id><published>2011-03-17T21:29:00.000-07:00</published><updated>2011-03-17T21:49:32.073-07:00</updated><title type='text'>பீட்ரூட்டைச் சப்பாத்திக்கு வேண்டாமே!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-4VbJkbiywLc/TYLkRZ8iz9I/AAAAAAAABR0/21RvtNMJ6Kk/s1600/index%25E0%25AE%25AA%25E0%25AF%2580%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%2582%25E0%25AE%259F%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-4VbJkbiywLc/TYLkRZ8iz9I/AAAAAAAABR0/21RvtNMJ6Kk/s200/index%25E0%25AE%25AA%25E0%25AF%2580%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%2582%25E0%25AE%259F%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5585277475566571474" /&gt;&lt;/a&gt;பஸ்ஸிலே சப்பாத்திக்குத் தொட்டுக்க பீட்ரூட் தான் அருமையான இணை உணவுனு நம்ம அநன்யா அக்கா சொல்லி இருக்கிறதை எல்லாரும்/சிலர்?? ஆமோதிக்கிறாங்க. என்னப் பொறுத்தவரையில் பீட்ரூட் என்பது பச்சையாய்ச் சாப்பிடும் ஓர் காய்.  அதைக் காரட், தக்காளி போன்றவற்றுடன் வெங்காயம் சேர்த்தோ, சேர்க்காமலோ சாலடாகச் சாப்பிடலாம். ஆனால் சில சமயம் வேறே வழி இல்லைனா பண்ணித் தான் ஆகணும். போரடிக்கும், வேறே வழியே இல்லை.  எல்லா ஹோட்டலிலும் தினம் போடும் ஒரு கறியில் பீட்ரூட் தமிழ்நாடு பூராவும் அநேகமாய் எல்லா ஹோட்டல்களில் தினமும் பீட்ரூட் கறி இருக்கும். க்ர்ர்ர்ர்ர்ர்ர். நாம போரடிச்சா பீட்ரூட்டைக் கறி பண்ணிச் சாப்பிட்டுக்கலாம், என்னிக்கோ.  அது கூட அன்னிக்குனு பார்த்து சாப்பாடே வேண்டாம்னு உங்க வீட்டிலே எல்லாரும் உண்ணாவிரதம் இருக்க நேரிடும். இருந்தாலும் முதல்லே பீட்ரூட் கறியை வெங்காயம் சேர்த்தும், சேர்க்காமலும் எப்படிப் பண்ணறதுனு பார்க்கலாம்.  இது சப்பாத்திக்கெல்லாம் இல்லை. சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ் அடுத்துத் தரேன் பாருங்க. என்ன வெங்காயம்?? பூண்டு?? அதெல்லாம் எதுக்கு வேண்டாம். அது இல்லாமலேயே.&lt;br /&gt;&lt;br /&gt;பீட்ரூட் கால் கிலோ: போதுமானு கேட்காதீங்க. இதைச் சாப்பிடவே நீங்க வாசல்லே போர்டு வைக்கணும். வெங்காயம் சேர்த்தால் பெரிய வெங்காயம் இரண்டு. பொடிப் பொடியா நறுக்கி வைங்க. நினைவா ரங்க்ஸை வெங்காயம் உரிச்சு நறுக்கி வைக்கச் சொல்லுங்க. எதுக்குனு சொல்லவேண்டாம்.  சமையல்லே பீட்ரூட்னு தெரிஞ்சா எங்கேயானும் வெளியே சாப்பாடுனு ஓடிட சான்ஸ் இருக்கு. பச்சை மிளகாய், இரண்டு, இஞ்சி ஒரு துண்டு, தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு தேவைக்கு ஏற்ப.  கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை தாளிக்க எண்ணெய்.  இந்தப் பச்சை மிளகாய், இஞ்சி, தே.துருவலை மிக்சியிலோ அம்மியிலோ கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.  அதைத் தனியா வச்சுக்கோங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ பீட்ரூட்டை நல்லா அலம்பி முழுசா, கவனிக்கவும், முழுசா குக்கரில் வேக வைக்கவும்.  வேக வைக்காமல் நறுக்க எனக்குக் கஷ்டமா இருக்கு.  அதனாலே குக்கரில் வேக வைச்சுடுவேன்.  அப்புறம் தோலை உரிச்சா உ.கி. தோல் மாதிரி வந்துடும். இப்போ நறுக்கிக்குங்க. வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் தாளிக்கத் தேவையான அளவுக்கு ஊற்றினால் போதும்.  கடுகு, உ.பருப்பு தாளித்துக் கருகப்பிலை போடவும். வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.  வெங்காயம் போடலை என்றால் நறுக்கி வைச்ச பீட்ரூட்டைப் போட்டு உப்புப் பொடியைச் சேர்க்கவும். மூடி வைச்சுக் கொஞ்ச நேரம் வதக்கிவிட்டுப் பின்னர் கரகரப்பாய் அரைச்ச ப.மி. இஞ்சி, தே,து, சேர்க்கவும். நன்கு கிளறவும். ஒரு ஐந்து நிமிஷம் விடாமல் கிளறியதும் விரும்பினால் பச்சைக் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும். &lt;br /&gt;&lt;br /&gt;இதை விட்டால் பீட்ரூட்டைத் துருவிப் பால் சேர்த்தோ, சேர்க்காமலோ அல்வா பண்ணலாம். ஜாம் மாதிரிக் கிளறி வைச்சுக்கலாம். முகத்துக்கு அழகு சாதனமாய்ப் பயன்படுத்தலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-6643390361405377043?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/6643390361405377043/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=6643390361405377043' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/6643390361405377043'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/6643390361405377043'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2011/03/blog-post.html' title='பீட்ரூட்டைச் சப்பாத்திக்கு வேண்டாமே!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-4VbJkbiywLc/TYLkRZ8iz9I/AAAAAAAABR0/21RvtNMJ6Kk/s72-c/index%25E0%25AE%25AA%25E0%25AF%2580%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%2582%25E0%25AE%259F%25E0%25AF%258D.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-3939875596079415063</id><published>2010-11-05T08:30:00.000-07:00</published><updated>2010-11-05T08:40:54.468-07:00</updated><title type='text'>வயிறு வலிக்குதே!</title><content type='html'>தீபாவளி பட்ச்ணங்களை ஒரு பிடி பிடிச்சா வயிறு வலிக்கத் தான் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;க்ர்ர்ர்ர், யாரு சாப்பிட்டாங்க பக்ஷணங்கள் எல்லாம்??? இருந்தாலும் வயிறு வலிக்குது! &lt;br /&gt;&lt;br /&gt;சரி, சரி, இப்போ என்ன? மருந்தைச் சாப்பிட்டால் எல்லாம் சரியாயிடும். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த மருந்தும் நானே தான் கிளறிச் சாப்பிடவேண்டி இருக்கு.  :(&lt;br /&gt;&lt;br /&gt;சரி, சரி எனக்குச் சொல்லிக் கொடு, நான் கிளறுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டாம்பா சாமி, அன்னிக்கு அல்வா கிளறினாப்போல் ஆயிடும். அப்புறமா அது சொத்தை, இது நொள்ளைனு என்னைச் சொல்லுவீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு பேருமாச் சேர்ந்து தானே அல்வா கிளறினோம்??&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னமோ சரிதான். ஆனால் சரியா வரலைனதும், எனக்கு அல்வா கொடுத்துட்டீங்க! நானே மருந்தைக் கிளறிக்கறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;சரி, சாமான்கள் என்னனு சொல்லு, அதையாவது எடுத்து வைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வறுத்துப் பொடிக்க வேண்டிய சாமான்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுக்கு&lt;br /&gt;மிளகு,&lt;br /&gt;ஜீரகம்,&lt;br /&gt;சோம்பு,&lt;br /&gt;கசகசா,&lt;br /&gt;கிராம்பு,&lt;br /&gt;ஏலக்காய், &lt;br /&gt;கருஞ்சீரகம்&lt;br /&gt;இலவங்கப்பட்டை,&lt;br /&gt;சித்தரத்தை,&lt;br /&gt;திப்பிலி,&lt;br /&gt;தேசாவரம் அல்லது கண்டந்திப்பிலிக்குச்சிகள்&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாத்தையும் நல்லாக் காய வைச்சுச் சம அளவு எடுத்துக்கவும். வெறும் வாணலியில் வறுக்கவும்.  வறுத்ததை மிக்சியில் போட்டு நன்றாய்ப் பொடியாக்கவும்.  அநேகமாய் நைசாகவே வரும். அப்படிக்கொஞ்சம் கொர கொரனு இருந்தாலும் பரவாயில்லை.  பொடியைத் தனியாய் வைத்துக்கொள்ளவும்&lt;br /&gt;&lt;br /&gt;இனி பச்சையாய் அரைக்க&lt;br /&gt;இஞ்சி 50 கிராம்&lt;br /&gt;கொத்துமல்லி விதை 100 கிராம்&lt;br /&gt;இவற்றை நன்கு நீர் விட்டு அரைத்து, வடிகட்டிச்  சாறு எடுத்துக்கொள்ளவும்.  மூன்று நான்கு முறை அரைத்துச் சாறை எடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பட்டி பிடித்தால் கருப்பட்டி அல்லது வெல்லம். தூளாக்கியது ஒரு கிண்ணம் அல்லது 100 கிராம். கிளறுவதற்குத் தேவையாக ஒரு கரண்டி அல்லது ஐம்பது கிராம் நல்லெண்ணெய், ஐம்பது கிராம் நெய். சுத்தமான தேன் ஒரு கரண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல இரும்புச் சட்டியில்(நான் - ஸ்டிக் எல்லாம் சரிப்படாது. இரும்பின் சத்து மருந்தில் சேரணும்) இஞ்சி, கொத்துமல்லிச் சாறை விட்டுக் கொதிக்க விடவும். நன்கு தள தளவெனக் கொதிக்கும்போது தூளாக்கிய கருப்பட்டியைப் போடவும். கருப்பட்டி கரைந்து வாசனை போனதும், பொடி பண்ணி வைத்த மருந்துக் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும்.  விடாமல் கிளறவும்.  நடுவில் கொஞ்சம் நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறிக் கொண்டு இருக்கவும்.  கையில் ஒட்டாமல் உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும்.  ஆறியதும் தேனைச் சேர்த்து, ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.  ஒரு சின்ன ஸ்பூனால் ஒரு உருண்டை சாப்பிட்டாலே போதுமானது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-3939875596079415063?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/3939875596079415063/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=3939875596079415063' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/3939875596079415063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/3939875596079415063'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2010/11/blog-post.html' title='வயிறு வலிக்குதே!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-2951009781971312439</id><published>2010-09-12T01:26:00.000-07:00</published><updated>2010-09-13T02:22:52.037-07:00</updated><title type='text'>கொழுக்கட்டை வேணுமோ, கொழுக்கட்டை?</title><content type='html'>விநாயகர் சதுர்த்திக் கொழுக்கட்டை செய்யும் விதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;முதல் முறை உருண்டை கொழுக்கட்டை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு கிண்ணம் அரிசி மாவு,  ஒரு கிண்ணம் தூளாக்கிய வெல்லம், தேங்காய்க் கீறல்கள், ஏலக்காய், நீர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அரிசி மாவும் சரியாய் இருக்கும்.  இல்லாவிட்டால் பச்சரிசி ஒரு கிண்ணம் எடுத்துக் களைந்து கொண்டு நீரில் ஊற வைக்கவும்.  அரிசி ஒரு மணி நேரமாவது ஊறிய பிறகு நீரை வடித்துவிட்டுப் பின் மிக்சியில் மாவாக்கவும்.   மாவைச் சூடு வர வெறும் வாணலியில்/கடாயில் வறுத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் ஒரு கிண்ணம் நீரைச் சுட வைக்கவும்.  நீர் கொதித்து வரும்போது தூளாக்கிய வெல்லத்தைச் சேர்க்கவும்.  வெல்லம் நீரில் கரையும்போது தேங்காய்க்கீறல்களைச் சேர்த்துவிட்டு, அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும்.  நன்கு கிளறவும். மாவு நன்கு வேக வேண்டும். நன்கு வெந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும். சிறு சிறு உருண்டைகளாய்ப் பிடிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இட்லிப் பானையில் நீர் ஊற்றி, இட்லித் தட்டில் அல்லது ஒற்றைத் தட்டில் எண்ணெய் தடவி, அல்லது இலை/துணி போட்டுப்  பிடித்த உருண்டைகளை வைத்துப் பத்து நிமிடம் வேக வைக்கவும்.  பின் வெளியே எடுக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாய் இந்தக் கொழுக்கட்டையைப் பிடி கொழுக்கட்டை என்று சொல்வதுண்டு.  பெரும்பாலும் விநாயகருக்கு வேண்டிக்கொண்டு நினைத்த காரியம் பூர்த்தியானால் இந்தப் பிடி கொழுக்கட்டை செய்து விநியோகம் பண்ணிப் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்துப் பூரணக் கொழுக்கட்டை.  பொதுவாய் இதுதான் விநாயக சதுர்த்திக்குச் செய்வார்கள்.  இது வெறும் தேங்காய்ப் பூரணம், கடலைப்பருப்புப் பூரணம், எள் பூரணம், உளுந்துப் பூரணம் என நான்கு வகைகளில் செய்வது உண்டு. &lt;br /&gt;முதலில் பூரணங்கள் செய்யும் முறை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தேங்காய்ப் பூரணம்&lt;/span&gt;: தேங்காய் சிறிது ஒன்று. ஏலக்காய் நாலைந்து பொடித்துக்கொள்ளவும். பாகு வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன் தூளாக்கியது. வெல்லம் ரொம்பச் சேர்த்தால் பூரணம் கொழுக்கட்டையில் இருந்து வெளியே வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேங்காயை உடைத்துத் துருவிக் கொள்ளவும்.  ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் தேங்காய் துருவலோடு வெல்லத்தையும் சேர்க்கவும்.  நீர் சேர்க்கவேண்டாம்.  வெல்லத்தில் உள்ள நீரும் தேங்காய் துருவலில் உள்ள நீருமே போதுமானது.  வெல்லமும் தேங்காய்த் துருவலும் நன்கு கலக்கவேண்டும்.  நன்கு கலந்து பூரணம் உருட்டும் பதம் வரும்போது இறக்கி ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கடலைப்பருப்புப் பூரணம்:&lt;/span&gt;  கடலைப்பருப்பு ஒரு சின்னக் கிண்ணம், வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சின்னக் கிண்ணம் கடலைப்பருப்பை எடுத்து வறுத்து ஊற வைக்கவும்.  ஊற வைத்த பருப்பை வேக வைத்து அதோடு வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.  அரைத்த விழுது தளர இருந்தால் நான் ஸ்டிக் கடாயில் போட்டுச் சிறிது நேரம் கிளறினால் கெட்டியாகிவிடும். ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எள் பூரணம்:&lt;/span&gt; ஒரு சிலர் கடலைப்பருப்புப் பூரணத்திலேயே எள்ளையும் வறுத்துப் பொடித்துச் சேர்ப்பார்கள்.  சிலருக்குத் தனியாக எள் பூரணம் செய்வார்கள். &lt;br /&gt;கறுப்பு எள் ஐம்பது கிராம். ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத் தூள். ஏலக்காய், &lt;br /&gt;எள்ளைக் களைந்து கல்லரித்துக்கொண்டு வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.  பின் பொடித்த வெல்லம், ஏலக்காயோடு சேர்த்து அம்மியிலோ அல்லது மிக்சியிலோ பொடி பண்ணிக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உளுந்தம் பூரணம்:&lt;/span&gt;&lt;br /&gt;உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம், மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு, தேங்காய்த் துருவல், தாளிக்க கடுகு, உ.புருப்பு, கருகப்பிலை, விரும்பினால் எலுமிச்சம்பழம் ஒரு மூடி.&lt;br /&gt;&lt;br /&gt;உளுந்தைக் களைந்து கல்லரித்துக்கொண்டு ஊற வைக்கவும்.  ஒரு மணி நேரம் ஊறியதும் வடிகட்டிவிட்டுப் பின்மிக்சியில் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து உளுத்தம்பருப்பை அரைக்கவும்.  ரொம்ப நைசாக அரைக்கவேண்டாம். என்றாலும் பருப்பும் தெரியக் கூடாது.  அரைத்த விழுதை ஒரு ஒற்றைத் தட்டில் எண்ணெய் தடவிப் பரப்பி இட்லிப் பானையில் வேக வைக்கவும்.  குச்சியால் அல்லது ஒரு கரண்டி நுனியால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது வெளியில் எடுத்து ஆறவிடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடாயில் தாளிக்க எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை சேர்க்கவும். வெந்த உளுத்தம்பருப்பு விழுதைச் சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவலும் சேர்க்கவும்.  பூரணம் உதிர் உதிராக வந்ததும் கீழே இறக்கவும்.  விரும்பினால் எலுமிச்சம்பழம் ஒரு மூடி பிழிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு பூரணங்களும் ரெடியாயிடுச்சு.  இப்போ மேல் மாவு தயாரிக்கும் முறை.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி நல்ல பச்சரிசியாக இருத்தல் நலம்.  தமிழ்நாடு என்றால் ஐஆர் இருபது அரிசி கிடைக்கும், மற்ற இடங்களில் உள்ளவர்கள் நல்ல பச்சரிசியாகப் பார்த்து எடுத்துக்கொள்ளவும்.  யு.எஸ். , கனடா என்றால் அமெரிக்கன் லாங் கிரெயின் ரைஸ் சரியாய் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி 250 கிராம். வேக வைக்க நீர் ஒரு சின்னக் கிண்ணம், ஒரு சிட்டிகை உப்பு. ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசியை நன்கு களைந்து நீரில் ஊற வைக்கவேண்டும். குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஊறினால் நல்லது.  ஊறிய அரிசியை நீரை வடித்துவிட்டு மிக்சியில் போட்டுத் தேவையான நீரை மட்டும் கொஞ்சமாய் ஊற்றி நல்ல நைசாக அரைக்கவும். கையால் தொட்டால் மாவில் கரகரப்புத் தெரியக் கூடாது.  நல்ல சில்க் மாதிரி வழவழப்பாக இருக்க வேண்டும்.  மாவை எடுத்து வைத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் நீர் ஒரு சின்னக் கிண்ணம் ஊற்றி ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போடவும்.  நீர் நன்கு கொதிக்கவேண்டும்.  இப்போது அரைத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொட்டிக் கிளறவேண்டும்.   மாவு நிறம் மாறும் வரை நன்கு கிளறிக் கொள்ளவும்.  மாவு நன்கு வெந்ததும் பந்துபோல் திரண்டு வரும்.  எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து எண்ணெயும், சூடான நீரும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும், உள்ளே கட்டிகள் இல்லாமல் நன்கு பிசைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாவில் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்துக் கிண்ணம் போல் செய்யவும்.  தேவையான பூரணத்தை உள்ளே வைத்து நிரப்பவும்.  இப்படிக் கொழுக்கட்டைகள் செய்து விட்டு இப்போது அவற்றை வேகவிடவேண்டும்.  இட்லிப் பானையில் நீர் ஊற்றி இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டைப் போட்டு அதில் செய்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து வேகவிடவேண்டும்.   ஏற்கெனவே வெந்த மாவு என்பதால் அதிக நேரம் விடவேண்டாம்.  கொழுக்கட்டைகள் மேலே எண்ணெய் கசிந்தாற்போல் நீர் வந்து வேர்த்துவிட்டிருக்கும்.  அப்போது எடுத்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலர் மாவை நீர் விட்டு அரைக்காமல் நீரை வடித்துவிட்டு மாவைப் பொடியாக்கியும் வைத்துக்கொள்வார்கள். இது அவரவர் செளகரியம் போல் செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அடுத்துப் பால் கொழுக்கட்டை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும் அரிசி தேவை. வெல்லம், தேங்காய் பெரிதாக ஒன்று. ஏலக்காய்.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி 250 கிராம். பாகு வெல்லம் 300/400 கிராம், தேங்காய் பெரிதாக ஒன்று, ஏலக்காய். தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு ஒரு சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசியை நன்கு ஊற வைக்கவேண்டும்.  ஊறிய அரிசியை தேங்காய் துருவல் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்.  தனியாக வைத்துக்கொள்ளவும்.  பெரிய தேங்காயை எடுத்து உடைத்துத் துருவிப் பாலை எடுக்கவும்.  முதல் பாலைத் தனியாக வைக்கவும்.  அடுத்த இரண்டு முறை எடுக்கப் படும் தேங்காய்ப் பாலை ஒன்றாக வைத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்கல உருளி/கடாயில் ஒரு கிண்ணம் நீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து ஒரு முட்டை நல்லெண்ணெய் அல்லது நெய் விடவும். நீர் கொதித்து வரும்போது அரைத்த மாவைப்போட்டுக் கிளறவும். நன்கு பந்து போல் மாவு வரும்வரை கிளறவும்.  ஆற வைத்துச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.  ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இன்னொரு உருளி/கடாயில் கொஞ்சம் போல் நீர் விட்டு வெல்லத்தைப் போடவும்.  வெல்லம் கரைந்து வரும்போது இரண்டாம் முறை, மூன்றாம் முறை எடுத்த தேங்காய்ப்பாலை விட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து வரும்போது உருட்டி வைத்துள்ள உருண்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் போடவும்.  முதலில் போட்டவை வெந்து மேலே மிதந்து வரும்போது அடுத்த முறை போடலாம்.  இப்படி எல்லாவற்றையும் போட்டதும், சிறிது நேரம் சேர்ந்து கொதிக்கவிடவும்.  பின் கீழே இறக்கி ஆற வைத்து முதல் தேங்காய்ப் பாலையும் ஏலக்காய்ப் பொடியையும் சேர்க்கவும்..&lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு இந்த உருண்டைகளை நேரே தேங்காய்ப்பாலில் போடும்போது அவை கரைந்துவிடுமோ என யோசிப்பார்கள்.  அவர்கள் உருட்டி வைத்ததும் உருண்டைகளை இட்லிப் பானையில் வேகவிட்டு வைத்துக்கொள்ளவும்.  தேங்காய்ப் பால், வெல்லத்தோடு சேர்ந்து நன்கு கொதிக்கும்போது கொழுக்கட்டை உருண்டைகளைச் சேர்க்கலாம். இம்முறையில் உருண்டைகள் உடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ரவையில் செய்யும் நெய்க்கொழுக்கட்டை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இதை கணபதி ஹோமத்துக்கோ, அல்லது நவகிரஹ ஹோமம் போன்றவை செய்யும் முன்னர் செய்யப் படும் கணபதி ஹோமத்துக்கோ தான் முதல்நாளே செய்து வைத்துக்கொள்வது வழக்கம்.  இன்றைய நாட்களில் பெரும்பாலான பெண்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் அவங்க ஓரளவு நம் வழக்கப்படி பண்டிகைகள் கொண்டாடும்போது பாரம்பரிய உணவு வகைகளைச் செய்யமுடியாமல் திண்டாடுகிறார்கள். அவங்க விநாயக சதுர்த்திக்கு இந்த ரவைக் கொழுக்கட்டையைச் செய்து கொள்ளலாம்.  வேலைக்குப் போகும் பெண்கள் விநாயக சதுர்த்திக்கு முன்னர் வரும் ஏதாவது விடுமுறை நாளில் இதைச் செய்து (ருசி பார்க்காமல்) ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு விநாயக சதுர்த்தி அன்று நிவேதனத்துக்குப் பயன் படுத்தலாம்.  இதுவும் பதினைந்து நாட்களுக்குக் குறையாமல் இருக்கும்.  இதற்குத் தேவையான பொருட்கள் பார்ப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பூரணம் செய்ய: &lt;/span&gt;ஒரு சின்னக் கிண்ணம் தேங்காய் துருவல், 1/2 கிண்ணம் வெல்லம் தூளாக்கியது, ஏலக்காய்ப் பொடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மேல் மாவிற்கு&lt;/span&gt;: சன்னமான நைஸ் ரவை ஒரு கிண்ணம். ஒரு சிட்டிகை உப்பு, பிசைய அரைக்கிண்ணம் பால். (காய்ச்சாத பாலும் பயன்படுத்தலாம்.) பிசையும்போது தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய். பொரிக்கவும் நெய் அல்லது எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் முன் கூறியபடி தேங்காய்ப் பூரணம் வெல்லத்தூள் சேர்த்துச் செய்து ஏலப் பொடி சேர்த்து  ஆற வைக்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;ரவையில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாலைச் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.  ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் பாலும் ரவையும் ஊறிக்கொண்டு கெட்டியாக ஆகி இருக்கும். இப்போது அதைக் கைகளில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொண்டு நன்கு பிசையவும்.  சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும்வரை நன்கு பிசையவும். அரை மணி நேரம் வைக்கவும்.  பின்னர் சப்பாத்திக்கல்லில் இந்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை எடுத்துக்கொண்டு மெலிதான சப்பாத்தியாக இடவும்.  ஒரு வட்டமான மூடியால் இட்ட சப்பாத்தியில் கத்திரித்து எடுக்கவும். சிறு சிறு வட்டமானக் குட்டிக் குட்டிச் சப்பாத்திகள் நாலைந்து கிடைக்கும்.  இவற்றில் செய்து வைத்த பூரணத்தை நிரப்பிக் கொழுக்கட்டைக்கு மூடுவது போல் மூடவும்.  இம்மாதிரி எல்லா மாவையும் பூரணம் நிரப்பிச் செய்து கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை வைக்கவும்.  எண்ணெய் காய்ந்ததும் (சூடானதும்) அடுப்பைச் சிறிதாக எரிய விட்டுச் செய்து வைத்த கொழுக்கட்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். பொன் நிறமாகப் பொரியும் போது எடுத்துவிடலாம்.  மேலே கரகரப்போடும் உள்ளே பூரணத்தின் மிருதுவோடும் சாப்பிடச் சுவையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காரக் கொழுக்கட்டை&lt;/span&gt;&lt;br /&gt;தேவையான பொருட்கள்: இரண்டு கிண்ணம் ஊற வைத்துச் சன்னமாக ரவை போல் மிக்சியில் உடைத்துக்கொள்ளவேண்டும். ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, மிளகாய் வத்தல், பெருங்காயம் எல்லாவற்றையும் நீரில் ஊற வைக்கவும். தேங்காய் துருவல் ஒரு சின்ன மூடித் தேங்காய் துருவல். தாளிக்க எண்ணெய், பச்சை மிளகாய் 2 இஞ்சி ஒரு சிறு துண்டு, கருகப்பிலை, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு.  நீர் வேக வைக்கத் தேவையான அளவு. உப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் மிக்சியில் ஊற வைத்த பருப்பு வகைகளையும் மிளகாய்வற்றல், தேங்காய்துருவலஓடு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதைத் தனியாக வைத்துக்கொள்ளவும்.  &lt;br /&gt;இப்போது வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உ.பருப்பு, க,பருப்பு, ப.மிளகாய், இஞ்சி கருகப்பிலை தாளிக்கவும். பெருங்காயத் தூளும் சேர்க்கவும். பின்னர் மூன்று கப் நீரை ஊற்றவும்.  இப்போது அரைத்து வைத்துள்ள பருப்பு விழுதைப் போட்டு உப்புச் சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது அரிசி ரவையைப் போட்டுக் கிளறவும்.  நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும்.  ஆறிய பின்னர் சிறு சிறு உருண்டைகளாய்ப் பிடித்து, இட்லிப் பானையில் வேகவிடவும். இதற்குத் தொட்டுக்கொள்ளத் தேங்காய்ச் சட்னி, மோர்க்குழம்பு நன்றாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-2951009781971312439?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/2951009781971312439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=2951009781971312439' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/2951009781971312439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/2951009781971312439'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2010/09/blog-post_3990.html' title='கொழுக்கட்டை வேணுமோ, கொழுக்கட்டை?'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-7378375596898898737</id><published>2010-09-12T01:22:00.000-07:00</published><updated>2010-09-12T01:26:20.689-07:00</updated><title type='text'>அப்பாவி தங்கமணிக்காக வெடிக்காத உப்புச் சீடை!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TIyOc0-YqnI/AAAAAAAAA_g/CW_AcTpUhrk/s1600/DSC00467.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TIyOc0-YqnI/AAAAAAAAA_g/CW_AcTpUhrk/s320/DSC00467.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5515940269529803378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோகுலாஷ்டமி சிறப்புப் பலகாரங்கள்/பட்சணங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;முறுக்கு: கை முறுக்கையே அநேகமாய் முறுக்கு என்று சொல்வோம்.  சிலர் அச்சில் பிழியும் தேன்குழலைச் சொன்னாலும் பொதுவாய் முறுக்கு என்றால் கையால் சுற்றுவதே! இதற்குத் தேவையான பொருட்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி மாவு: 2 கப், வறுத்த உளுத்தமாவு ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டீஸ்பூன் சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணை, கலக்க நீர் தேவையான அளவு.  பொரித்து எடுக்கச் சமையல் எண்ணெய்.&lt;br /&gt;முறுக்குச் சுற்றும் வட்டமான தட்டு, அல்லது நீரில் நனைத்துப் பிழிந்த வெள்ளைத் துணி அல்லது தினசரி செய்தித் தாள்(இதில் அச்சுக்களின் ஈயம் கலக்குமோனு சந்தேகம் எனக்கு இருப்பதால் துணி அல்லது வட்டத்தட்டையே பயன்படுத்துவேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசிமாவு, உளுத்தமாவு, உப்பு, பெருங்காயப்பொடியைச் சேர்க்கவும்.  உப்புத் தூளாக இருந்தால் பரவாயில்லை. கல் உப்புத் தான் பயன்படுத்துபவர்கள் தேவையான உப்பை நீரில் கலக்கி அடுப்பில் வைத்துக் கொஞ்சம் சூடு செய்துவிட்டு அந்த உப்புக் கரைசலை ஊற்றிக்கொள்ளலாம். பொதுவாகப் பழங்காலத்தில் உப்புக் கரைசலை ஊற்றியே செய்யப் பட்டது.  இன்றைய நாட்களில் தூள் உப்புக் கிடைப்பதால் அப்படியே பயன்படுத்தப் படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மாவு மேற்சொன்ன பொருட்களோடு நன்கு கலந்ததும்,  சீரகத்தையும், வெண்ணெயையும் சேர்க்கவும். நீர் சேர்க்காமல் சற்று நேரம் வெண்ணெய் நன்கு கலக்கும்வரை மாவைப் பிசையவும்.  மாவில் வெண்ணெய் நன்கு கலந்ததும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.  அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெயைச் சுட வைக்கவும்.  எண்ணெய் நன்கு சூடு ஏறி அதில் இருந்து ஆவி வரும்போது நினைவாக அடுப்பைச் சிறிதாக எரியவிடவேண்டும்.  எண்ணெய் சூடு  ஏறுவதற்குள்ளாக முறுக்குத் தட்டிலோ, துணியிலோ கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டு, பின்னர்   கை கொண்ட மட்டும் மாவை எடுத்து முறுக்கிச் சுற்றிக்கொண்டே வரவேண்டும். இரண்டு சுற்று, நாலு சுற்று, ஐந்து சுற்று, ஏழு சுற்றுத்தான் பொதுவாகச் சுற்றுவார்கள் என்றாலும் இரண்டு சுற்றே போதுமானது.  ஐந்து, ஏழு எல்லாம் கல்யாணங்கள் போன்ற பெரிய அளவில் செய்யப் படும் விசேஷங்களில் பயன்படும்.  சுற்றிய முறுக்கைப் பின்னல் கலையாமல் ஒரு தோசைத் திருப்பியால் எடுத்துக் காய்ந்த எண்ணெயில் போடவும்.  ஒரு சமயத்தில் நாலைந்து முறுக்குகள் வரை போடலாம்.  ஐந்து, ஏழு சுற்று முறுக்கென்றால் ஒரே முறுக்குத் தான் போடமுடியும்.   முறுக்கு நன்றாகச் சிவக்கும் வரை பொரிக்கவும்.  நன்கு சிவந்து எண்ணெயில் மேலே மிதந்து வரும்.  பொரியும்போது வரும் சப்தமும் அடங்கிவிடும்.  அப்போது முறுக்குகளை வெளியே எடுக்கவும்.  ஒரு தகர டப்பாவில் அல்லது நமுத்துப் போகாவண்ணம் வேறு ஏதானும் டப்பாக்களில் போட்டு வைக்கவும்.  ஒரு மாதம் வரையிலும் கெட்டுப் போகாது.  கையால் உடைத்தால் முறுக்குச் சுற்றுக்களின் உள்ளே குழல் போல் ஓட்டை தெரியும்.  அப்படி இருந்தால் முறுக்கு நல்ல பதத்தில் வந்திருக்கிறது என்று பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TIyOOP7IaTI/AAAAAAAAA_Y/VSoM_A1QYCU/s1600/DSC00466.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TIyOOP7IaTI/AAAAAAAAA_Y/VSoM_A1QYCU/s320/DSC00466.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5515940019065874738" /&gt;&lt;/a&gt;அடுத்து உப்புச் சீடை:&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும் தேவையான பொருட்கள்&lt;br /&gt;&lt;br /&gt;2கப் அரிசிமாவு, ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த உளுத்த மாவு, ஊற வைத்த கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது, விருப்பமிருந்தால் எள் ஒரு டீ ஸ்பூன் சேர்க்கலாம், உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், நீர் தேவையான அளவு. பொரிக்க சமையல் எண்ணெய்.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி மாவு, உளுத்தமாவு, உப்பு, பெருங்காயத் தூள், எள், தேங்காய்க் கீறியது, ஊறிய கடலைப்பருப்பை ஒன்றாய்ச் சேர்க்கவும். சற்று நேரம் எல்லாம் ஒன்றாய்க்கலக்கும்வரை கலந்துவிட்டுப் பின் வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் நன்கு கலந்ததும், கொஞ்சமாய் நீரை விட்டுப் பிசையவும்.  இது உருட்டினால் உருண்டையகாவும், உதிர்த்தால் உதிராகவும் வரவேண்டும். அப்படிப் பிசைந்தால் போதுமானது.  ரொம்ப நீரைச் சேர்த்துச் சப்பாத்தி மாவு போலெல்லாம் பிசையவேண்டாம்.   இப்போது அடுப்பில் எண்ணெயைச் சூடாக்கவும்.  அதற்குள் ஒரு பேப்பரில் அல்லது துணியில் பிசைந்த மாவைக் கையால் உருட்டிப் போடவும்.  உருண்டை ரொம்பவும் உருண்டையாக அழகாயெல்லாம் வரவேண்டாம்.  சும்மாப் பிடிச்சுப் போட்டால் போதுமானது.  பொதுவாக உப்புச் சீடையை எண்ணெயில் போட்டால் வெடிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சமையலறையே ரணகளமாகக் காட்சி அளிக்கும்.  அதற்குக் காரணம் சேர்க்கும் உப்பு, கடலைப்பருப்பு, தேங்காய்க் கீறல் போன்றவற்றைச் சரியாகக்கவனிக்காமல் சேர்ப்பதே.  உப்பை நீரில் கரைத்தே உப்புச் சீடைக்குச் சேர்க்கவேண்டும்.  அடுத்துக் கடலைப்பருப்பில் ஒரு தோல் கூட இருக்கவேண்டாம்,  கல் இருந்தாலும் வெடிக்கும்.  அதையும் கவனித்துச் சேர்க்கவேண்டும்.  தேங்காய்க் கீறலில் தேங்காயின் ஓடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  இதையும் மீறிச் சீடை வெடித்தால் உருண்டையைச் சரியாகப்பிடிக்காமல் ரொம்பவே கையால் வழவழவென்று செய்ததால் இருக்கும்.  ஆகவே மேலே கொஞ்சம் கரடு, முரடாக இருந்தால் தப்பில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;உருட்டிய சீடைகளை எண்ணெயில் போட்டுவிட்டு (நினைவாக அடுப்பில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கவும்)  ஒரு மூடியால் அதை மூடிவிடவேண்டும்.  நூற்றுக்கு நூறு சதம் வெடிக்காது.  பின்பு தட்டை எடுத்துவிட்டுச் சீடைகளைத் திருப்பிப் போடவும்.  நன்கு வெந்து சத்தம் அடங்கி மேலே மிதந்து வந்ததும், எடுத்து எண்ணெயை வடித்துவிட்டு ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். சீடைகள் நன்கு வெந்திருந்தால்  கலகலவென்ற சப்தம் வரும், &lt;br /&gt;&lt;br /&gt;வெல்லச் சீடை:&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி மாவு இரண்டு கப், வறுத்த உளுத்த மாவு, ஒரு டேபிள் ஸ்பூன், எள் ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய் நாலைந்து பொடி பண்ணி வைத்துக்கொள்ளவும்.   நல்ல பாகு வெல்லம் தூளாக்கியது இரண்டு கப்,  வெல்லம் பாகு வைக்க நீர் அரை கிண்ணம். தொட்டுக்கொள்ள நெய், பொரிக்க சமையல் எண்ணெய்/நெய்&lt;br /&gt;&lt;br /&gt;கடாய் அல்லது வெங்கல உருளியில் அரைக் கிண்ணம் நீரை ஊற்றிக் கொதிக்கும்போது தூளாக்கிய வெல்லத்தைச் சேர்க்கவும்.  வெல்லம் கரைந்து பாகு கொதிக்கும் போது வேறொரு சின்னக் கிண்ணத்தில் கொஞ்சம் நீர் எடுத்துக்கொண்டு காய்ந்த பாகில் ஒரு துளி விட்டுப்பார்த்தால் அது நீரில் கரையாமல் கையால் உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும்.  அந்தப் பதம் வந்ததும், தேங்காய்க் கீறல்களைச் சேர்த்துவிட்டு, பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய் அரிசி மாவில் விட்டுக் கலக்கவும்.  மாவு பாகில் நன்கு கலந்து விட்டது என்று நமக்கே புரியும்,  அந்த நேரம் வரைக்கும் பாகைச் சேர்க்கலாம்.  பாகு போதும் என்ற அளவு கலந்ததும், மாவில் வறுத்த உளுத்த மாவையும் எள்ளையும் ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கரண்டியால் நன்கு கலக்கவும்.  சற்று நேரம் ஆறவிடவும். பின்பு மாவை எடுத்துக் கையால் உருட்டிப் பார்க்கவும். உருண்டைகளாய் வரும்.  &lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெய் அல்லது நெய்யைக் காய வைத்து, உருட்டிய உருண்டைகளை ஒன்றிரண்டாய்ப் போட்டுச் சிறு தீயில் பொரிக்கவும்.  மேலே சிவந்து வரும் வரை பொரித்து எடுக்கவும்.  ஆறிய பின்பு சாப்பிட்டுப் பார்த்தால் உள்ளே மிருதுவாகவும், மேலே மொறுமொறுப்போடும் இருக்கும்.   பல நாட்கள் கெடாது. இரண்டு மாதம் கூட இருக்கும். பாகும் நன்றாக அமைந்து நெய்யிலும் பொரித்தால்  மாதங்கள் ஆக, ஆக சுவை கூடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-7378375596898898737?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/7378375596898898737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=7378375596898898737' title='62 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/7378375596898898737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/7378375596898898737'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2010/09/blog-post_12.html' title='அப்பாவி தங்கமணிக்காக வெடிக்காத உப்புச் சீடை!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TIyOc0-YqnI/AAAAAAAAA_g/CW_AcTpUhrk/s72-c/DSC00467.JPG' height='72' width='72'/><thr:total>62</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-5899134435963898034</id><published>2010-09-02T03:58:00.000-07:00</published><updated>2010-09-02T04:04:43.835-07:00</updated><title type='text'>கொஞ்சம் லேட்டாயிடுச்சு, அதனால் என்ன?? தட்டை எப்போ வேணா சாப்பிடலாமே!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TH-D6Bmh3pI/AAAAAAAAA-s/3NUIpbtFUx8/s1600/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TH-D6Bmh3pI/AAAAAAAAA-s/3NUIpbtFUx8/s320/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512269501810466450" /&gt;&lt;/a&gt;படம் நம்மது இல்லைங்க, இன்னிக்கு ஒருத்தர் கேட்டாங்க, அதனால் கூகிளார் கிட்டே கடன் வாங்கின படம் தான். &lt;br /&gt;தட்டை செய்முறை.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகத் தட்டையாக இருப்பதால் தட்டை என்றழைக்கப்படும் இதைத் தஞ்சை ஜில்லாவில் தட்டைச் சீடை என்றும், சேலம் பக்கம் தட்டு வடை என்றும் சொல்லப் படுவதுண்டு. செய்முறைகளும் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறினாலும் பொதுவாகத் தேவைப்படுவது அரிசி மாவு.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு கப் அரிசி மாவு, (அரிசியைக் களைந்து சிறிது நேரம் ஊற வைத்துப் பின் வெளியில்மெஷினில் கொடுத்தோ அல்லது, வீட்டிலேயே மிக்சியிலேயோ அரைத்துச் சலித்து வைத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;உளுந்து மாவு: உளுந்தை வெறும் சட்டியில் சிவப்பாக வறுத்து அரைத்துக்கொள்ளவேண்டும். இரண்டு கப் அரிசி மாவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு போதும். உளுந்து மாவு அதிகம் போனால் தட்டை கரகரப்பு இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;பொட்டுக்கடலை மாவு: இது போட்டால் தான் தட்டை கரகரப்பு இருக்கும். சிலர் போடாமலும் செய்கின்றனர்.  பொட்டுக்கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன். பொட்டுக்கடலையை வெறும் சட்டியில் வறுத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உப்பு: தேவையான அளவு&lt;br /&gt;&lt;br /&gt;தேங்காய்: பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் ஊற வைத்து நீரை வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிளகாய்ப் பொடி அல்லது மிளகாய் வற்றலை நீரில் ஊற வைத்து அரைத்துக் கொண்டது அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப.&lt;br /&gt;&lt;br /&gt;பெருங்காயப் பொடி : ஒரு டீஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;நீர்  மாவு பிசையத் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்ணெய் அல்லது நெய், ஒரு டேபிள் ஸ்பூன்.  இத்தோடு எள் , வேர்க்கடலைப்பருப்பு எல்லாம் சேர்ப்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;பொரிக்க எண்ணெய் கால் கிலோ வானும் தேவைப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்ணெயோ நெய்யோ சேர்க்காதவர்கள் பிடிக்காதவர்கள், சமையல் எண்ணெயையே கொஞ்சம் காய வைத்து மாவில் விட்டுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி மாவு, உளுத்த மாவு, பொட்டுக்கடலை மாவை ஒன்றாய்ச் சேர்த்து உப்புக் கலந்து, காரப்பொடி அல்லது மிளகாய் விழுது, பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். வெண்ணெய் அல்லது நெய்யைச் சேர்த்து மீண்டும் கலக்கவும். எண்ணெய் சேர்ப்பவர்கள் வாணலியில் எண்ணெய் புகை வரும் வரை காய வைத்து மாவில் கொட்டிக் கலக்கவும். இப்போது தேவையான அளவுக்கு நீரைச் சேர்த்து மாவை நன்கு பிசையவும்.  பிசைந்த மாவைச் சிறு எலுமிச்சம்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். &lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரம் வைத்திருந்து விட்டுப் பின் அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும்.  எண்ணெய் காய்ந்து புகை வரும்போது அடுப்பைத் தணித்துவிட்டு, பிசைந்து வைத்த மாவில் உருண்டைகளாகச் செய்து வைத்திருப்பதை, ஒரு துணி அல்லது பேப்பரில் தட்டையாக வட்டமாகத் தட்ட வேண்டும்.  மாவு கையில் ஒட்டாமல் இருப்பதற்குக் கொஞ்சம் எண்ணெய் தொட்டுக்கொள்ளவும்.  தட்டின தட்டையை ஒரு தோசைத் திருப்பியால் எடுத்துக் காயந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.  ஒரே சமயத்தில் நாலைந்து தட்டைகளைப் போட்டுப் பொரிக்கலாம்.  முன் கூட்டியே தட்டி வைத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் கரகரப்பு மாறாதிருக்கும்படி காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும்.  ஒரு மாதம் ஆனாலும் கெடாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-5899134435963898034?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/5899134435963898034/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=5899134435963898034' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/5899134435963898034'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/5899134435963898034'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2010/09/blog-post.html' title='கொஞ்சம் லேட்டாயிடுச்சு, அதனால் என்ன?? தட்டை எப்போ வேணா சாப்பிடலாமே!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TH-D6Bmh3pI/AAAAAAAAA-s/3NUIpbtFUx8/s72-c/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1756701013072244986</id><published>2010-08-20T05:11:00.000-07:00</published><updated>2010-08-20T23:06:40.043-07:00</updated><title type='text'>கொஞ்சம் கை வைத்தியமும் தெரிஞ்சுக்குங்களேன்!</title><content type='html'>மூல வியாதி இருப்பவர்களுக்கான கை மருந்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஸ்பூன் சர்க்கரையும், ஒரு ஸ்பூன் நெய்யும் எடுத்துக் குழைத்துக் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பூவன்பழத்தை வேகவைத்து நெய், சர்க்கரையோடு சேர்த்து இரவில் படுக்கும்போது தினமும் சாப்பிட்டு வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகற்காய்க் கொடியின் இலைகளைப் பறித்துக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதம் வடிக்கும் கஞ்சியில் ஒரு சிட்டிகை உப்புப் போட்டுக் குடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மணத்தக்காளிக் கீரையின் சாறை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மலச்சிக்கல் இருக்கிறவங்க இரவு படுக்கப்போகும்போது நெய் ஒரு ஸ்பூனில் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் குழைத்துச் சாப்பிடணும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரிக் குழைத்துச் சாப்பிடும் உணவுப் பொருட்கள் எல்லாமே மருந்துகள் என்பதால் நன்கு நாக்கில் படும்படியாக உள்ளங்கையில் வைத்து நக்கிச் சாப்பிடவேண்டும். உமிழ்நீரோடு கலக்கவேண்டும், &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து குழந்தைகளுக்கு வயிற்றில் வலி என்றால் அழும் குழந்தையைத் தோளில் சார்த்திக் கொண்டால் வயிறு நம் மீது அமுங்கும்போது கொஞ்சம் அழுகை நிற்கும். அதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்குப் பிள்ளை மருந்து என்னும் வசம்பை நெருப்பில் சுட்டுக் கரியாக்கி, நெருப்புன்னா காஸ் அடுப்பெல்லாம் கூடாது. விளக்கு எரியும் இல்லையா அந்தச் சூடில். ஸ்வாமிக்கு  ஏத்தும் விளக்கில் கூடச் சுடலாம். நன்கு கறுப்பானதும், அதை எடுத்துப் பொடியாக்கி விளக்கெண்ணெயில் போட்டுக் குழைத்து வயிற்றைச் சுற்றிப் போடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி மேலே சொன்னாற்போல் நெருப்பில் வாட்டி, பொறுக்கும் சூட்டில் குழந்தையின் வயிற்றில் போடவும். சூடு பார்த்துக்கணும். குழந்தைகளுக்குச் சூடு தாங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓமத்தை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஒரு பாலாடை/சங்கு ஓமத் தண்ணீருக்கு அரைஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும். உடனடி நிவாரணம் உத்தரவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது இப்போதெல்லாம் வழக்கமே இல்லாமல் போயாச்சு. அப்படி வழக்கம் இருக்கிறவங்க குழந்தையைக் குளிப்பாட்டும் நாளன்று ஒரு வெற்றிலை, கொஞ்சம் உப்பு, ஒரு இரண்டு பல் பூண்டு, ஓமம் வைத்து அரைத்து வடிகட்டிச் சாறு எடுக்கவும். ஒரு சங்கு/பாலாடை இருந்தால் போதும். குழந்தைக்குக் கொடுக்கவும். இது கொடுத்து ஒரு அரை மணி நேரம் ஆகாரம் கொடுக்கக் கூடாது. குழந்தையின் வயிற்றுக் கோளாறுகள் தீரும். &lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்குப் பருவ வயதில் முகப்பருவா? வேனல் கட்டிகளா? மேலே சொன்ன வசம்பையும், கஸ்தூரி மஞ்சளையும் எடுத்துச் சந்தனக்கல்லில் உரைத்து முகத்தில் தடவிக்கவும். இரவு தினமும் தடவிண்டு காலையில் முகத்தை அலம்பினால் கட்டியோ, பருவோ வந்த அடையாளம் கூட முகத்தில் இருக்காது. சொந்த அநுபவம் உண்டு. அப்படியும் கரும்புள்ளிகள் இருந்தால் குப்பைமேனிக்கீரையோடு, வெற்றிலையும் சேர்த்து அரைத்துச் சாறை முகத்தில் பூசிப் பத்து நிமிஷம் ஊறிவிட்டுக் குளிக்கலாம்.  இதுவும் சொந்த அநுபவம் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;தேங்காய்ப்பாலோடு அல்லது பசும்பால், இல்லாட்டியும் பரவாயில்லை, பாலோடு கசகசாவை ஊறவைத்து அரைத்து முகத்தில் மற்றும் சூரியக் கதிர்கள் படும் இடங்களில் தேய்த்து ஊறிவிட்டுக் குளிக்கலாம். இவை எல்லாமே நம்ம சமையலறையில் கிடைக்கும் பொருட்கள். அவற்றைக் கொண்டே பயன்பெறலாம் இல்லையா? &lt;br /&gt;&lt;br /&gt;இவை இன்னும் தொடரும். நடு, நடுவில் வரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-1756701013072244986?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/1756701013072244986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=1756701013072244986' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/1756701013072244986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/1756701013072244986'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2010/08/blog-post.html' title='கொஞ்சம் கை வைத்தியமும் தெரிஞ்சுக்குங்களேன்!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-252777204242039135</id><published>2010-07-02T23:44:00.000-07:00</published><updated>2010-07-26T03:10:03.296-07:00</updated><title type='text'>அப்பாடா! ஒரு வழியா தவலை வடை பண்ணியாச்சு!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TC7cglJQuvI/AAAAAAAAA8A/FXrS09lTZiE/s1600/images%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 130px; height: 109px;" src="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TC7cglJQuvI/AAAAAAAAA8A/FXrS09lTZiE/s320/images%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5489567448096094962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சரி, சரி, இப்போ இந்தப் பொருட்களை எல்லாம் எடுத்து ஊற வைங்க தவலை வடைக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;புழுங்கலரிசி ஒரு கிண்ணம்&lt;br /&gt;பச்சரிசி ஒரு கிண்ணம்&lt;br /&gt;து.பருப்பு ஒரு கிண்ணம்&lt;br /&gt;க.பருப்பு ஒரு கிண்ணம்&lt;br /&gt;உ.பருப்பு முக்கால் கிண்ணம்&lt;br /&gt;பாசிப் பருப்பு அரைக் கிண்ணம்&lt;br /&gt;&lt;br /&gt;புழுங்கலரிசியையும், பச்சரிசியையும் நன்னாக் கழுவிட்டுச் சேர்த்து ஊற வைக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt; கலர் போற துணியைத் தனியா நனைப்போமே அப்படியா? &lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே, துணிக்கும், சமையலுக்கும் என்ன பொருத்தம்னு கேட்கறீங்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை தனித்தனியா ஊற வைக்கச் சொன்னியே அதான்!&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தனியா ஊற வைக்கிறது அரைக்கச் செளகரியமா இருக்கும், அதுக்குத் தான். நீங்க தானே அரைக்கப் போறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நானா? எனக்குத் தவலை வடையே வேண்டாம். :P&lt;br /&gt;&lt;br /&gt;க்ர்ர்ர்ர்ர்ர் யாரு விட்டா? நீங்க மிக்சியிலே தானே அரைக்கப் போறீங்க? நான் கையாலேயே அரைச்சுப் பண்ணிக் கொடுத்திருக்கேனே?&lt;br /&gt;&lt;br /&gt;சரி, சரி, எல்லாம் ஹெட் லெட்டர்! சரி இப்போ ஊற வைச்சாச்சு! அடுத்து என்ன??&lt;br /&gt;&lt;br /&gt;படுத்துத் தூங்கணும்!&lt;br /&gt;&lt;br /&gt;என்ன??&lt;br /&gt;&lt;br /&gt;பின்னே? ஊறவேண்டாமா இரண்டு மணி நேரமாவது! அதுக்குள்ளே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்திருங்க. மணி மூணாச்சு, அரைச்சு எடுத்துத் தவலை வடையைத் தட்டி எடுக்கணும்! இன்னிக்குனு பார்த்து எனக்கு வீசிங் வேறே ஜாஸ்தியா இருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;சரி, சரி, அப்போ வடை சாப்பிடாதே!&lt;br /&gt;&lt;br /&gt;என்ன??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்&lt;br /&gt;&lt;br /&gt;மிக்சியை எடுத்துக்குங்க. அதோட ஜாரிலே முதல்லே மி.வத்தல் ஆறு, ப.மி. இரண்டு, உப்பு தேவைக்கு ஏற்பச் சேர்த்துட்டுப் பெருங்காயத் தூளும் சேர்த்து ஒரு அடி அடிங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஹையோ, என்னை அடிக்கச் சொல்லலை, மி.வத்தல் கலவையை மிக்சியிலே அடிக்கணும்! நறநறநறநற நானே அரைச்சுடலாம் இதுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா! நிம்மதி! என்ன இருந்தாலும் உன் கையாலே செஞ்சு சாப்பிடற டேஸ்டே தனிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;க்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன ஐஸா! நகருங்க இத்தனை நேரம் நான் அரைச்சு முடிச்சிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மி.வத்தல் கலவையை ஒரு அடி அடிச்சுட்டு அதிலேயே அரிசியைப் போடறியா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், அரிசியையும் அரைக்கணும், கொஞ்சம் கொர கொரப்பாய்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்ன? பாசிப் பருப்பை மட்டும் களைஞ்சு வடிகட்டி வச்சுட்டு மற்ற து.பருப்பு, க. பருப்புக்களை  அரைச்ச அரிசியோடு  சேர்த்து அரைக்கணும். இதுவும் கொஞ்சம் கொர கொரப்பாகவே அரைக்கணும்'. உளுந்தை இதோடு சேர்க்கவேண்டாம். &lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்ம் அப்புறமா??&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ இதைத் தனியா வைச்சுடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, சரி கொண்டா, அடுத்து என்ன பண்ணப் போறே?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ உளுந்தை எடுத்து நல்லா அரைச்சுக் கொட கொடனு எடுக்கணும். வடை மாவு பதத்துக்கு இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி, சரி, அதெல்லாம் உனக்குத் தான் சரியா வரும். நீ தான் வடை தட்டறதிலே நிபுணி ஆச்சே!&lt;br /&gt;&lt;br /&gt;பல்லைக் கடிக்கும் சப்தம் மட்டும் சிறிது நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே என்ன சத்தம்??&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணுமில்லை, என்னோட பல் அரை படுது!&lt;br /&gt;&lt;br /&gt;ஹிஹிஹி, அதுக்குள்ளே மாவாவே திங்க ஆரம்பிச்சிட்டியே?&lt;br /&gt;&lt;br /&gt;என்னது??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோபத்திலே பல் அரைபட்டதிலே அந்த சத்தம் வந்ததாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி, உளுந்தை அரைச்சுட்டியா? என்ன பண்ணினே இப்போ?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களோ செய்யப் போறதில்லை, அப்புறம் எதுக்குச் சொல்லணுமாம்?&lt;br /&gt;&lt;br /&gt;அதான் இத்தனை சொல்லிட்டியே? மிச்சமும் சொல்லிடேன் என்ன இப்போ? பேசிண்டே வேலை செஞ்சா உனக்கும் அலுப்புத் தட்டாது பாரு!&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்குக் குறைச்சல் இல்லை. இப்போ அரிசி பருப்பு அரைச்ச கலவையிலே இந்த உளுந்து அரைச்சதைச் சேர்க்கணும். ஊற வைச்சு வடிகட்டி வச்சிருக்கிற பாசிப்பருப்பையும் சேர்க்கணும். ஒரு இரும்புக் கரண்டியிலே தே. எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊத்திக் கடுகு, உ.பருப்புப் போட்டுத் தாளிக்கணும். கருகப்பிலை, கொ,.மல்லி, இஞ்சி, சேர்க்கணும், ஒரு பச்சை மிளகாயை இரண்டாய் வகிர்ந்துட்டு விதைகளை எடுத்துட்டு இதிலே சேர்க்கணும். மாவை நல்லா எல்லாம் சேரும்படிக் கலக்கிக்கணும்.&lt;a href='http://2.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TE1eZMwCmNI/AAAAAAAAA8g/IhwQMZKKHY8/s1600/DSC00420.JPG'&gt;&lt;img src='http://2.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TE1eZMwCmNI/AAAAAAAAA8g/IhwQMZKKHY8/s320/DSC00420.JPG' border='0' alt=''style='clear:both;float:left; margin:0px 10px 10px 0;' /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;br /&gt;&lt;a href='http://4.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TE1eZsEKwsI/AAAAAAAAA8o/0Imhcm99gUA/s1600/DSC00421.JPG'&gt;&lt;img src='http://4.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TE1eZsEKwsI/AAAAAAAAA8o/0Imhcm99gUA/s320/DSC00421.JPG' border='0' alt=''style='clear:both;float:left; margin:0px 10px 10px 0;' /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;div style='clear:both; text-align:LEFT'&gt;&lt;a href='http://picasa.google.com/blogger/' target='ext'&gt;&lt;img src='http://photos1.blogger.com/pbp.gif' alt='Posted by Picasa' style='border: 0px none ; padding: 0px; background: transparent none repeat scroll 0% 50%; -moz-background-clip: initial; -moz-background-origin: initial; -moz-background-inline-policy: initial;' align='middle' border='0' /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நிமிஷம் அப்படியே வச்சுட்டு அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கணும். காய்ந்த எண்ணெயிலே ஒரு கரண்டியாலே இந்த மாவை எடுத்துப் போட்டால் குண்டு குண்டாக மேலே மொறு மொறுனும் உள்ளே மிருதுவாகவும் தவலை வடை ரெடி, ரெடி ரெட்டை ரெடி.&lt;br /&gt;&lt;br /&gt;தொட்டுக்கத் தேங்காய்ச் சட்டினியோடு சூப்பர் தவலை வடை! என்ன இருந்தாலும் உன் கைவண்ணமே வண்ணம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: கூகிளாரைக் கேட்டதுக்கு இந்தத் தவலை வடையைக் கொடுத்தார். இன்னிக்கு எங்க வீட்டிலே தவலை வடை பண்ணிட்டுப் படம் எடுத்து நாளைக்கு அதைச் சேர்த்துடறேன். அது வரைக்கும் ஓசியிலே! :P அப்பாடா, தவலை வடை பண்ணி ஒரு மாசத்துக்கப்புறமா ஒரு வழியாப் படங்களைச் சேர்த்தேன். இப்போ எல்லாரும் வந்து பாருங்கப்பா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-252777204242039135?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/252777204242039135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=252777204242039135' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/252777204242039135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/252777204242039135'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2010/07/blog-post.html' title='அப்பாடா! ஒரு வழியா தவலை வடை பண்ணியாச்சு!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/TC7cglJQuvI/AAAAAAAAA8A/FXrS09lTZiE/s72-c/images%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-570050609938301562</id><published>2010-05-23T02:47:00.000-07:00</published><updated>2010-05-23T02:53:45.523-07:00</updated><title type='text'>இன்னிக்கு டிபன் யாரோட பொறுப்பு??</title><content type='html'>சாயங்காலம் ஆச்சா? சூடாக் காபியோடயும், டீயோடயும் சாப்பிடறதுக்கு ஒண்ணுமே இல்லையா?? யாரு பண்ணித் தருவாங்க?? கடையிலே வாங்கியும் எத்தனை நாள் தான் சாப்பிடறது?? &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலேயே எதானும் பண்ணினால் என்ன??&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பண்ணப் போறே??&lt;br /&gt;&lt;br /&gt;தவலை வடை!&lt;br /&gt;&lt;br /&gt;என்னது?? தவளை வடையா?? ஐயய்யோ! நீ எப்போ இதெல்லாம் சாப்பிட ஆரம்பிச்சே? &lt;br /&gt;&lt;br /&gt;க்ர்ர்ர்ர்ர்ர் நான் ஒண்ணும் அதெல்லாம் சாப்பிடறதில்லை. தவளை இல்லை, தவலை. இந்த மழை பெய்ஞ்சாலும் பெய்ஞ்சது, தவளைங்க போடற சத்தத்திலே...............&lt;br /&gt;&lt;br /&gt;ஹிஹிஹி, தவலை?? யு மீன் வெந்நீர்த் தவலை? அதன் அடிப்பாகம் கறுப்பாவே வச்சிருப்பயே, அப்படி ஒரு வடை?? வேண்டாம்பா ஆளை விடு. எனக்குப் பசியே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நீங்கதான் பண்ணப் போறீங்க??&lt;br /&gt;&lt;br /&gt;என்னது நானா???&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், நீங்களே தான்! பண்ணுங்க, அப்போத் தான் தெரியும் சமைக்கிறது அவ்வளவு ஒண்ணும் சுலபம் இல்லைனு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-570050609938301562?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/570050609938301562/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=570050609938301562' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/570050609938301562'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/570050609938301562'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2010/05/blog-post.html' title='இன்னிக்கு டிபன் யாரோட பொறுப்பு??'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-6505226698176637153</id><published>2010-04-21T22:54:00.000-07:00</published><updated>2010-04-21T23:01:53.364-07:00</updated><title type='text'>ஒழுங்காவே கத்துக்கறதில்லையா யாரும்???</title><content type='html'>அரைச்சுச் செய்யற புளி உப்புமா பத்திப் பார்க்கிறதுக்கு முன்னே ஒரு கேள்வி, எட்டுப் பேர் தொடர்ந்து வரீங்க? யாரானும் செய்து பார்த்தீங்களா இல்லையா? பதிலே இல்லாமல் இருந்தால் ஒழுங்காப் படிச்சீங்களா இல்லையானு நான் எப்படித் தெரிஞ்சுக்கறது? இனிமேலே கொஞ்சம் ஒழுங்கா வகுப்பைக் கவனிச்சுப் பின்னூட்டம் போடுங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அரைக்கத் தேவையான பொருட்கள்: பச்சரிசி ஆழாக்கு(சுமார் 250 கி) அல்லது ஒரு கப், மி.வத்தல் 4 அல்லது 6 அவங்க காரத் தேவைக்கு ஏற்ப, புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு, பெருங்காயம், பச்சரிசியை ஒரு இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கணும். அப்புறம் மிக்சியில் (இப்போ கல்லுரல், ஆட்டுக்கல் எல்லாத்துக்கும் எங்கே போறது? இருந்தாலும் தான் ரங்க்ஸ் தலையில் போட்டுடறாங்க போல!) அதனாலே பார்த்தாலே ரங்க்ஸ் பயந்துக்கப் போறார். மிக்சியில் எல்லாத்தையும் போட்டு நல்லா அரைங்க. கெட்டியா அரைச்சுக்கணும். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்துத் தாளிக்க நல்லெண்ணெய் ஒரு கிண்ணம், கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை.&lt;br /&gt;&lt;br /&gt;வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டுக் கருகப்பிலையும் போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் சேர்ப்பதானால், பொடிப் பொடியாக நறுக்கின வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். அரைச்சு வைச்ச விழுதை இதில் போட்டு நல்லா உதிர் உதிரா வர வரைக்கும் கிளறவும். இது ருசி தனியா இருக்கும். அடுத்து முதல்நாளே புளி சேர்க்காமல் மற்ற சாமான்களைப் போட்டு அரைத்து வைத்துக்கொண்டு,  மறுநாள் இதேபோல் தாளிதம் செய்து கிளறலாம். இது ருசி தனியா இருக்கும். மூன்று முறைகளும் செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க. அடுத்து மோர்க்கூழ் பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-6505226698176637153?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/6505226698176637153/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=6505226698176637153' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/6505226698176637153'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/6505226698176637153'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2010/04/blog-post_21.html' title='ஒழுங்காவே கத்துக்கறதில்லையா யாரும்???'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-4209470729539400411</id><published>2010-04-10T07:45:00.000-07:00</published><updated>2010-04-10T07:59:51.185-07:00</updated><title type='text'>புளி உப்புமா சாப்பிட வாங்க!</title><content type='html'>ஆறு மாசத்துக்கு மேலே ஆச்சு இந்தப் பக்கம் வந்து. அதுக்காகச் சமைக்கவே இல்லைனு நினைச்சுடாதீங்க. வீட்டிலே நாமதான் சமைச்சாகணும். ரங்க்ஸ் சமைப்பார்தான், ஆனால் சாப்பிடத் தான் ஆள் தேடணும்! ஒரு சாம்பார் வைப்பார் பாருங்க. அதிலே மேலே தெளிவா எடுத்து ரசம்னு விடுவார், அடியிலே சாம்பார், அதிலும் அடியிலே காய்கள் எல்லாம் இருக்கும், அதைக் கூட்டாய் வைச்சுக்கணும்! :P போதுண்டா சாமினு முடியலைனாக் கூட நானே சமைச்சுடுறது தான் வழக்கம். ஒரு நாளிலேயே வெங்கலக்கடையிலே ஆனை புகுந்தாப்போல எல்லாம் தலைகீழாப் போயிடும். மறுநாள் புதுசாக் கல்யாணம் ஆகி வந்த பொண்ணு மாதிரி உப்பு எங்கே வச்சீங்க? புளி எங்கே? அடுப்பையே காணோமேனு கேட்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேத்திக்குப் பக்கத்து ஃப்ளாட்டில் காலம்பர டிபன் பண்ணிட்டு இருந்தாங்க போல. எப்படித் தெரியும்னு கேட்கறீங்களா?? துணி துவைச்சுட்டு இருந்தேன். பக்கத்து ஃப்ளாட் தான் எங்க வீட்டிலே இருந்து தொட்டுவிடும் தூரம் தானே? அங்கே அந்த வீட்டுத் தங்க்ஸ் புளி உப்புமா பண்ணவா? மோர்க்கூழ் பண்ணவானு கேட்டுட்டு இருந்தாங்க. அவங்க ரங்க்ஸ் எது பண்ணினாலும் அதிலே நாலு மோர்மிளகாய் வறுத்துப் போடுனு சொல்லிட்டு இருந்தார். இங்கே எனக்குச் சாப்பிடணும்போல ஆசை வந்துடுச்சு. எங்கே மோர் மிளகாயே வறுக்க முடியாது வீட்டிலே. அப்புறமா வீசிங் என்னை வறுத்துடும். :( அம்மா வீட்டிலே இருக்கும் வரைக்கும் அப்பா வெளி ஊருக்குப் போகறச்சே தான் இதெல்லாம் பண்ணுவாங்க அம்மா. அப்பாவுக்குப் பிடிக்காது. இதெல்லாம் ஒரு டிபனாம்பார்.  யாருங்க அங்கே, செய்முறை சொல்லாமப் பேசிட்டே இருக்கேனு கோவிக்கிறது? இதோ வந்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்லே புளி உப்புமா: இரண்டு, மூன்று விதம் இருக்கு இதிலே. எல்லாத்தையும் சொல்லிடறேன். உங்க செளகரியம் போல் செய்துக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;முதல்முறை: உங்க ரங்க்ஸுக்குப் பிடிக்காது புளி உப்புமா. இன்னிக்கு அவருக்கு ஆப்பீச்ச்சிலே டிபன் கொடுத்துடுவாங்க. நீங்க மட்டுமே வீட்டில். கேட்கணுமா?? எஞ்சாய்!!! இதுக்கு அவசரப் புளி உப்புமா தான் சரி. அரிசி மாவு ஒரு கப் எடுத்துக்குங்க. வெங்காயம் பிடிக்கும்னால் ஒரு வெங்காயம்(பெரியது) பொடிப் பொடியாய் நறுக்கிக்கணும். மி.வத்தல், (இதுக்கு மி.வத்தல் தான் நல்லா இருக்கும்.) நாலு, உப்பு,  கருகப்பிலை, பெருங்காயப் பொடி, தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, நல்லெண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம்.புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்து ஊற வைச்சுக் கரைச்சு வைச்சுக்கவும். கரைச்சு வச்ச புளி ஜலத்தில் அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். உப்பையும் சேர்த்தே கலக்கவும். மாவு நல்லாக் கெட்டியா வர வரைக்கும் சேர்த்து உருண்டையாப் பந்து போல் வந்ததும் கொஞ்ச நேரம் வைக்கவும். இரும்பு வாணலி இருந்தால் நல்லது. இல்லாட்டி ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய வைத்துக் கடுகு, உ.பருப்பு தாளிக்கவும். கருகப்பிலை, மி.வத்தல் போடவும். மி.வத்தலைக் கிள்ளிச்(ரங்க்ஸைக் கிள்ளறாப்போல் நினைச்சுக்கலாம்)சேர்க்கவும். வெங்காயம் சேர்ப்பதாய் இருந்தால் இப்போச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், பிசைந்து வைத்த அரிசிமாவுக்கலவை இதில் போட்டுக் கைவிடாமல் கிளறவும். எண்ணெய் தேவையா என்னனு உங்களுக்கே கிளறும்போது புரிஞ்சுடும். உதிரியாக வந்ததும் எடுத்துச் சூடாகச் சாப்பிடவும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு பாரம்பரிய உணவு. இப்போ மிகச் சில வீடுகளிலேயே செய்யறாங்க. அடுத்து இதையே அரைச்சுச் செய்யறதைப் பார்ப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-4209470729539400411?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/4209470729539400411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=4209470729539400411' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/4209470729539400411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/4209470729539400411'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2010/04/blog-post.html' title='புளி உப்புமா சாப்பிட வாங்க!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-8238172083227857246</id><published>2009-12-09T04:46:00.000-08:00</published><updated>2009-12-09T04:59:07.671-08:00</updated><title type='text'>வாழ்க்கையே ரசம் தான், வந்து பாருங்களேன்!</title><content type='html'>இப்போ அடுத்துக் கண்டந்திப்பிலி ரசம் வைப்போமா?? பின்பற்றுகிறவங்க எண்ணிக்கை அதிகமாயிருக்கு, அந்த அளவுக்குச் செய்து பார்க்கிறாங்களானு புரியலையே?? கண்டந்திப்பிலிக் குச்சிகள் நாலு அல்லது ஐந்து எடுத்துக்குங்க. தேசாவரம்னு தென் மாவட்டங்களில் சொல்லுவாங்க இதை. திப்பிலி அரிசித் திப்பிலியைத் தான் திப்பிலிம்பாங்க. அதுவேண்டாம், இது வேர் போலக் காய்ந்து குச்சி, குச்சியாக இருக்கும். சின்னச் சின்னக் குச்சியாக நறுக்கி நாலு, ஐந்து வேண்டும். நறுக்கற வேலை எல்லாம் ரங்ஸுக்குக் கொடுத்துடுங்க. ஆச்சா??&lt;br /&gt;அடுத்து மி.வத்தல் காய்ந்தது ஒன்று அல்லது இரண்டு, ஒரு ஸ்பூன் மிளகு, இரண்டு ஸ்பூன் துவரம்பருப்பு, ஒரு ஸ்பூன் ஜீரகம், கருகப்பிலை, புளி ஒரு எலுமிச்சை அளவு. இதுக்குத் தக்காளி எல்லாம் வேண்டாம், விருப்பப் பட்டால் போட்டுக்குங்க. உங்க ரங்ஸுக்குப் பிடிக்காதுனா போடலாம், பிடிக்கும்னா வேண்டாம், எல்லாம் தலைகீழ் விகிதம், அவ்வளவே!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாச் சாமான்களையும் நெய் அல்லது எண்ணெயில் வறுத்துக்குங்க. பெருங்காயம் ஒரு துண்டு. அதையும் நெய்யிலேயே வறுத்துக்கலாம். புளியை நீர்க்கக் கரைச்சு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். வறுத்த சாமானை மிக்ஸியிலோ அல்லது அம்மியிலோ, அரைச்சு, (ஹிஹிஹி, அம்பிமேலே இல்லை, பாவம் எரியும் அம்பிக்கு, விட்டுடுவோம்)புளி வாசனை போகக் கொதிச்சதும் அரைச்சதைக் கலந்து ஒரு கொதி வந்ததும் வேண்டிய அளவு ஜலம் விட்டு விளாவிவிட்டு நுரைச்சு வந்ததும் கீழே இறக்கவும். நெய்யில் கடுகு, கருகப்பிலை தாளித்துத் தேவையானால் கொத்துமல்லித் தழை போடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்குத் தொட்டுக்கக் காம்பினேஷன் பருப்புத் துவையலும், அரிசி அப்பளமும். அரிசி அப்பளம் சுட்டு இரண்டு பக்கமும் நெய் விட்டுத் தடவிட்டுத் தொட்டுக்கலாம். பருப்புத் துவையலுக்குத் தேவையான பொருட்கள்:&lt;br /&gt;துவரம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு ஒரு ஸ்பூன், ஒன்றிரண்டு மிளகாய் வற்றல், உப்பு, புளி, பெருங்காயம் எல்லாவற்றையும் வெறும் சட்டியில்/வாணலியில் வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். ரசத்தோடு சேர்த்துச் சாப்பிட ரசமாக இருக்கும். அதுவும் இந்தக் குளிருக்கு அருமையான காம்பினேஷன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-8238172083227857246?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/8238172083227857246/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=8238172083227857246' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/8238172083227857246'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/8238172083227857246'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/12/blog-post.html' title='வாழ்க்கையே ரசம் தான், வந்து பாருங்களேன்!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-8021925421972716545</id><published>2009-11-20T03:19:00.000-08:00</published><updated>2009-11-20T03:29:57.585-08:00</updated><title type='text'>ரங்கமணி மசிச்ச கத்தரிக்காய் கொத்சு!</title><content type='html'>வருஷக் கணக்காச் சிதம்பரம் போயும் இன்னமும் அங்கே சம்பாசாதமும், கத்தரிக்காய் கொத்சும் சாப்பிட்டதில்லை. ஆனால் செய்முறை தெரியும். இப்போப் போனவாரம் போயிருந்தப்போவும் தீக்ஷிதர் வீட்டிலேயே கேட்டும் உறுதி செய்து கொண்டேன். அதன்படி எழுதறேன். முதலில் சம்பாசாதம். சாம்பார் சாதம்னு நினைச்சுடாதீங்க. சிதம்பரத்திலே இது ஹோட்டல்களில் கூட பிரபலமாக்கும். &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல அரிசியாக வாங்கி வெண்கலப்பானையில் சாதம் வடித்துக் கொள்ளவும். வெண்கலப் பானை இல்லைனா என்ன? தீபாவளிக்கு வஸ்த்ரகலா வாங்காத கோபத்தில் உங்க முகமே வெங்கலப்பானை மாதிரித் தானே இருக்கும்? அதனால் பரவாயில்லை, குக்கரில் வைச்சுடுங்க. பொலபொலனு இருந்தாப் போதும். குக்கரும் வைக்கமாட்டீங்களா? ரங்ஸ் எதுக்கு இருக்கார்? வஸ்த்ரகலா கிடைக்காத கோபத்தைக் காட்டினால், தன்னாலே வச்சுடுவார் குக்கரை.ஒரு தாம்பாளத்தில் அதைக் கொட்டிச் சுடச் சுட இருக்கும்போதே நெய்யையும் ஊற்றி உப்புப் போட்டுக் கலந்து கொள்ளவும். வேறொரு கடாயில் நெய் விட்டு அதில் ஒரு டீஸ்பூனுக்குக் குறையாமல் மிளகு போட்டு, இரண்டு டீஸ்பூன் ஜீரகமும் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். இதை அம்மி இருந்தால் நல்லது அல்லது மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கரகரப்பாகப் பொடி செய்து கொள்ளவும். நெய்விட்டுக் கலந்த சாதத்தில் இதைப் போட்டுக் கிளறி வைக்கவும். இதற்குத் தொட்டுக்கத் தான் கத்தரிக்காய் கொத்சு.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கத்தரிக்காயாக அரை கிலோவுக்குக் குறையாமல் வாங்கிக்கணும். பொதுவாய் கொத்சுக்குக் கத்தரிக்காய் வாங்கினால் பெரிய கத்தரிக்காய் வாங்கிச் சுட்டுத் தான் கொத்சு பண்றது வழக்கம். ஆனால் சிதம்பரம் கொத்சில் அப்படி இல்லை என்பதே அதன் தனித் தன்மை. கத்தரிக்காயை நாலாக நறுக்கி ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு கத்தரிக்காயை வதக்க வேண்டும். சுருள வதக்க வேண்டும். சுருள வதங்கின கத்தரிக்காயை ஒரு மத்தினால் மசிக்கவேண்டும். அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், தனியா, வெந்தயம் நன்கு வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எலுமிச்சம்பழ அளவுப் புளியை எடுத்துக் கரைத்துக் கொள்ளவேண்டும். உப்பு மட்டும் சேர்க்கவேண்டும், மஞ்சள் தூள்(தேவையானால்) சேர்க்கலாம். அடுப்பில் கடாயை ஏற்றி, எண்ணெய் ஒரு கரண்டி ஊற்றி கடுகு, வெந்தயம் தாளிக்கவும். கருகப்பிலை தேவையானால் சேர்க்கலாம். தாளிதம் ஆனதும், மசித்த கத்தரிக்காயைப் புளிக்கரைசலில் சேர்த்துக் கொண்டு அடுப்பில் கடாயில் உள்ள எண்ணெய்த் தாளிதத்தில் சேர்க்கவும். ஒரு கொதி வரும்போது வறுத்துப் பொடித்து வைத்துள்ள பொடியைப் போடவும். உடனே இறக்கவும், கருகப்பிலை, கொத்துமல்லி அலங்காரங்கள் எல்லாம் உங்கள் விருப்பம். இது சம்பாசாதத்தோடு மட்டுமின்றி அரிசி உப்புமா, பொங்கல் போன்றவற்றோடும் சாப்பிடலாம். சிதம்பரம் கொத்சில் மஞ்சள் அதிகம் சேர்ப்பதில்லை, என்பதும் கையாலேயே மசிக்கவேண்டும் என்பதுமே அதன் தனித் தன்மையாக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;உங்களாலே மத்தாலே மசிக்கமுடியலையா? கவலையே படாதீங்க, உங்களுக்கு மசியாத ரங்ஸும் இருப்பாரா என்ன? அவரை மசிச்சுடுங்க, சேச்சே, மசிக்கச் சொல்லுங்க. உங்களை அவர் பக்கம் மசிய வைக்கிறதா நினைச்சுட்டு, (நினைப்புத் தானே, போனால் போகட்டும்) நல்லா மசிச்சுக் கொடுத்துடுவார். வர்ட்டா?? அடுத்துக் கண்டந்திப்பிலி ரசமும், பருப்புத் துவையலும். பத்தியமா சமைப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம் சேர்க்கவேண்டுமென்றால் கத்தரிக்காய், சின்ன வெங்காயம் இரண்டையும் நன்கு வதக்கிக் கொண்டு அம்மியில் கொஞ்சம் கரகரப்பாகவே  அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதைப் புளிக்கரைசலில் சேர்த்து மற்றதெல்லாம் மேற்சொன்ன மாதிரியே தான். கும்பகோணம் பக்கம் கல்யாணங்களில் இன்றும் இந்த கத்தரிக்காய், வெங்காயம் சேர்த்த சிதம்பரம்  கொத்சு மூன்று நாட்களில் ஒரு நாள் காலை டிபனுக்குக் கொடுப்பார்கள். பல கல்யாணங்களிலும் சாப்பிட்டது தான். இன்னும் சிதம்பரம் தீக்ஷிதர்கள் வீட்டில் சாப்பிடலை, அதுவும் சாப்பிட்டுடணும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-8021925421972716545?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/8021925421972716545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=8021925421972716545' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/8021925421972716545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/8021925421972716545'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/11/blog-post_20.html' title='ரங்கமணி மசிச்ச கத்தரிக்காய் கொத்சு!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-4419423815517882342</id><published>2009-11-18T23:37:00.000-08:00</published><updated>2009-11-18T23:56:46.316-08:00</updated><title type='text'>இன்னிக்கு முருங்கைக்கீரைப் பருப்பு உசிலி, சாப்பிட வாங்க!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SwT6HhkqdlI/AAAAAAAAAZQ/s8Tj-1Gav8c/s1600/images.jpg%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 118px; height: 79px;" src="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SwT6HhkqdlI/AAAAAAAAAZQ/s8Tj-1Gav8c/s320/images.jpg%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5405720459929613906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சாப்பிட வாங்கனு போட்டதுக்கு அப்புறமா ஆறு பேர் இந்தப் பதிவைத் தொடர ஆரம்பிச்சுட்டாங்களே! ஹையா ஜாலி! அந்த ஆறு பேரையும் இப்போ சாப்பிடச் சொல்லப் போறது என்னன்னா, முருங்கைக் கீரைப் பருப்பு உசிலியாக்கும்.  பாலக்காட்டுக் காரங்க பேச்சிலே வந்தேனாக்கும், போனேனாக்கும், இருக்குமாக்கும் அப்படின்னெல்லாம் வருமா, அந்த மாதிரிப் பேச ஆசை, அந்தே! இப்போ முருங்கைக் கீரைப் பருப்பு உசிலியை எப்படிப் பண்ணலாம்னு யோசிப்போமா? இன்னிக்கு எங்க வீட்டிலே முருங்கைக்கீரைப் பருப்பு உசிலிதான். சாப்பிடும்போது தான் யோசனை தோணிச்சு, எழுதலாமேனு. இன்னிக்கு வேறே ஒண்ணும் எழுதி வேறே வச்சுக்கலை. &lt;br /&gt;&lt;br /&gt;முருங்கைக் கீரை ஒரு கட்டு: வீட்டிலே முருங்கை மரம் இருந்தா கீரையை நல்ல இளங்கீரையாகப் பார்த்து பறிச்சுக் கொள்ளவும். என்னது? பூக்கள் இருக்கா? இருக்கட்டும், இருக்கட்டும் எல்லாப் பூக்களுமே காயாக மாறப் போறதில்லை, அதனாலே பூக்கள் உதிர்கிறது. மற்றபடி மரத்திலே வேணுங்கற அளவுக்குப் பூக்களையும் பறிச்சு வச்சுக்கோங்க. ஹிஹிஹி, யாருங்க அது, தொடுத்து வச்சுக்கணுமானு கேட்கிறது? இல்லை இல்லை, இதைத் தொடுத்தெல்லாம் வச்சுக்கவேண்டாம். நறுக்கி பொரிச்ச குழம்பு செஞ்சு சாப்பிடலாம். அது அப்புறமா. இப்போ கீரையை மட்டும் கவனிங்க. கீரையைப் பறிச்சோ அல்லது வாங்கியோ வச்சாச்சா? இப்போ கீரையை நல்லா ஆயணும். குச்சிகளை எல்லாம் ஆய்ந்து கீரையை மட்டும் தனியா எடுத்து நறுக்கி வச்சுக்கணும். நறுக்கினப்புறமா நல்லாத் தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி வைங்க கீரையை.&lt;br /&gt;&lt;br /&gt;பருப்பு உசிலிக்குத் தேவையான பொருட்கள்: து.பருப்பு ஒரு கப், கடலைப்பருப்பு ஒரு கப் இரண்டையும் சேர்த்துக் கழுவி நனைச்சு வைக்கணும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊறட்டும். அப்புறமாய் மி.வத்தல் ஆறு, உப்பு தேவையான அளவு, பெருங்காயப் பொடி, அல்லது கட்டியானால் பருப்போடயே சேர்த்து ஊற வைச்சுடலாம். எல்லாத்தையும் நன்கு நைசாக அரைச்சுக் கொள்ளவேண்டும். அரைத்த கலவையை ஒரு வாயகன்ற(உங்க வாய் அகலாம பார்த்துக்கவும்) பாத்திரத்தில் போட்டுக்கவும். அரைச்சதை எடுத்ததும் மிக்ஸி ஜாரில் கொஞ்சம் ஜலம் விட்டு மிச்சம், மீதி இருக்கும் பருப்புக் கலவையை எடுத்துக் கொண்டால் ரசத்துக்கு விளாவிடலாம். அது தனியா வச்சுப்போம். இப்போ பாத்திரத்தில் போட்ட பருப்புக் கலவையில் முருங்கைக் கீரையைச் சேர்த்து நன்றாய்க் கலக்கவும்.பருப்பும் கீரையும் ஒன்றோடொன்று நன்கு கலந்ததும் அதை இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும். வெந்த கலவையை ஒரு ஸ்பூனால் குத்தினால் ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம். &lt;br /&gt;&lt;br /&gt;வெந்த கலவை வெளியே எடுத்து ஆறினதும் உதிர்த்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும், இந்த அளவுக்குக் குறைந்த பட்சமாய் ஒரு கப் எண்ணெயாவது தேவை. எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்புப் போட்டு வெடித்ததும் கருகப்பிலை சேர்த்துப் பருப்புக் கலவையைக் கொட்டிக் கிளறவும். நன்கு உதிர்ந்து வரும் வரை கிளறவும். பின்பு சூடாக இருக்கும்போதே, மோர்க்குழம்பு அல்லது வத்தக்குழம்போடு பரிமாறவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-4419423815517882342?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/4419423815517882342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=4419423815517882342' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/4419423815517882342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/4419423815517882342'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/11/blog-post_18.html' title='இன்னிக்கு முருங்கைக்கீரைப் பருப்பு உசிலி, சாப்பிட வாங்க!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SwT6HhkqdlI/AAAAAAAAAZQ/s8Tj-1Gav8c/s72-c/images.jpg%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-3863161127087461110</id><published>2009-11-03T00:40:00.001-08:00</published><updated>2009-11-03T02:20:02.879-08:00</updated><title type='text'>எல்லாருக்கும் ஜுரமாமே? ஒரு பத்திய சமையல்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SvADx14h2oI/AAAAAAAAAZA/7yQtc5NV08k/s1600-h/images.jpg%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 118px; height: 113px;" src="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SvADx14h2oI/AAAAAAAAAZA/7yQtc5NV08k/s320/images.jpg%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5399820108029876866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இணையமே தகராறா இருக்குக் கொஞ்ச நாளா. கிடைக்கிற நேரத்திலே மனசிலே தோண்றதை எழுதறேன். நேத்திக்கு என்னோட சிநேகிதி ஒருத்தங்க மூக்கும், கண்ணும் சிவுசிவுனு இருக்கு, கீதா, என்ன பண்றதுனு கேட்டாங்க. நான் கூட வஸ்த்ரகலா வாங்கித் தராத கோபமோ இல்லை வருத்தமோனு நினைச்சேன். ஆனால் அது இல்லையாம். ஜலதோஷமாம். என்ன செய்யறதுனு கேட்டாங்க. தூதுவளையும், துளசியும் போட்டுக் கஷாயம் வச்சுச் சாப்பிடச் சொன்னேன். தூதுவளையே கிடைக்கலையாம், எப்படி இருக்குனும் தெரியாதாம். அப்புறமா அவங்களை விரலி மஞ்சளை விளக்கெண்ணெய் தடவி விளக்கிலே  கறுப்பாகிற வரைக்கும் சுட்டுட்டு, அந்தப் புகையை உள்ளிழுக்கச் சொல்லிட்டு, அந்தக் கறுப்பான பொடியையும் பத்து மாதிரி நெத்தியிலே, மூக்கிலே போட்டுக்கச் சொன்னேன். தூதுவளை இருக்கே அதிலே கஷாயம் மட்டுமில்லைங்க  ரசம் வச்சுக் கூடச்  சாப்பிடலாம். எங்க வீட்டிலே இந்த மாதிரியான சில பைத்தியங்கள் அவ்வப்போது பிடிக்கும். மின்னல் இலை மோர்க்குழம்பு, முடக்கித்தான் தோசை,வேப்பம்பூ ரசம்,  தூதுவளை ரசம்னு அப்போ அப்போ வச்சுச் சாப்பிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தூதுவளை தெரியுமா?? தூதுவளைனு ஒரு செடி இருக்கு. அதோட படம் போடறேன் பாருங்க. முள்ளு இருக்கும் செடியிலே, முள்ளுக் குத்திக்காம இலையை மட்டும் பறிச்சுக்குங்க. ஒரு கப் இலை இருக்கட்டும். சுத்தம் பண்ணிக்கணும். தண்ணியிலே போட்டுச்  சுத்தம் பண்ணி வடிகட்டி வச்சுக்குங்க. புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்துக்குங்க. உப்பு தேவையான அளவு. மிளகு ஒரு ஸ்பூன், ஜீரகம் இரண்டு ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு, அல்லது பெருங்காயப் பொடி. ஒரு மிளகாய் வத்தல். கருகப்பிலை கொஞ்சம். எல்லாத்தையும் எண்ணெய் விட்டுச் சட்டியிலே போட்டு வறுத்துக்குங்க. புளியைக் கரைச்சுக் கொண்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும்.  வறுத்த எல்லா சாமானையும் அரைத்துக் கொள்ளவும். புளியை ஒரு ஈயச் சொம்பில் விட்டுக்கொள்ள வேண்டும். ஈயச் சொம்புன்னா என்னனு தெரியுமா?? அதை அடுப்பிலே ஜலம் விடாமல் வச்சால் அவ்வளவு தான். நீங்க வஸ்த்ரகலா வாங்கித் தரலைனா கண்ணீர் எப்படி விடுவீங்க? &lt;br /&gt;&lt;br /&gt;அது மாதிரி ஈயச் சொம்பும் கண்ணீர் விட ஆரம்பிக்கும். அதனாலே புளி ஜலத்தை விட்டு, உப்பையும், மஞ்சள் தூளையும் போட்டுட்டு அடுப்பிலே வைங்க. நல்லாக் கொதிக்கட்டும். புளி வாசனை போகக் கொதிச்சதும், வறுத்து அரைச்சதைக் கலக்கவும். ஒரு கொதி வரும்போது தூதுவளை இலையை நெய்யில் வதக்கிச் சேர்த்து ஒரு நிமிஷம் கொதிக்கவிடவும். பின்னர் தேவையான அளவுக்கு ஜலம் விட்டு விளாவிக் கொள்ளவும். நல்ல ஜலதோஷம் இருக்கும்போது இந்த ரசம் வைச்சுச் சாப்பிட்டுப் பாருங்க, ஜலதோஷம் பட்டுனு விட்டுப் போகும். நெய்யில் கடுகு, ஜீரகம், கருகப்பிலை தாளிக்கவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-3863161127087461110?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/3863161127087461110/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=3863161127087461110' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/3863161127087461110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/3863161127087461110'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/11/blog-post.html' title='எல்லாருக்கும் ஜுரமாமே? ஒரு பத்திய சமையல்!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SvADx14h2oI/AAAAAAAAAZA/7yQtc5NV08k/s72-c/images.jpg%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-8326621920208626614</id><published>2009-10-31T00:34:00.000-07:00</published><updated>2009-10-31T00:46:39.537-07:00</updated><title type='text'>பட்டூரா சாப்பிட வாங்க!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SuvrJx_BAsI/AAAAAAAAAY4/zhvMbo3xYJQ/s1600-h/images.jpg%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 94px; height: 71px;" src="http://2.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SuvrJx_BAsI/AAAAAAAAAY4/zhvMbo3xYJQ/s320/images.jpg%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5398667131602666178" /&gt;&lt;/a&gt;சாப்பிட வாங்கனு பேரை மாத்தியதும் இதைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஐந்தாயிடுச்சே, இன்னும் எதுவுமே போடமுடியலையேனு இருக்கு. சீக்கிரம் போடறேன். முதல்லே பட்டூரா பார்த்துட்டு, ரொம்ப நாளா பட்டூராவுக்கு மாவே பிசையலை. அதனால் அதை முடிச்சுப்போம். அதுக்குள்ளே நவராத்திரி வந்து, தீபாவளி வந்துனு எல்லாம் ஆயிடுச்சு. இப்போ தீபாவளி பட்சணமும் தீர்ந்திருக்குமே. அதனாலே டிபன் ஏதானும் பண்ணித் தானே ஆகணும்?? முதல்லே பட்டூராவுக்குத் தேவையானது மைதா மாவு . அரை கிலோ எடுத்துக்குங்க. வெண்ணெய் நூறு கிராமாவது வேணும். டால்டா வேண்டாம். வேறே வழியில்லைனா டால்டா. உப்புக் கொஞ்சம் போல. தயிர் அரை கப். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அரை ஸ்பூன் உப்பை ஒரு  வாயகன்ற பேசினில் போட்டு, வெண்ணெயையும் போட்டுக் கையாலோ அல்லது ஒரு மரக் கரண்டியாலோ நல்லாக் கலக்குங்க. விடாமல் ஒரே பக்கமாகவே இருபது நிமிஷமாவது கலக்கணும். வெண்ணெய் எல்லாம் உப்போடு கலந்து மேலே குமிழ்கள் வர ஆரம்பிக்கும். இப்போக் கொஞ்சம் கொஞ்சமாக மைதாமாவைப் போட்டுக் கலக்குங்க. மைதாவும், வெண்ணெயும் ஒருசேரக் கலக்கணும்.  நன்கு கலக்கவும் ஒரு பத்து நிமிஷம் இப்படிக் கலந்ததும், தயிர் சேர்த்துப் பிசையணும். அரை கப் தயிர் அநேகமாய்ச் சரியாய் இருக்கும். இல்லாட்டிக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துக் கொள்ளவும். நன்கு பிசையவும். பின்னர் ஒரு வெள்ளைத் துணியால் மாவை  மூடி வைக்கவும். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்துப் பார்த்தால் மாவு உப்பிக் கொண்டு வந்திருக்கும். அப்படி வரலைனால் இன்னும் சிறிது நேரம் வைங்க. அநேகமாய் உப்புக் கொண்டு வந்துடும். அதை எடுத்து மறுபடிப்பிசைந்து மூடி வைங்க. இப்படி இரண்டு முறையாவது ஆனதும், மாவு தயார் பூரி பொரிக்க.&lt;br /&gt;&lt;br /&gt;கடாயில் எண்ணெயை வைத்து, தேவையான அளவு சைசில் மாவை உருட்டிக் கொண்டு பூரியாக வட்டமாக இடவும். எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும். இரண்டு பக்கமும் நன்றாக உப்பிக் கொண்டு வெள்ளை வெளேரெனச் சூடான பட்டூரா தயார். ஊசியால் குத்தினாலோ,கையால் உடைத்தாலோ ஒழிய உப்பிக் கொண்டது அமுங்காது எத்தனை நேரமானாலும். இதற்குத் தொட்டுக்கத் தான் முதல்லேயே பண்ணி வச்சுட்டோமே சனா. அதை எடுத்துச் சூடு பண்ணிக்குங்க. சனா, பட்டூரா தயார். இதைத் தான் ஓட்டலில் ஒரே ஒரு பூரியும் அரைக் கரண்டி சனாவும் கொடுத்துட்டு நூறு ரூபாய் பில் போடுவாங்க. வீட்டிலேயே செய்தால் எவ்வளவு லாபம்???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த பட்சமாத் தொடர்பவர்களாவது சாப்பிடுங்கப்பா! நன்றி. அடுத்ததுக்குக் கொஞ்சம் மெதுவா வரேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-8326621920208626614?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/8326621920208626614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=8326621920208626614' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/8326621920208626614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/8326621920208626614'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/10/blog-post_31.html' title='பட்டூரா சாப்பிட வாங்க!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SuvrJx_BAsI/AAAAAAAAAY4/zhvMbo3xYJQ/s72-c/images.jpg%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-4624754435939066096</id><published>2009-10-01T00:32:00.000-07:00</published><updated>2009-10-01T00:56:24.277-07:00</updated><title type='text'>நவராத்திரிக்குருமாவா, நவரத்தினக் குருமாவா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SsRgmDxTbhI/AAAAAAAAAVc/1ZTksf-lsdA/s1600-h/images.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 124px; height: 99px;" src="http://2.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SsRgmDxTbhI/AAAAAAAAAVc/1ZTksf-lsdA/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5387537261205351954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நவராத்திரிக் குருமா!&lt;br /&gt;&lt;br /&gt;நவராத்திரியிலே எல்லாருமே சுண்டல் வசூலுக்குப்போயிருப்பீங்க. இல்லையா?? உங்க வீட்டிலே கொலு வைக்காட்டியும், எப்படியாவது சுண்டல் பொட்டலங்கள் சேர்ந்துவிடும். அதைச் சாப்பிடவும் மனசு வராது, பயமா இருக்கும். வாயுத் தொந்திரவு அல்லது காரம் ஒத்துக்காதேனு. அதோட நவராத்திரிச் சுண்டல் வசூல் செய்துட்டு வீட்டுக்கு வரவும் நேரம் ஆயிடும். வந்து ராத்திரிக்கு என்ன பண்ணறதுனு சிலர் யோசிப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;முன் கூட்டியே திட்டம் போட்டு சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு சப்பாத்தியைச் செய்து வச்சுட்டுப் போயிடுங்க வசூலுக்கு. போதுமான சுண்டல் வசூல் ஆனதும் நேரே வீட்டுக்கு வந்துடுங்க. கூட வரும் தோழி கூப்பிட்டாலும் நோ, இனிமேல் நாளைக்குத் தான்னு சொல்லிடலாம். இப்போ ஒவ்வொரு வீட்டிலேயும் ஒவ்வொரு சுண்டலாய் இருக்குமே. சிலர் வீட்டிலே இனிப்புச் சுண்டலாய்க் கூட இருக்கும். எல்லாச் சுண்டலும் இப்போல்லாம் சின்ன ப்ளாஸ்டிக் கிண்ணங்களில் தான் தந்திருப்பாங்க. எல்லாம் சேர்த்து ஒரு கப் வரும். &lt;br /&gt;&lt;br /&gt;நீங்க சுண்டல் வசூலுக்குப் போகும்போது ரங்கு வீட்டிலே சும்மாத் தானே ஈ ஓட்டிட்டு இருப்பார். அவரைத் தக்காளியும், வெங்காயமும் நறுக்கி வைக்கச் சொல்லிட்டுப் போங்க. நறுக்கி வச்சிருப்பார். வந்து ஏதோ புதுசாப் பண்ணித் தரப் போறீங்கனு ஆவலாவும் இருப்பார். அவர் கிட்டே ஒண்ணும் சொல்லிக்க வேண்டாம். ஃப்ரிஜைக் குடைஞ்சு பார்த்து முதல்நாள் இட்லிக்குத் தொட்டுக்க அரைச்ச தேங்காய்ச் சட்னி இருக்கா பாருங்க. இல்லாட்டியும் பரவாயில்லை. சுண்டலிலேயே தேங்காய் போட்டிருப்பாங்களே. வேறே என்ன சட்னி இருக்கு? தக்காளி, வெங்காயம், புதினா?? எதுவா இருந்தாலும் பரவாயில்லை. எதுவுமே இல்லையா? காலம்பர வச்ச குழம்பு? ரசம்? அது போதும்!&lt;br /&gt; &lt;br /&gt;இப்போ நீங்க செய்ய வேண்டியது கொஞ்சமாவது பந்தா காட்டணும். அப்பா, ஒரே அலுப்பு, எல்லா வீட்டுக்கும் போயிட்டு வரதுக்குள்ளே முடியவே இல்லைனு சொல்லிக்கணும். நிஜமாவே முடியாதுதான். என்றாலும் அதைக் கொஞ்சம் ஜாஸ்தியாச் சொல்லிக்கணும். அப்புறம் மெதுவா ரங்குவையும், குழந்தைங்க இருந்தா அவங்களையும் பார்த்து ஏதாவது சாப்பிட்டீங்களானு அன்போட கேட்கணும். "இல்லை, உனக்காகத் தான் வெயிட்டீஸ்"னு பதில் வரும்.  அவங்க நினைப்பு உங்களை சந்தோஷப் படுத்தறதா. என்றாலும் அதைக் காட்டிக்காமல் அடுப்படிக்குப் போங்க. அடுப்பிலே வாணலியை வச்சு, எண்ணெயை ஊத்துங்க. ஜீரகம், சோம்பு(பிடிச்சா) தாளிங்க. சோம்பு பிடிக்கலைனா வேண்டாம். அப்புறம் மஞ்சள் பொடி சேர்த்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்குங்க. தக்காளியையும் சேர்த்து நல்லா வதக்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டும் வதங்கியதும், மொத்தமாய் வசூலான சுண்டலை அதிலே கொட்டவும். இனிப்புச் சுண்டல் இருந்தாலும் கவலை இல்லை. இந்த மாதிரி மசாலா ஐடங்களுக்குக் கொஞ்சம் வெல்லம் சேர்த்தால் நல்லாவே இருக்கும் ருசியும், மணமும். காலம்பர வச்ச சாம்பாரோ, ரசமோ, அல்லது வத்தக் குழம்போ இருந்தால் அதையும் அதில் சேர்க்கலாம்.  இப்போ முக்கியமாய்க் கவனத்தில் கொள்ளவேண்டியது இதுக்கு மேலே உப்போ, காரமோ போட்டீங்க தொலைஞ்சீங்க நீங்க! அதனால் கவனமாய் அதைத் தவிர்க்கவும். காலைக் குழம்பு எதுவும் இல்லையா? பரவாயில்லை. மிச்சம் வச்சிருக்கும் சட்னியைத் தேவையான அளவு சேர்க்கவும்.  அதுவும் தேங்காய்ச் சட்னியும், தக்காளிச் சட்னியும் இருந்தால் சூப்பரா இருக்கும். அதுவும் இல்லையா? எதுவுமே வேண்டாம். அப்படியே நல்லாக் கொஞ்ச நேரம் வதக்கிட்டு, கரம் மசாலாப் பொடியைத் தூவிட்டுப் பச்சைக் கொத்துமல்லி, நறுக்கிய வெங்காயம் போன்றவைகளைப் போட்டு அலங்கரித்துப் பரிமாறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;புதுசா விருந்தினர் வந்தால் அவங்களுக்குச் செய்து போட்டு இது தான் நவரத்தினக் குருமா, சீச்சீ,நவராத்திரிக்குருமானு சொல்லிடலாம். கணவர் கிட்டே இன்னிக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மெனுனு சொல்லிடலாம். நவரத்தினக் குருமா ஒரு ப்ளேட் சுமாராக 75ரூக்கு மேல் என்று விசாரித்ததில் தெரிய வந்தது. அதனால் அதுக்கான பைசாவை முக்கியமாய் உங்க ரங்குவிடமிருந்து வசூலிக்கவும். சுண்டல் வசூலைவிட இந்த வசூல் முக்கியம். நினைவிருக்கட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-4624754435939066096?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/4624754435939066096/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=4624754435939066096' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/4624754435939066096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/4624754435939066096'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/10/blog-post.html' title='நவராத்திரிக்குருமாவா, நவரத்தினக் குருமாவா?'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SsRgmDxTbhI/AAAAAAAAAVc/1ZTksf-lsdA/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-2289673872650741903</id><published>2009-09-14T00:58:00.000-07:00</published><updated>2009-09-14T01:19:51.790-07:00</updated><title type='text'>என்னை யாராலும் மசிக்க முடியுமா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/Sq38lELZr_I/AAAAAAAAAVU/TT7NGYpuH8A/s1600-h/images.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 124px; height: 93px;" src="http://1.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/Sq38lELZr_I/AAAAAAAAAVU/TT7NGYpuH8A/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5381234843484532722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பட்டூரா தான் பண்ணணும், ரொம்ப நாளாச் சொல்லிட்டே இருக்கேன், ஆனாலும், இப்போ கை கொஞ்சம் வலி எடுக்கிறது. மாவு பிசையணும் இல்லை? என்னதான் மாமியார், நாத்தனாரை நினைச்சுட்டாலும், கையிலே வலுவும் வேணுமே. அதனால் இப்போதைக்கு அதைக் கொஞ்சம் தள்ள்ள்ளி வச்சுட்டு, கொண்டைக்கடலை பண்ணிட்டேன்னு சொல்றீங்க? அதனால் பரவாயில்லை, அதோட, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, கடையிலே கிடைக்கும் ஓமப் பொடி அல்லது நீங்களே செய்த ஓமப் பொடி, அரிசிப் பொரி, பச்சைக் கொத்துமல்லி, தக்காளி பொடியா நறுக்கிப் போட்டு பேல் பூரி மாதிரியும் சாப்பிடலாம். இது பேல் பூரி இல்லைதான். சாட்னு சொல்லுவாங்க. சாட்பூரினும் சொல்லிக்கலாம். அதனால் சனா மசாலா பண்ணினால் எப்படியும் உள்ளே இறங்கிடும். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு வீட்டிலே பீர்க்கங்காய் சட்டி மசியல் செய்தேன். அதை உடனே உங்க எல்லாரோடயும் பகிர்ந்துக்கலாம்னு ஒரு எண்ணம் தோணிச்சு. அதான் பட்டூராவுக்கு மாவு பிசையலை. மைதாமாவும் வாங்கணும். பீர்க்கங்காய் பிஞ்சாக அரைகிலோ வாங்கிக்குங்க. கட்டாயமாய் அரைகிலோ வேணும், தோல் சீவி நறுக்கி வதக்கிட்டா கொஞ்சமாயிடும், அதையும் மிக்ஸியிலேயோ, அல்லது, அம்மியிலேயோ(பாதி நாள் ஆற்காட்டார் கொடுக்கும் தொந்திரவிலே, இப்போ அம்மி நல்லாப் பழகிடுச்சு, அதிலேயே அரைனு எங்க வீட்டு ஹிட்லர் சொல்றார். அதெல்லாம் முடியாதுனு கரண்ட் இருக்கும்போதே அரைச்சு வச்சுக்கறேனாக்கும்.) உங்க தலைவிதி நல்லா இருந்தா மிக்ஸி, இல்லாட்டி அம்மிதான் கதி. அரைச்சு வச்சுக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வேணுங்கற பொருட்கள்:&lt;br /&gt;புளி ஒரு எலுமிச்சம்பழம் அளவு ஊறவச்சுக் கரைச்சுக் கொள்ளவேண்டும். இரண்டு கப் புளி ஜலம் இருக்கலாம். அதுக்கு வேண்டிய மிளகாய் வத்தல் 4, தனியா/கொத்துமல்லி விதை இரண்டு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு, உ.பருப்பு முறையே ஒரு ஸ்பூன், கடுகு, வெந்தயம், மிளகு அரை ஸ்பூன். பெருங்காயம் ஒரு சின்னக் கட்டி. கட்டி வேறே மிக்ஸியிலே அரைபடாது. தனியா நிக்கும். அதனாலே கட்டியை ஊற வச்சுடுங்க. அந்த ஜலத்தை விட்டுக்கலாம். தாளிக்கும்போது பெருங்காயப் பவுடர் ஒரு சிட்டிகை போட்டுத் தாளிக்கலாம், மணம் ஊரைத் தூக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ மேலே சொன்ன பொருட்களை எண்ணெயில் வறுத்து கொஞ்சம் கரகரப்பாய் அரைச்சுக்குங்க. என்னது? தேங்காயா? இதுக்கு அதெல்லாம் போட்டால் நல்லாவே இருக்காதுங்க. இந்த மசாலாப் பொருட்களை அரைச்சதும் வதக்கிய பீர்க்கங்காயை அரைத்துக் கொண்டால் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிட்டு இருக்கும் மசாலாப் பொருட்கள் பீர்க்கங்காயோடு சேர்ந்து வந்துடும். கரைச்சு வைச்ச புளித் தண்ணீரில் அரைச்ச பீர்க்கங்காயைப் போட்டுக் கலக்கிக்குங்க. நாம ஊரையே கலக்குவோமே, இது என்ன அதிசயமா என்ன? அடுப்பிலே கல்சட்டி, ஹிஹிஹி, கல்சட்டியிலே பண்ணறதாலே சட்டி மசியல்னு அர்த்தம் இல்லை. கடாயோ, அல்லது உருளியோ எதுவானாலும் பரவாயில்லை. என்ன ஒரு கஷ்டம்னா கல்சட்டியிலே தாளிதம் பண்ணிட்டுப் புளிக்கரைசலை ஊத்திட்டு, வதக்கிய பீர்க்கங்காயைப் போட்டு மத்தால் மசிச்சால் ஒரு சமயம் சட்டி உடைஞ்சு எல்லாம் போயிடும். அதனால் தான் முதலிலேயே அரைச்சு வச்சுக்கச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க மாமியார் அடுப்பிலே போட்டுட்டுத் தான் மசிப்பாங்க. நல்ல பழக்கம் அவங்களுக்கு. எல்லாரையும் மசிய வைக்கிறவங்களாச்சே. நாம சட்டியைப் போட்டுட்டு இத்தனை நேரம் வம்பளக்கிறோமே, காய்ஞ்சுட்டு இருக்குமே. அதன் தலையிலே எண்ணெய் விடுங்க. இதுக்கு நல்லெண்ணெய்த் தாளிதம் தான் நல்லா இருக்கும். எண்ணெய் ஊத்திட்டுக் கடுகு, உ.பருப்பு, மி.வத்தல், வெந்தயம், ப.மிளகாய், கருகப்பிலை எல்லாம் போட்டுட்டுக் கூடவே பெருங்காயப் பொடியும் போட்டுட்டுக் கரைச்சு வச்சை பீர்க்கங்காய்+ புளி ஜலம் கலவையை அதன் தலையில் ஊத்தணும். மறந்து போய் பக்கத்திலே யாராவது நின்னா அவங்க தலையிலே ஊத்திட்டா நான் பொறுப்பில்லை. மஞ்சள் பொடி கொஞ்சமா சேர்த்து, தேவையான உப்பும் போட்டுக்குங்க. நல்லாக் கொதிச்சதும், கரகரனு அரைச்சு வைச்ச பொடியைப் போடவும். தேவையான அளவு பொடியைப் போட்டுட்டு அதிகம் கொதிக்கவேண்டாம். ஒரு கொதி வந்ததும் இறக்கிட்டு பச்சைக் கொத்துமல்லி கிடைச்சால் போடலாம். கொத்துமல்லி கிடைக்காட்டியும் அப்படியே சாதத்துடன் சாப்பிடலாம். அன்னிக்கே அரைச்சு அன்னிக்கே வார்க்கும் தோசைக்கு நல்லா இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சாதத்தோட சாப்பிட்டால், தொட்டுக்க சைட் டிஷ் ஆக பூஷணிக்காய் மோர்க்கூட்டு, வாழைத்தண்டு மோர்க்கூட்டு, அல்லது மோர்க்கீரைனு செய்யலாம். இல்லாட்டி பொரிச்ச கூட்டு செய்யலாம். அதெல்லாம் எப்படினு கேட்கிறீங்களா? அதுக்கு அப்புறமா வரேன். ஏற்கெனவே பட்டூரா அரியர்ஸ் இருக்கு. அதை முடிச்சுட்டு வரேன். வர்ட்டா???? ஆதரவு தரவங்களுக்கு நன்னிங்கோ!!!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-2289673872650741903?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/2289673872650741903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=2289673872650741903' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/2289673872650741903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/2289673872650741903'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/09/blog-post.html' title='என்னை யாராலும் மசிக்க முடியுமா?'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/Sq38lELZr_I/AAAAAAAAAVU/TT7NGYpuH8A/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-1784837857412961493</id><published>2009-07-21T02:50:00.000-07:00</published><updated>2009-07-24T01:29:46.225-07:00</updated><title type='text'>கொண்டைக்கடலை ஊறி எத்தனை நாளாச்சு???</title><content type='html'>ரொம்ப நாட்களாய் ஊறிட்டு இருக்குங்க சனா என்னும் கொண்டைக் கடலை. அது வேண்டாம், ரொம்பவே துர்நாற்றம் அடிக்கும், அதை மாட்டுக்கு வச்சுட்டு, என்ன மாடா?? பசுமாடுதான், என்ன?? அதுக்கு ஒண்ணும் பண்ணாது, அதைச் சாப்பிட்டுட்டு நல்லாப் பால் கொடுக்கும், வச்சுடுங்க முதல்லே. மாட்டுக்கு வச்சுட்டு, புதுசா ஊற வைங்க. கால் கிலோ வெள்ளைக் கொண்டைக் கடலை ஊற வைச்சு அதிலே சில கொண்டைக் கடலைகளை மட்டும் எடுத்துத் தனியா வச்சுக்குங்க. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போ ஒரு உ.கிழங்கு பெரிசா எடுத்து கொண்டைக்கடலை ஊற வைச்சதோட சேர்த்துக் குக்கரில் அல்லது நல்லா எரியும்ஒரு அடுப்பில் அடி கனமான ஒரு  பாத்திரத்தில் போட்டுக் குழைவாக வேக வைக்கவும். அடுத்து இப்போ மசாலா தயாரிக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை மிளகாய் இரண்டு அல்லது மூன்று. இஞ்சி ஒரு துண்டு, பூண்டு சேர்க்கிறவங்க பூண்டு 5 அல்லது 6 பற்கள். பச்சைக் கொத்துமல்லி, ஊற வைச்ச கொண்டைக்கடலை கொஞ்சம் தனியா எடுத்து வைச்சோமே அது  இதை எல்லாம் நல்லா நைசாக அரைச்சு வச்சுக்கணும். தக்காளி நல்லாப் பழுத்த தக்காளி இரண்டு, ஒரு பெரிய வெங்காயம் இரண்டையும் நைசாத் தனியா அரைச்சு வச்சுக்கணும். புளி ஒரு சின்ன எலுமிச்சம்பழ அளவுக்கு எடுத்து நல்லாக் கரைச்சு வைச்சுக்குங்க. ஒரு கப் இருக்கலாம் புளி கரைத்த நீர். உப்பு ருசிக்கு ஏற்றாற்போல். மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், தனியாத் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன். காரம் இருக்கணும்னா ஒரு டேபிள் ஸ்பூன் தனியாத் தூள் போதும், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன். கரம் மசாலாத் தூள் ஒரு டீ ஸ்பூன். சாட் மசாலாத் தூள் ஒரு டீ ஸ்பூன். இது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. காலா நமக் அப்படினு கிடைக்கும் நாட்டு மருந்துக் கடையில். கறுப்பு உப்புப் பொடியோட  கொஞ்சம் ஜீரகம் வறுத்துப் பொடி பண்ணிக் கலந்து வச்சுக்கணும். அவ்வளவே. சிலர் மாதுளம் விதைகளும் போடுவாங்க. அது விருப்பம் போல். பச்சைக் கொத்துமல்லித் தழையைப் பொடியாக நறுக்கியும் வச்சுக்கணும், புதினா பிடிச்சால் புதினாவும் பச்சை மிளகாய் விழுதோட சேர்த்து அரைக்கலாம், அல்லது பொடியாக அரிந்தும் வச்சுக்கலாம். வெங்காயமும் பொடிப் பொடியாக நறுக்கி வச்சுக்கணும்.  &lt;br /&gt;&lt;br /&gt;சரிங்க எல்லாம் தயார் பண்ணியாச்சா?? இப்போ கடாய் அல்லது வாணலி அல்லது இருப்புச் சட்டியில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை போடவும். சர்க்கரை எண்ணெயோடு கரைந்ததும், ஜீரகம் தாளித்து, அரைச்சு வைச்ச பச்சை மிளகாய்க் கலவையைப் போட்டு வதக்கணும், அது வதங்கியதும், தக்காளி, வெங்காயக் கலவையைப் போட்டு வதக்கணும். இது வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் சமயம், மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி சேர்த்து வதக்கணும். இவையும் வதங்கியதும், வேக வைச்ச கொண்டைக்கடலையைப் போட்டு, உப்பு, வேக வைத்த உருளைக் கிழங்கை உதிர்த்துச் சேர்க்கவும். கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றவும். நல்லாக் கொதிக்க விடவேண்டும். சேர்ந்து கொதிக்கும்போது வெல்லம் ஒரு நெல்லிக்காய் அளவுக்குச் சேர்க்கவும். கரம் மசாலாப் பொடி சேர்க்கவும். இதுவும் சேர்ந்து கொதிச்சுக் கெட்டியானதும், இறக்கி வைத்து, பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லித் தழை, புதினாத் தழை தூவவும். சாட் மசாலாப் பொடியை மேலே தூவவும். கலந்தால் பிடிக்குமென்றால் இறக்கும்போதே சாட் மசாலாப் பொடியும் தூவலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது சமோசாவுடன் சாப்பிடவும், நல்லா இருக்கும். பட்டூரா என்னும் பூரியுடன் சாப்பிடவும் நல்லா இருக்கும். சும்மாவே புளிச்சட்னி, பச்சைச் சட்னி, பேரீச்சைச் சட்னி ஊத்திக் கொண்டு, வெங்காயம், கொத்துமல்லித் தழை நறுக்கிச் சேர்த்துச் சாப்பிடலாம். அடுத்து பட்டூரா செய்வோமா?? யார் முதல்லே சாப்பிட வரப் போறதில்லை??? யாருமே வரதில்லையே, இருந்தாலும் விட மாட்டோமுல்ல!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-1784837857412961493?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/1784837857412961493/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=1784837857412961493' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/1784837857412961493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/1784837857412961493'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/07/blog-post.html' title='கொண்டைக்கடலை ஊறி எத்தனை நாளாச்சு???'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-5251808090273848175</id><published>2009-06-02T00:34:00.000-07:00</published><updated>2009-06-02T00:52:37.735-07:00</updated><title type='text'>பருப்பில்லாத ஹோட்டல் சாம்பார் வேணுமா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SiTaDE--H8I/AAAAAAAAAQU/7ltIYWr4Jxc/s1600-h/200px-Gntidli.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SiTaDE--H8I/AAAAAAAAAQU/7ltIYWr4Jxc/s320/200px-Gntidli.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5342634804380573634" /&gt;&lt;/a&gt;நானானி, வெங்காயம், பூண்டு போட்ட சனா மசாலா கேட்டிருக்காங்க. அதுவும் உடனேயே. ஆனால் அதுக்குக் கொஞ்சம் காத்திட்டு இருக்கணும் நானானி. பூண்டு எனக்கு ஒத்துக்காது. பிடிக்கவும் பிடிக்காது. ஸோ நோ பூண்டு. ஓகேயா? அப்புறமா கால் கிலோ சனாவை எடுத்து ஊற வைச்சுடலாம் இன்னிக்கும். நாளைக்கு சனா மசாலா பண்ணலாம், ஓகேயா? இப்போ ஒரு திடீர் சாம்பார். ருசியான சாம்பார். இதுவும் வெங்காயம் போட்டும், போடாமலும் பண்ணலாம். எப்போவும் போல நம்ம வீட்டிலே வெங்காயம் சாப்பிடறவங்களும், அதைக் கண்டாலே ஓடறவங்களும் உண்டு. இப்போ விருந்தாளிங்க வந்திருக்கிறதாலே அவங்களுக்காக நேற்று தோசை பண்ணிக் கொடுத்தேன். தோசைக்கு சைட் டிஷ் ஆக தக்காளிச் சட்னி, மிளகாய்ப் பொடினு இருந்தாலும், வந்திருக்கிறவங்கள்ளே ஒருத்தர் திடீர்னு சாம்பார் இருந்தாத் தான் சாப்பிடுவேன்னு ஸ்டிரைக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;நாம தான் அஞ்சா நெஞ்சி, எதுக்கும் கலங்காதவங்க, திடீர்னு வர எதிர்ப்புக்களையும் சவாலே சமாளினு சமாளிக்கிறவங்கனு அவங்களுக்குத் தெரியலை. பாவம்! ஒரு பிடிவாதப்புன்னகையோடு, "இப்போ என்ன பண்ணுவே?" னு பார்த்துட்டு தோசையைத் தொடாமலேயே உட்கார்ந்துட்டாங்க. அசரலையே! ஒரு சின்ன எலுமிச்சம்பழம் அளவு புளியைக் கோது இல்லாமல் சுத்தம் செய்து, அதோடு ஒரு தக்காளியையும் வைத்து, சாம்பார்பொடி ஒரு ஸ்பூன், கொஞ்சம் பச்சையாக கொத்துமல்லி விதையையும் வைத்து நல்ல நைஸாய் அரைக்கணும். வெங்காயம் சேர்க்கிறவங்க இதோடு சின்ன வெங்காயமாய் இருந்தால் ஒரு இரண்டும், பெரிய வெங்காயம் என்றால் நாலாய் நறுக்கியதில் கால் பாகமும் சேர்த்து அரைக்கவும். வெங்காயம் வேண்டாம்கிறவங்க முதல்லே சொன்னாப்போல் அரைச்சாப் போதும். ஆச்சா????&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ வெற்றி உங்களுக்கே. உங்க முறை வருது, ஜெயிக்க. அடுப்பில் சாம்பார் வைக்கும் பாத்திரத்தை அல்லது ஒரு கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் தாளிக்க விடவும். ,முன்னதாக வேண்டிய காய்களை வெட்டி வைத்துக் கொள்ளவும். இந்த சாம்பாருக்குத் தேவையான காய்கள் முருங்கைக் காய் ஒரு இரண்டு மூன்று துண்டு, குடமிளகாய் ஒன்று, கத்திரிக்காய் சின்னதாய் ஒன்று இருந்தால் போதும், இது எதுவும் இல்லையா? கவலையே வேண்டாம். வெங்காயம், தக்காளியையே நறுக்கி வச்சுக்கவும். எண்ணெயில் கடுகு, மெந்தயம், பெருங்காயம் போட்டு வெடிச்சதும் ப.மிளகாய் ஒன்று, மிளகாய் வத்தல் ஒன்று, கருகப்பிலை போட்டு, கூடவே காய்களையும் போட்டு வதக்கி இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடியையும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும் போட்டு நன்றாய் வதக்கவும். அரைச்சு வச்சதைக் கொட்டித் தேவையான உப்பையும் போட்டுக் கொதிக்க விடவும். பொடியை எண்ணெயில் வறுத்துட்டதால் சீக்கிரமாய்க் கொதிச்சதும் உபயோகிக்க வசதியாய் இருக்கும். இப்போ ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவை அரை கிண்ணம் தண்ணீர் விட்டுக் கரைச்சு கொதிக்கும் சாம்பாரில் விடவும். நன்றாய்ச் சேர்ந்து கொதித்ததும், கீழே இறக்கிக் கொத்துமல்லித் தழை தூவி சாம்பாரை சூடான இட்லி, அல்லது தோசையோடு சேர்த்துச் சாப்பிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பருப்பில்லை என்பதை நீங்களே சொன்னால் தவிர யாரும் நம்ப மாட்டாங்க. அதனால் சொல்லாதீங்க. அட, இவ்வளவு சீக்கிரம் சாம்பார் வச்சாச்சானு கேட்டால், வெற்றிப் புன்சிரிப்பு மட்டும் சிரிக்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;நானானி, உங்க ஐடம் நாளைக்கு வருது, ஓகேயா???&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-5251808090273848175?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/5251808090273848175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=5251808090273848175' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/5251808090273848175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/5251808090273848175'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/06/blog-post.html' title='பருப்பில்லாத ஹோட்டல் சாம்பார் வேணுமா?'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SiTaDE--H8I/AAAAAAAAAQU/7ltIYWr4Jxc/s72-c/200px-Gntidli.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-6738420820354111789</id><published>2009-05-31T23:19:00.000-07:00</published><updated>2009-05-31T23:41:33.888-07:00</updated><title type='text'>வெங்காயம் பிடிக்குமா? பிடிக்காதா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SiNy92aSHxI/AAAAAAAAAP0/5uC28N63aPo/s1600-h/images.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 116px; height: 118px;" src="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SiNy92aSHxI/AAAAAAAAAP0/5uC28N63aPo/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5342239989894881042" /&gt;&lt;/a&gt;கொண்டைக்கடலை மூணு நாளா ஊறிட்டு இருக்கு. இந்த வெயில்லே ரொம்ப ஊற வைச்சாலும் வீணாயிடும். ஆகவே நல்லா அலசுங்க. அலசும்போது உங்க மாமியார், மாமனார், நாத்தானார், மச்சினர் ஆகியவங்களை அலசறாப்போல நினைச்சுக்கவும். நல்லாத் தண்ணீர் விட்டு அலசுவீங்க உங்களை அறியாமலேயே. அப்புறமா கொஞ்சம் கொண்டைக்கடலையை எடுத்துத் தனியா வைக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் ஊறிய கடலை இருக்கலாம். மிச்சம் கடலையைக் குக்கரில் வேகவைக்கவும். உ.கி. போடணும்னா அதையும் சேர்த்தே வேக வைக்கவும். இப்போ முதல்லே வெங்காயம் சேர்க்காமல் செய்யற விதம் பார்க்கலாம். சிலருக்கு வெங்காயமே பிடிக்காது. சிலர் சேர்க்கவே மாட்டாங்க. ஆகவே முதல்லே அதைப் பார்க்கலாம். எங்க வீட்டிலே எப்போவுமே இரு முறைகளும் உண்டு. வெங்காயத்துக்கு ஓட்டுப் போடும் உறுப்பினர்களும், வெங்காயத்தைக் கண்டாலே ஓடும் நபர்களும் இருக்காங்க. ஆகவே இரண்டுமே கட்டாயமாய்ச் செய்யப் படும். &lt;br /&gt;&lt;br /&gt;கால் கிலோ கொ.கடலை வேக வைச்சது, பெரிய உ.கிழங்கு ஒன்று வேக வைச்சு உதிர்த்துக் கொள்ளவும். &lt;br /&gt;&lt;br /&gt;தேவையான மசாலாப் பொருட்கள்: மசாலானதும் எல்லாரும் என்னவோ தவிர்க்க வேண்டியதுனு நினைக்காதீங்க. சும்மா மிளகாய்ப் பொடியும், தனியாப் பொடியும் போட்டால் கூட அதுவும் மசாலா தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அரைக்க: பச்சை மிளகாய்: இரண்டு, கொத்துமல்லித் தழை ஒரு கைப்பிடி, இஞ்சி, ஒரு துண்டு, ஏலக்காய் இரண்டு, கிராம்பு இரண்டு அல்லது மூன்று, தக்காளி நல்ல சிவந்த தக்காளி இரண்டு.இத்தோடு ஊற வைத்து எடுத்து வச்சிருக்கும் கொ.கடலை ஒரு டேபிள் ஸ்பூனையும் சேர்க்கணும். தேங்காய், (விருப்பப் பட்டால்). மாதுளம் விதையும், விரும்பினால்.&lt;br /&gt;&lt;br /&gt; புளி ஒரு நெல்லிக்காய் அளவு, வெல்லம் ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள்(விருப்பப் பட்டால்),  ஜீரகம் வறுத்துப் பொடி செய்த தூள் ஒரு டீ ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ மேலே சொன்ன பொருட்களில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் தவிர மற்றவற்றை நன்றாய் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். ஜீரகம் மட்டும் தாளிக்கவும். பின் மஞ்சள் தூள், மி.தூள், மல்லித் தூள் சேர்த்து, அதோடு அரைத்த கலவையையும் சேர்த்து நன்றாய் எண்ணெய் பிரிந்து வரும் வரைக்கும் வதக்கவும். எண்ணெய் பிரிய ஆரம்பிச்சதும், கொ.கடலையைச் சேர்க்கவும். பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி, உ.கிழங்கையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து தளதள வெனக் கொதித்து வரும்போது வெல்லம் சேர்க்கவும். நன்கு கெட்டியானதும், இறக்கி ஜீரகத் தூளைச் சேர்த்துவிட்டுப் பின் பச்சைக் கொத்துமல்லித் தழைகளைப் பொடிப் பொடியாய் நறுக்கிச் சேர்க்கவும். வெங்காயமோ, பூண்டோ இல்லாத கொ.கடலை மசாலா தயாராகிவிட்டது. சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க. அப்புறமா வெங்காயம் சேர்த்துப் பண்ணிப் பார்ப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-6738420820354111789?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/6738420820354111789/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=6738420820354111789' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/6738420820354111789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/6738420820354111789'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/05/blog-post_31.html' title='வெங்காயம் பிடிக்குமா? பிடிக்காதா?'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SiNy92aSHxI/AAAAAAAAAP0/5uC28N63aPo/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-5999282125187579024</id><published>2009-05-29T18:25:00.000-07:00</published><updated>2009-05-29T18:46:57.577-07:00</updated><title type='text'>இன்னிக்கு வீக் எண்ட் டிபன் என்ன?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SiCQAaedkuI/AAAAAAAAAPs/-qaHS1iBKsQ/s1600-h/images.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 127px; height: 93px;" src="http://1.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SiCQAaedkuI/AAAAAAAAAPs/-qaHS1iBKsQ/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5341427494842897122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ரொம்ப நாட்கள் ஆச்சு, சமையலறைப்பக்கம் வந்து. இப்போ என்ன சமைக்கலாம்? சொல்லுங்க. காலம்பர நேரம் இந்தியாவிலே. அதனாலே காலை ஆகாரத்துக்குச் சமைப்போமா?? யு.எஸ். மற்ற வெளிநாட்டுக் காரங்களும் தெரிஞ்சு வச்சுக்கோங்க. உங்க நேரத்துக்குச் செய்துக்கலாம். ஓகேயா??&lt;br /&gt;&lt;br /&gt;பூரி செய்யலாமா? சிலர் காலம்பர நேரம் எண்ணையானு சொல்றாங்க. காதிலே விழுது. ராத்திரி செய்தாலும் அப்போவும் ஒத்துக்குமா?? யோசிங்க. காலம்பர தான் நல்லது. சாப்பிட்டுட்டு நாள் பூரா ஏதானும் வேலை செய்வோம். அப்போ ஜீரணம் ஆகாதா? ரெடியாகிக்கோங்க. வயிறு காலியா இருக்கட்டும். பூரி செய்ய ரங்கமணிகளைத் தயார் செய்யுங்க. சாப்பிட தங்கமணிகள் தயார் ஆகுங்க. முதலிலேயே மாவு பிசைய வேண்டாம். முதலில் தொட்டுக்க என்ன செய்யறதுனு ஒரு சின்ன கலந்துரையாடல் செய்து முடிவு பண்ணுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது எல்லார் கருத்தையும் கேட்டுக்கணும். கடைசியிலே உங்க முடிவை வெளியே சொல்லாமல், அதுப்படி பண்ணிடணும். ஓகேயா?? இன்னிக்கு என்னோட முடிவு பூரியும், தொட்டுக்க உருளைக்கிழங்கு மசாலாவும். மசாலானதும் ஐயே எனக்கு வேண்டாம்னு ஓட வேண்டாம். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா பேரு தான் மசாலா. வெங்காயம் கூட வேணும்னா சேர்த்துக்கலாம். வெங்காயம் சாப்பிட மாட்டீங்கனா அதுவும் வேண்டாம். ஓகேயா?? மனசு சமாதானம் ஆயிடுச்சா?&lt;br /&gt;&lt;br /&gt;உ.கி. கால் கிலோவாவது வேண்டும். வெங்காயம் சேர்த்தால் 4 பேருக்கு இது போதும். வெங்காயம் கால் கிலோ. இரண்டு பச்சை மிளகாய். கருகப்பிலை. இஞ்சி ஒரு சின்னத் துண்டு.உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, தாளிக்க ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய். கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளிக்க ஒரு ஸ்பூன் எல்லாவற்றிலும், முதல்லே வெங்காயம் போடாமல் பண்ணும் விதம் பார்ப்போமா? ஏன்னா இன்னிக்கு சனிக்கிழமை, வெங்காயமா? அப்படினு அங்கே யாரோ பல்லைக் கடிக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;உ.கி. 4 பேருக்கு பெரிய கிழங்காக 3 அல்லது 4 நன்கு குழைய வேக வைக்கவும். குக்கரோ, அப்படியே வேக வைப்பீங்களோ அது உங்க இஷ்டம், இதெல்லாம் சொல்லணுமா என்ன? குழைய வேக வைச்ச உ.கி.யை எடுத்து உதிர்த்து, அதில் தேவையான உப்பு, ம.பொடி, பெருங்காயப் பொடி போட்டுக் கலந்து வச்சுக்கோங்க. அடுப்பில் (ஆமாம், ஆமாம், அடுப்பை மூட்டிட்டுத் தான் இதெல்லாமா சொல்லிட்டு இருப்பாங்க?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்) கடாயை வச்சு, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு போடவும் பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கவும், கருகப்பிலையும் போடவும். எல்லாம் சிவந்து வந்ததும், கலந்து வைத்த உ.கியைப் போட்டு, விருப்பம் இருந்தால் தக்காளி ஒன்றையும் சேர்க்கவும். தக்காளி ஆப்ஷனல். பின்னர் ஒரு சின்னக் கிண்ணம் நீர் சேர்க்கவும். சேர்ந்து கொதித்து வந்ததும், கீழே இறக்கிப் பொடிப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைச் சேர்க்கவும். இப்போ வெங்காயம் போடாத உ.கி. மசாலா பூரிக்குத் தயார். &lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம் போடும் முறையில் மற்றது எல்லாம் மேற்கண்டவாறே. தாளிக்கும்போது கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, ப.மி, இஞ்சி சேர்த்துக் கருகப்பிலையோடு வெங்காயத்தையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும்வரை வதக்கி விட்டுப் பின்னர் உருளைக்கிழங்குக் கலவை சேர்க்கணும். இதற்குத் தக்காளியே வேண்டாம். இப்போ மசாலா ரெடி. அடுத்து பூரி. &lt;br /&gt;&lt;br /&gt;அடுப்பிலே பூரி பொரிக்கத் தேவையான எண்ணெயை வைத்துவிடவும். என்ன ஆச்சரியமா இருக்கா?? ஆமாம், பூரிக்கு அப்படித் தான் செய்யணும். ஆச்சா??? இப்போ எண்ணெய் காய வைக்கணும், அதே சமயம் எண்ணெய் அதிகமும் காயக் கூடாது/ புரிஞ்சதா? ஆகவே அடுப்பு நெருப்பை மிதமான எரிச்சலில் வைக்கணும். எண்ணெய் காயட்டும். அதுக்குள்ளே வேறே யாரையானும் நீங்க காயாதீங்க. &lt;br /&gt;&lt;br /&gt;தேவையான அளவு கோதுமை மாவு. அரை கிலோ கோதுமை மாவுனா அதுக்குத் தேவையான உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் அஸ்கா சர்க்கரை, இரண்டு டேபிள் ஸ்பூன் பாம்பே ரவை(சன்னரவை) எல்லாம் கலந்து கொஞ்சம், கொஞ்சமாய் நீர் தெளித்துப் பிசையவும். மாவு நல்லா ஒரு பந்து போல் வரும்வரைக்கும் பிசையணும். நல்லாப் பிசைந்ததும், சின்னச் சின்ன உருண்டைகளாய் உருட்டிக் கொண்டு சப்பாத்திக் கல்லில் போட்டுப் பூரி எந்த அளவிற்கு வரணும்னு நினைக்கறீங்களோ அந்த அளவிற்கு இட்டுக் கொண்டு காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். பூரி இரண்டு பக்கமும் உப்பிக் கொண்டு, (யாரானும் அடிச்ச உங்க கன்னம் வீங்குமே அதைவிடப் பெரிசா உப்பும்) நல்லா வரும். இந்த மாதிரி உப்பிக் கொண்டும் எண்ணெய் குடிக்காமலும் வரதுக்காகத் தான் எண்ணெயை வச்சுட்டு மாவு பிசையணும், சர்க்கரை, ரவை சேர்க்கணும். பூரியை எஞ்சாய் பண்ணிட்டுச் சொல்லுங்க, எப்படி இருந்ததுனு வர்ட்டாஆஆஆஆஆஆஆஆ???&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இப்போ எல்லாம் நாகரீகமான உணவாய்ச் சொல்லப் படும் பூரியோடு சேர்த்து உண்ணப் படும் சனா மசாலா/ எப்படினு பார்ப்போமா??? சனாவை ஊற வைங்க. நல்லா ஒரு நாள் ஊறட்டும். அப்போத் தான் மிருதுவா இருக்கும். அப்புறமாச் செய்யலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-5999282125187579024?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/5999282125187579024/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=5999282125187579024' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/5999282125187579024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/5999282125187579024'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/05/blog-post_29.html' title='இன்னிக்கு வீக் எண்ட் டிபன் என்ன?'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SiCQAaedkuI/AAAAAAAAAPs/-qaHS1iBKsQ/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-8481310106984825175</id><published>2009-05-25T18:11:00.000-07:00</published><updated>2009-05-25T18:13:21.445-07:00</updated><title type='text'>சமையல் ரகசியங்கள் வந்துட்டே இருக்கே!</title><content type='html'>ரொம்ப நாளாச்சு சமைச்சு, திவா கேட்டார், ரகசியமா வச்சிருக்கீங்கனு. ரகசியம் எல்லாம் எதுவும் இல்லை. நேரம் இல்லை எழுதியதை அப்லோட் செய்ய. அதோடு உடம்புக்கும் வந்துடுச்சு. இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாவது கவனிக்கணும். பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-8481310106984825175?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/8481310106984825175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=8481310106984825175' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/8481310106984825175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/8481310106984825175'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/05/blog-post.html' title='சமையல் ரகசியங்கள் வந்துட்டே இருக்கே!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-4152313376365858167</id><published>2009-04-13T02:08:00.000-07:00</published><updated>2009-04-13T02:21:11.333-07:00</updated><title type='text'>புத்தாண்டு வாழ்த்துகள், சமைக்கும் அனைவருக்கும்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SeMDyOZ4AcI/AAAAAAAAAMA/kAdUHICO6W8/s1600-h/images.jpg%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 124px; height: 93px;" src="http://2.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SeMDyOZ4AcI/AAAAAAAAAMA/kAdUHICO6W8/s320/images.jpg%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5324103345877025218" /&gt;&lt;/a&gt;வேப்பம்பூப் பச்சடி செய்யலாமா இப்போ? இந்தப் புத்தாண்டுத் தொடக்கத்திலே தான் வேப்பம்பூப் பச்சடி செய்வாங்க. மற்ற நாட்களிலே வேப்பம்பூ ரசம், அல்லது பொடி செய்து போட்டுப் பிசைந்து சாப்பிடறதுனு இருக்கும். சில வீடுகளிலே ஊரிலே எங்கேயாவது அம்மை போட்டிருந்தால் வேப்பம்பூ பொரிக்க மாட்டாங்க. கிராமங்களிலேயும், சிறிய ஊர்களிலேயும் மட்டுமே இது பார்க்க முடியும். மற்ற இடங்களில் கொஞ்சம் கஷ்டம் தான். அந்த அம்மன் காப்பாத்துவா. &lt;br /&gt;&lt;br /&gt;வேப்பம்பூவுக்குத் தனி மணம் உண்டு தெரியுமா? காலையிலே எழுந்ததும், சுமார் 4 மணியில் இருந்து 4-30 அல்லது ஐந்து மணிக்குள்ளே வேப்ப மரத்தடியிலே நின்னு மூச்சை உள்ளே இழுத்து ஆழ்ந்து சுவாசிங்க வேப்பம்பூவின் மணம் நாடி, நரம்பிலெல்லாம் பரவும். இப்போ ஜன்னலுக்கு வெளியே கீழே வேப்பம்பூ கொட்டிக் கிடக்கு. முன்னே எல்லாம் கொஞ்சம் சுத்தமாய் இருக்கும், நிறைய எடுத்து வைச்சுக்குவோம். இப்போ அசோகா விதைகளும் விழுந்து சுத்தமே செய்ய முடியலை. :(((( என்ன செய்யறது. ஓரளவு சுத்தமான வேப்பம்பூவை எடுத்துக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வேப்பம்பூ வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பச்சடியை இருவிதமாய்ச் செய்யலாம். ஒன்று புளி சேர்த்து. தஞ்சை ஜில்லாவில் புளி சேர்த்தே அதிகம் செய்வாங்க. மற்றது மாங்காய் சேர்த்து.  மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் மாங்காய் சேர்த்தே செய்வாங்க. சிலர் இரண்டும் கலந்துக்கிறாங்க. அது எப்படி இருக்கும்னு தெரியலை. இப்போ ஒண்ணொண்ணாய்ப் பார்ப்போமா??&lt;br /&gt;&lt;br /&gt;மாங்காயைத் தோல் சீவிப் பொடிப் பொடியாய் நறுக்கி ஒரு கிண்ணம் நீர் சேர்த்து வேக வைக்கவும்.வேக ஆரம்பிச்சதும் கொஞ்சம் போல் உப்புச் சேர்க்கவும். நன்று வெந்ததும், மாங்காய்க் குழம்பில் கொஞ்சம் போல மிளகாய்த் தூள்(இது தேவையானால் மட்டும்) சேர்க்கவும். பின்னர் வெல்லம் பொடித்து அதில் சேர்க்கவும். வெல்லம், மிளகாய்த் தூள் எல்லாம் சேர்ந்து நன்றாய்க் கொதித்து சேர்ந்து வரும்போது ஏலக்காய் சேர்த்துக் கீழே இறக்கவும்.  வாணலியில் நெய்யைக் காய வைத்துஅதில் சுத்தம் செய்த வேப்பம்பூவைப் போட்டுப் பொரிக்கவும். பச்சடியில் சேர்க்கவும். மாங்காய்ப் பச்சடி வேப்பம்பூ சேர்த்துத் தயார். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்துப் புளி சேர்த்து: புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்துக் கரைக்கவும். அதில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வாசனை போகக் கொதிக்கும் போது வெல்லம் சேர்க்கவும். நன்று கெட்டியானதும் கீழே இறக்கி ஏலக்காய் சேர்த்து, முன் சொன்ன மாதிரியே வேப்பம்பூவை நெய்யில் பொரித்துச் சேர்க்கவும். வேப்பம்பூப் பச்சடி தயார். &lt;br /&gt;&lt;br /&gt;படம் உதவி கூகிளார்: கபீரன்பன் வந்து வேப்பம்பூப்  பச்சடியை பனோரமாவிலே ஏன் போடலைம்பார். அதனால் முன்னாலேயே சொல்லிடறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-4152313376365858167?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/4152313376365858167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=4152313376365858167' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/4152313376365858167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/4152313376365858167'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/04/blog-post_13.html' title='புத்தாண்டு வாழ்த்துகள், சமைக்கும் அனைவருக்கும்!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SeMDyOZ4AcI/AAAAAAAAAMA/kAdUHICO6W8/s72-c/images.jpg%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-5177916907218257672</id><published>2009-04-11T00:27:00.000-07:00</published><updated>2009-04-11T00:31:01.279-07:00</updated><title type='text'>மழை கொட்டணுமா? நான் உதவிக்கு வரேன்!</title><content type='html'>உங்க ஊரிலே மழையே இல்லையா? உடனே அணுகவும், என்னை. நான் மனசாலே நினைச்சாலே போதும், வத்தல் போடவோ, வடாம் போடவோ. சுட்டெரிக்கும் சூரியனை மறைத்துக் கொண்டு எழுந்திருக்கும் மழை மேகங்கள். வாநிலை அறிக்கையே நம்மைக் கேட்கலாமானு யோசிக்கிறாங்க. ரெண்டு நாளா நினைச்சேன் குழம்பு கறிவடாம் செய்யலாமா? அப்படியே மழை வந்தாலும் அந்த மாவை வடையாத் தட்டிச் சாப்பிடலாம்னு. வங்கக் கடலின் ஏதோ ஒரு மூலையில் இருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்துக்குச் செய்தி போய், உடனேயே கடலோர மாவட்டங்களில் மழையைப் பொழிய வைத்து, என்னோட திட்டத்தைத் தள்ளிப் போட்டுவிட்டது. இனி மீண்டும் வெய்யில் சுட்டெரிக்கும்போது பார்ப்போம் அடுத்த திட்டத்துடன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-5177916907218257672?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/5177916907218257672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=5177916907218257672' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/5177916907218257672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/5177916907218257672'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/04/blog-post.html' title='மழை கொட்டணுமா? நான் உதவிக்கு வரேன்!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-846379265378724381</id><published>2009-03-22T01:35:00.000-07:00</published><updated>2009-03-22T19:29:09.414-07:00</updated><title type='text'>பாகற்காயில் பிட்லை சாப்பிடணுமா!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/ScbzhrmoZEI/AAAAAAAAALY/T2twT4aAD6U/s1600-h/images.jpgbittergourd.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 130px; hehttp://www.blogger.com/img/blank.gifight: 114px;" src="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/ScbzhrmoZEI/AAAAAAAAALY/T2twT4aAD6U/s320/images.jpgbittergourd.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5316204170123437122" /&gt;&lt;/a&gt;இந்த சூடான் புலி, எங்கே இருந்து இது எல்லாத்தையும் பார்க்கிறார்னு புரியலை, உடனே வந்து பின் ஊட்டம் கொடுக்கிறார். ஏற்கெனவே நான் வீக் கொஞ்சம். ஊட்டம் தேவைனு மருத்துவர் சொல்லிட்டே இருக்கார். ஆகவே உங்க பின் ஊட்டம் இன்னும் தெம்பா இருக்கும் எனக்கு. இப்போப் பாகற்காய் பிட்லை எப்படிச் செய்யறதுனு பார்ப்போமா? புலி கேட்டிருக்காரே, அவருக்காகத் தான் இதை இப்போப் போடறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு முதலில் தேவையானது பாகற்காய் தாங்க. பாகல்காய் ஒரு கால் கிலோ எடுத்துக்கோங்க. நல்லா வில்லை, வில்லையா நறுக்கணும். வில்லைனதும் ராமரோட வில் நினைவில் வந்தால் நான் பொறுப்பில்லை. வட்ட, வட்டமாய் நறுக்கணும். இந்தப் பாகல்காயே இரண்டு, மூன்று விதம் இருக்கு. பொதுவா எல்லாரும் பெரிய பாகல் காய் தான் வாங்குவாங்க. ஆனால் மெது பாகல்காய்/மிதி பாகல் காய்னு ஒண்ணு இருக்கு. மிதி பாகல்காய்னதும் ம.பா.வை மிதிக்கிறதோனு நினைக்கவேண்டாம். வேலி பாகல்காய்னு ஒண்ணு இருக்கு. சின்ன பாகல்காய்னால் அதைக் காம்பு மட்டும் நறுக்கி இரண்டாய்ப் பிளந்து வச்சுக்கணும். வேலி பாகல் காயிலேயே மீடியம் சைஸா இருந்தால் வில்லை போட்டுக்கலாம். வில்லையும் போட்டுக்கலாம். உங்க இஷ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;நறுக்கின பாகல் காயில் கொஞ்சம் தயிர், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொஞ்ச நேரம் வைக்கவும். ஒரு மணி நேரம் வைக்கலாம். அதுக்குள்ளே நீங்க இரண்டு மெகா சீரியலும் பார்த்துக்கலாம். மெகா சீரியல் முடிஞ்சதும் ம.பா. இருந்தார்னா நல்லது. இல்லாட்டி நீங்களே தான் சமைச்சாகணும். து.பருப்பு ஒரு சின்ன கிண்ணம் எடுத்துக்கணும். குக்கரிலேயோ, கல்சட்டியிலேயோ து.பருப்பை நல்லாக் குழைய வேக வச்சுக்கணும். முதல்நாளே மொச்சை, கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவற்றில் எது பிடிக்குதோ அதை ஊற வைச்சுக்கலாம். அதையும் பருப்போடு சேர்த்து வேக வைச்சுக்கலாம். இது எல்லாம் தனியாத் தெரியணுமானால் அப்புறமாய்ப் போடலாம். உங்களுக்குப் பிடிக்காது ம.பா.வுக்கு மட்டுமே பிடிக்கும்னா போடாமலும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ பாகல் காய் தயார். து.பருப்பு தயார். கொ.கடலை., மொச்சை தயார். இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ மசாலா சாமான்கள் வறுத்துக்கணும். மசாலான்னாலே எல்லாரும் கரம் மசாலா ஒண்ணுதான் நினைச்சுக்கறாங்க. நாம போடற உப்பு, காரமே மசாலாவோட சேர்த்தி தான். டூ இல்லை. நீங்க தயார் செய்யப் போற பிட்லை 4 பேர் சாப்பிடலாம்னு வச்சுக்குங்க. (பின்னே? யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்னு எல்லாருக்கும் கொடுக்கவேண்டாமா?) ஒரு சின்ன எலுமிச்சம்பழ அளவுப் புளி, 4ல் இருந்து 6 மி.வத்தல். (காரம் அவங்க, அவங்க ருசிக்குத் தகுந்தாற்போல்) ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, (இது போடாமலும் செய்யலாம்) கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன், உ.பருப்பு ஒரு ஸ்பூன், 5 அல்லது 6 மிளகு, ஒரு சின்னக் கட்டிப் பெருங்காயம், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் போன்றவற்றை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வறுத்துக் கொள்ளணும். &lt;br /&gt;&lt;br /&gt;நல்லா சிவப்பா, உங்களுக்குக் கோபம் வந்தால் மூஞ்சி எப்படிச் சிவக்குமோ அவ்வளவு சிவப்பா வறுத்துக்கலாம். வறுத்ததை ஆற விடவும். அதே வாணலியில் தயிர், உப்பு, ம.தூள் சேர்த்து ஊற வைத்த பாகல்காயைப் போட்டுச் சற்றே வறுக்கவும். தயிரை எல்லாம் பிழிஞ்சு எடுத்துட்டுத் தான். ம.பா.வை வேலை வாங்கப் பிழிஞ்சு எடுக்க மாட்டோமா? அல்லது மாமியாரோ, நாத்தனாரோ அகப்பட்டால் பிழிஞ்சு எடுக்க மாட்டோமா அதே மாதிரித் தான். மிச்சம் இருக்கும் தயிரை ஜூஸுனு சொல்லி ம.பா.கிட்டேயே கொடுக்கலாம் வீணடிக்காமல். நம்ம ம.பா. கிட்டே இதெல்லாம் பலிக்கலை, தோட்டத்துக் கறிவேப்பிலை தான் சாப்பிட்டுட்டு இருக்கு அந்த மாதிரி பிழிஞ்சதும் மிச்சம் இருக்கும் தயிரை எல்லாம்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/ScbzdjS25oI/AAAAAAAAALQ/izkE60E6o_s/s1600-h/images.jpgpitlai.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 130px; height: 103px;" src="http://1.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/ScbzdjS25oI/AAAAAAAAALQ/izkE60E6o_s/s320/images.jpgpitlai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5316204099173541506" /&gt;&lt;/a&gt;இப்போ வதக்கிய பாகல்காயை வேக வைத்த துவரம்பருப்போடு சேர்க்கவும். புளியைக் கரைத்து அதில் ஊற்றவும். நாலு பேருக்கு வருமானு பார்த்துக்கோங்க. உப்பு, ம.பொடி சேர்க்கவும். இது கொஞ்சம் கொதிக்கட்டும். அதுக்குள்ளே வறுத்து வைச்சதையெல்லாம் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். நல்லா ஒரு கொதி வந்ததும், அரைச்சு வச்சதைக் கலக்கவும். நல்லாக் கொஞ்ச நேரம் கொதிக்கட்டும். ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம். சேர்க்காமலும் இருக்கலாம். அது உங்களுக்கு டயபடீஸ் இருக்கா இல்லையாங்கறதைப் பொறுத்து. கீழே இறக்கி வைத்துத் தேங்காய் எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, ஒரே ஒரு மி.வத்தல், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பச்சைக் கொத்துமல்லியும் போடலாம். சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: படங்கள் உதவி: கூகிளார். திடீர்னு பாகற்காய் பிட்லை படம் போடணும்னா என்ன செய்யறது? அதான் கூகிளாரைக் கேட்டதும் கொடுத்துட்டார். நன்றிங்கோ!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-846379265378724381?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/846379265378724381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=846379265378724381' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/846379265378724381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/846379265378724381'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/03/blog-post_22.html' title='பாகற்காயில் பிட்லை சாப்பிடணுமா!'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/ScbzhrmoZEI/AAAAAAAAALY/T2twT4aAD6U/s72-c/images.jpgbittergourd.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-7929197425991578483</id><published>2009-03-15T07:56:00.000-07:00</published><updated>2009-03-15T08:09:29.800-07:00</updated><title type='text'>என்ன?? யாரையுமே காணோம்?</title><content type='html'>கொழுக்கட்டையிலே ஆரம்பிச்சதா என்னனு தெரியலை, யாருமே இதுக்கு பதிலே போடலை, எல்லார் வாயிலேயும் இன்னும் கொழுக்கட்டை இருக்கு போலிருக்கு. இப்போ ஒரு முக்கியமான விஷயம் சொல்லணுமே! அது தான் இந்த ராத்திரி வேளையிலேயும் கடமை தவறாம எழுதிட்டு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி எந்த அரிசியா இருந்தாலும் கொஞ்சம் வறுக்கணுங்க. என்ன?? என்ன?? ம.பா.வைத் தான் வறுக்கத் தெரியுமா? அது பாட்டுக்கு அது. நல்லா வறுத்தெடுங்க. கூடவே அரிசியையும், ஆனால் இதை நல்லா வறுக்கக் கூடாது. கொஞ்சம் சூடு வரப் புரட்டி எடுக்கணும். ம.பா. உங்களுக்குத் தெரியாமல் சினிமா,கினிமா போயிட்டு வந்தார்னு வச்சுக்குங்க. அந்த சினிமாவும் உங்களுக்குப் பிடிக்காத நடிகர்தான்னும் தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்க. இருந்தாலும் சும்மாவானும் கொஞ்சமே கொஞ்சமாவது பிகு காட்ட மாட்டீங்களா?அந்த மாதிரி லேசா வறுக்கணும். முடிஞ்சால் ம.பா.வையே வறுக்கச் சொல்லிடுங்க. சினிமா போயிட்டு வந்ததுக்குத் தண்டனையாவும் இருக்கும். கொழுக்கட்டை சரியா வரலைனா, அவராலேதான்னு சொல்லிடலாம். எப்படி ஐடியா? &lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம்பூரணம்: இது உழுந்தா, இல்லை உளுந்தானே ஆராய்ச்சி இன்னும் முடியலை. அதைத் தனியா வச்சுப்போம். ஒரு கப் உளுந்தை ஊற வைச்சு, மிளகாய் வத்தல், பெருங்காயம், (பூரிக்கட்டையால் ம.பா.வைஅடிக்கும்போது  வருமே அந்தக் காயம் இல்லை) வாசனைக்குச் சேர்த்து உப்பும் தேவைக்கு ஏற்ப, (நீங்களும் சாப்பிடும் ஐடியா இருந்தால் உப்பைக் கொஞ்சம் கவனமாய்ச் சேர்க்கவும். அப்புறம் முனியம்மாவுக்குக் கொடுக்கிறதால் இருந்தால் எல்லாம் பெர்ஃபெக்டா இருக்கணும்.) அப்புறமா வாங்க மாட்டாங்கறதோட இல்லாமல், வேலை செய்யற மத்த வீடுங்களிலேயும் உங்க மானம் போயிடும். கவனம் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்தையும் அரைச்சீங்களா? அட, சொல்லலையா? எல்லாத்தையும் மிக்ஸியிலே போட்டு அரைக்கணும்ங்க. இப்போ எல்லாம் யாரு அம்மி, கல்லுரல்னு கட்டி அரைக்கிறாங்க?? அரைச்சதை ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி, இட்லிப் பானையில் வச்சு வேக வைக்கணும். வேகாத வெயிலில் போய் ம.பா.வைத் தேங்காய் வாங்கி வரச் சொன்னீங்களா இல்லையா? அந்த மாதிரி வேகாம இருந்துடப் போகுது. நல்லா வேகணும். ஒரு குச்சியால் குத்திப் பார்த்தீங்கன்னா, இங்கேயும் ம.பா.வே உதவிக்கு வருவார். கை சுடாமல் இருக்க அவரையே குத்திப் பார்க்கச் சொல்லலாம். என்ன?? வேலைக்குப் போயிடறாரா? இதெல்லாம் அவர் வீட்டிலே இருக்கும்போது வச்சுக்கணும், இல்லைனா லீவு போடச் சொல்லணும். உங்களை மீறி அவர் வேலைக்குப் போயிட முடியுமா? ஒட்டாமல், குச்சியில் தான், ஒட்டாமல் வந்ததும் எடுத்து, உதிர்த்து, (எவ்வளவு வேலை பாருங்க, இதுக்குத் தான் ம.பா. கூடவே இருக்கணும்) தாளிதம் செய்த வாணலியில் போட்டுப் புரட்டி வச்சுக்குங்க. ம.பா. மாட்டேன்னு சொன்னார்னா அவரைத் தனியாப் புரட்டி எடுத்துடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம் பூரணம் இப்போ ரெடி. மாவிலே கிண்ணங்கள் போல் சொப்புப் பண்ணி அதில் வைத்து மூடி, மறுபடி இட்லிப் பானையில் வேகவிட்டு வைக்கச் சொல்லுங்க. உங்க ம.பா.வை. அப்புறமா எல்லாக் கொழுக்கட்டையும் ரெடி ஆனதும் உங்க தோழிகளை அழைத்து, பெருமையாக் காட்டலாம். ஆனால் ஒண்ணு, மூச்சு விடக் கூடாது. ம.பா. தான் செய்தார்னோ, அவர் ஒத்தாசை இல்லைனா உங்களால் முடியாதுனோ. அலட்டிக்கணும் நல்லா, அப்புறம் கொழுக்கட்டை செய்யறதைப் பத்தி முடிஞ்சால் வகுப்பு எடுங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-7929197425991578483?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/7929197425991578483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=7929197425991578483' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/7929197425991578483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/7929197425991578483'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2009/03/blog-post.html' title='என்ன?? யாரையுமே காணோம்?'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-7996165575824046310</id><published>2008-12-29T23:54:00.000-08:00</published><updated>2008-12-30T03:05:47.556-08:00</updated><title type='text'>அடுத்து என்ன கொழுக்கட்டை??</title><content type='html'>இப்போ நாம் அரிசி மாவினால் தயாரிக்கப் படும் கொழுக்கட்டைகள் பத்தித் தெரிஞ்சுக்கலாமா?? முதல்லே அரிசி மாவைத் தயார் செய்துக்கணும். இதுக்கு ஐ.ஆர்.20 அரிசி தான் நல்லா வருது என்று என்னோட கருத்து. எதுவாய் இருந்தாலும் அரிசி, கொஞ்சம் பழைய அரிசியாய் இருந்தால் நல்லது. அப்போத் தான் கொழுக்கட்டை மிருதுவாய் இருக்கும். புது அரிசி என்றால் கொழுக்கட்டையை ஆறிப் போனதும் சாப்பிட முடியாது. 1/4 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு இது சுமார் ஒரு ஆழாக்குக்குக் கொஞ்சம் கூட இருக்கும். ஆகவே ஆழாக்கு அல்லது நீங்க எப்போவும் அரிசி அளக்கும் பாத்திரத்தால் ஒரு பங்கு அரிசி எடுத்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து ஒரு மணி நேரமாவது ஊற வைக்கவேண்டும். அரிசியை பவுடர் போல் மாவாக்கிக் கொள்வது என்றால், தண்ணீரை வடித்துவிட்டு அரிசியைச் சிறிது நேரம் வைக்கவேண்டும். அரிசியில் வடித்தது போக மிச்சம் தண்ணீர் இல்லாமல் இருக்கவேண்டும். அதை உங்கள் செளகரியம்போல் மிக்ஸியிலோ அல்லது மாவை உரலில் போட்டு இடித்தோ தயார் செய்து கொள்ளவும். எனக்கு அரிசியைத் தண்ணீர் விட்டு அரைத்து தோசை மாவு பதத்துக்கு வைத்துத் தயார் செய்வதே சரியாக இருக்கும். இது பழக்கம் உள்ளவர்கள் அரிசி ஊறினதுமே கொஞ்சம் ஜலம் விட்டு நல்ல நைசாக அரைத்துத் தோசை மாவு பதத்துக்கு வைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவு எப்படித் தயார் செய்து கொண்டாலும் சரி, உங்கள் செளகரியம்போல் செய்து கொள்ளலாம். மாவு பவுடராக இருந்தால் ஒரு கிண்ணம் மாவு இருந்தால் ஒரு கிண்ணம் அளவுத் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அடி கனமான வெங்கலப் பாத்திரமோ அல்லது கடாயோ நல்லது. ஒரு சின்ன ஸ்பூன் நல்லெண்ணெயும், ஒரு சிட்டிகை உப்பும் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும். ஒரு சின்னக் கிண்ணம் தண்ணீரைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது மாவைக் கொஞ்சம், கொஞ்சமாய்த் தூவிக் கொண்டே வந்து, கிளறவும். தண்ணீர் போதவில்லை என்றால் எடுத்து வைத்திருக்கும் வெந்நீரை விட்டுக் கொள்ளவும். மாவு பந்து மாதிரித் திரண்டு உருட்டித் தனியாக வரும். அப்படி வந்ததும், மாவைத் தனியாக ஒரு மெல்லிய துணியைப் போட்டு மூடி வைக்கவும். தண்ணீர் விட்டு அரைத்த மாவானால், வெங்கலப் பாத்திரத்தில் ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு, நல்லெண்ணெய், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்கும்போதே கரைத்த மாவை விட்டுக் கிளறவும், மாவு நன்றாய்த் திரண்டு வரும்போது எடுத்து ஆற வைக்கவும். &lt;a href="http://1.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SVoAJ1S1bLI/AAAAAAAAAHY/i0QJOyPdqXg/s1600-h/HZCAIHIJNVCAUG88QLCA05XYSRCABJMR1WCA3QOHKKCA30U75NCAK7N8CBCAN2H8BNCA1W64OBCA7XQYY1CA8ADYHHCAADQ1IWCASPVGYTCA42F91JCANBRTNNCA2EUZQ6CAC62KURCAZ4AHO9.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 124px; height: 95px;" src="http://1.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SVoAJ1S1bLI/AAAAAAAAAHY/i0QJOyPdqXg/s320/HZCAIHIJNVCAUG88QLCA05XYSRCABJMR1WCA3QOHKKCA30U75NCAK7N8CBCAN2H8BNCA1W64OBCA7XQYY1CA8ADYHHCAADQ1IWCASPVGYTCA42F91JCANBRTNNCA2EUZQ6CAC62KURCAZ4AHO9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5285537281597598898" /&gt;&lt;/a&gt;பூரணம் ஏற்கெனவே நாம் தயார் செய்த தேங்காய்ப் பூரணம் தவிர, எள்ளுப் பூரணம், உளுந்துப் பூரணம், கடலைப்பருப்புப் பூரணம் இவைதான் விநாயக சதுர்த்தி வழிபாடுகளுக்குச் செய்ய முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;எள்ளுப் பூரணம்:எள்ளைக் களைந்து வறுத்து, வெல்லத்தோடு சேர்த்துக் கொஞ்சம் தேங்காய்த் துருவலும், விருப்பம் இருந்தால் சேர்க்கலாம். ஏலக்காய் சேர்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடலைப்பருப்புப் பூரணம்: கடலைப்பருப்பை வறுத்து ஊற வைத்து வேக வைத்துவிட்டு, அரைக்கவும். வெல்லம் சேர்த்தும் அரைக்கலாம். அல்லது அரைத்துவிட்டுப் பின்னர் வெல்லம் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறலாம். தேவையானால் கொஞ்சம் தேங்காய் சேர்க்கலாம். தேங்காய்ப் பூரணம் தனியாய் இருப்பதால் விருப்பம் போல் சேர்க்கலாம். &lt;a href="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SVoAPBaicuI/AAAAAAAAAHg/BTQ83-QCdMw/s1600-h/imageskozhukattai.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 106px;" src="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SVoAPBaicuI/AAAAAAAAAHg/BTQ83-QCdMw/s320/imageskozhukattai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5285537370750481122" /&gt;&lt;/a&gt;இப்போது மாவை நன்றாய்ப் பிசைந்து கொண்டு சிறு, சிறு உருண்டைகளாய் உருட்டிக்கொண்டு, நெய்யும், நல்லெண்ணெயும் ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொண்டு அதைத் தொட்டுக் கொண்டு சிறிய சிறிய கிண்ணங்களாய் மாவைச் செய்து கொண்டு பூரணத்தை வைத்து மூடி வைக்கவும். பின்னர் இட்லித் தட்டு அல்லது, குக்கரில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, வேறொரு தட்டில் இலை அல்லது துணி போட்டு கொழுக்கட்டைகளை வைத்து வேக வைத்து எடுக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-7996165575824046310?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/7996165575824046310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=7996165575824046310' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/7996165575824046310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/7996165575824046310'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2008/12/blog-post_29.html' title='அடுத்து என்ன கொழுக்கட்டை??'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SVoAJ1S1bLI/AAAAAAAAAHY/i0QJOyPdqXg/s72-c/HZCAIHIJNVCAUG88QLCA05XYSRCABJMR1WCA3QOHKKCA30U75NCAK7N8CBCAN2H8BNCA1W64OBCA7XQYY1CA8ADYHHCAADQ1IWCASPVGYTCA42F91JCANBRTNNCA2EUZQ6CAC62KURCAZ4AHO9.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5212093255206216188.post-6737563226967351326</id><published>2008-12-27T00:42:00.001-08:00</published><updated>2008-12-27T01:07:32.030-08:00</updated><title type='text'>சமைக்கலாம் வாங்க</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SVXqlw70pLI/AAAAAAAAAEE/ErvOWph1FO0/s1600-h/mail+gopi.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 226px; height: 127px;" src="http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SVXqlw70pLI/AAAAAAAAAEE/ErvOWph1FO0/s320/mail+gopi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5284387672301020338" /&gt;&lt;/a&gt;ரொம்ப நாளாச் சமையல் பத்தி எழுதணும்னு ஆசை இருக்கு. ஆனால் அதைத் தனியா வச்சுக்கணும்னு இருந்தேன். இன்னிக்கு அமாவாசை , அனுமத் ஜெயந்தி. சனிக்கிழமை ஸ்திர வாரம். ஆகவே சமையலை ஆரம்பிச்சு எல்லாரையும் நல்லா பயமுறுத்தலாம்னு எண்ணம். முதல்லே பிள்ளையாருக்குத் தான். பிள்ளையாருக்குப் பிடிச்சது என்ன?? கொழுக்கட்டை தானே? ஆகவே முதலிலே பிள்ளையாருக்குப் பிடிச்ச கொழுக்கட்டையில் இருந்தே ஆரம்பிக்கலாமா? உங்கள் ஆலோசனைகளும், புதிய கண்டுபிடிப்புகளும் வரவேற்கப் படுகின்றன. இனி பயப் படாமல் படிக்கிறவங்களுக்காகப் பிள்ளையாருக்குக்கொழுக்கட்டை செய்யும் விதம் பற்றிய ஒரு விளக்கம்.&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;கொழுக்கட்டைகளில் பூரணத்தை மாவின் உள்ளே வைத்துச் செய்யப் படும் விதமும், மாவை வெல்லம், தேங்காய் சேர்த்துக் கிளறி உருண்டையாகப் பிடித்து வேக வைக்கும் விதமும், மைதாவிலோ, ரவையிலோ மாவு பிசைந்துகொண்டு பூரணத்தை உள்ளே வைத்து நெய் அல்லது எண்ணெயில் செய்யும் விதமும் ஆக மூன்று விதம் உண்டு. இப்போ முதலில் நாம் பார்க்கப் போவது நெய்க் கொழுக்கட்டை என்று சொல்லப் படும் மைதா அல்லது ரவையில் செய்வது தான்.&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;தேவையான பொருட்கள்: ரவை, (ரவைதான் நல்லது, நல்ல சன்னமான ரவையாக இருக்கவேண்டும்) 1/4 கிலோ, 50மில்லி லிட்டர் பால், ஒரு சிட்டிகை உப்பு. ரவையை லேசாக வறுத்துக் கொண்டு, சிட்டிகை உப்பைச் சேர்த்துக் கொண்டு, பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக அதில் கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவேண்டும். மாவைத் தனியே சிறிது நேரம் வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பூரணம் செய்யத் தேவையான பொருட்கள்: சிறிய தேங்காய் ஒன்று, வெல்லம் ருசிக்கு ஏற்ப, இது கொஞ்சம் பழக்கத்திலே தானே புரியும், என்றாலும் ஒரு சிறிய சாத்துக்குடி அளவுக்கு இருக்கலாம், நல்ல பாகு வெல்லமாக இருக்க வேண்டும், 4,5 ஏலக்காய்கள் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை உடைத்துத் துருவிக் கொள்ளவும். செதில்கள் விழாமல் பூப்போன்ற துருவலாய் இருந்தால் நல்லது. பின்னர் ஒரு கடாய் அல்லது வெங்கலப்பாத்திரத்தில் துருவலையும், வெல்லத்தைப் பொடிசெய்து போட்டும் கிளறவும். வெல்லமும், தேங்காயும் ஒன்றாய்ச் சேர்ந்து நல்ல உருட்டும் பதமாய் வரும்வரையில் கிளறவும். பின் பொடித்த ஏலக்காயைப் போட்டுவிட்டுச் சற்று ஆற வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்த ரவையை நன்றாக அழுத்திப் பிசைந்தால் இப்போது நன்கு சேர்ந்து மாவு ரவை தெரியாமல் கலந்து ரப்பர் போல் வந்திருக்கும். இதை மெல்லிய அப்பளங்களாய் இட்டுக் கொள்ளவும். ஒரு சிறிய தட்டு அல்லது மூடியால் வட்டமாய்க் கத்திரித்துக் கொண்டு, ஒரு சிறிய கரண்டியால் பூரணத்தை அந்த வட்டத்தில் இட்டு நிரப்பி, உங்களுக்குப் பிடித்த வகையில் மூடவும். இப்படி எல்லாப் பூரணத்தையும் மாவில் போட்டு மூடிக் கொழுக்கட்டைகளாய்ச் செய்த பின்னர், கடாயில் எண்ணெய் அல்லது நெய் வைத்து அவற்றைப் பொரித்து எடுக்கவேண்டும்.இவை கணபதி ஹோமத்துக்கெனத் தனியாகச் செய்யப் படும். சங்கடஹர சதுர்த்தி விரதத்துக்கும் இம்மாதிரிக் கொழுக்கட்டைகள் செய்து கோயிலில் நைவேத்தியத்துக்கோ, அல்லது ஹோமத்தில் சேர்க்கவோ கொடுக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5212093255206216188-6737563226967351326?l=geetha-sambasivam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://geetha-sambasivam.blogspot.com/feeds/6737563226967351326/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5212093255206216188&amp;postID=6737563226967351326' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/6737563226967351326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5212093255206216188/posts/default/6737563226967351326'/><link rel='alternate' type='text/html' href='http://geetha-sambasivam.blogspot.com/2008/12/blog-post.html' title='சமைக்கலாம் வாங்க'/><author><name>geethasmbsvm6</name><uri>http://www.blogger.com/profile/14798641644498617091</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Y97fbkEk8HQ/SVXqlw70pLI/AAAAAAAAAEE/ErvOWph1FO0/s72-c/mail+gopi.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry></feed>
